செய்திகள்

குழந்தைகள் இறப்புக்கு இந்திய இருமல் மருந்துகளே காரணம்! CDC அமெரிக்கா குற்றச்சாட்டு!

கார்த்திகா வாசுதேவன்

CDC எனப்படுவது அமெரிக்காவின் சென்ட்டர் ஃபார் டிசீஸ் கண்ட்ரோல் மற்றும் பிரிவென்சன் அமைப்பு ஆகும். இது சமீபத்தில் காம்பியா சுகாதார அதிகாரிகளுடன் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் காம்பியாவில் பல குழந்தைகள் இறப்புக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்களே காரணம் அது எச்சரித்துள்ளது.

CDC அறிக்கை...

இந்தியாவைச் சேர்ந்த மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் காம்பியாவுக்கு வழங்கப்பட்ட நான்கு இருமல் சிரப் மருந்துகள் தரமற்றவை எனக்கூறி அக்டோபர் மாதமே WHO (World Health Organisation) எச்சரித்தது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) மற்றும் காம்பியா சுகாதார அதிகாரிகளின் கூட்டு ஆய்வானது, காம்பியாவில் பல குழந்தைகளின் இறப்புக்கும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்களை உட்கொள்வதற்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதாக பரிந்துரைத்துள்ளது.

அக்டோபரில், உலக சுகாதார அமைப்பு (WHO) இந்தியாவை தளமாகக் கொண்ட மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் மூலம் காம்பியாவிற்கு வழங்கப்பட்ட நான்கு இருமல் சிரப்கள் தரமற்றவை என்றும், காம்பியாவில் பல குழந்தைகளின் இறப்புடன் இவை தொடர்புடையவை என்றும் கூறியது.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட CDC அறிக்கை,இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டு "காம்பியாவில் இறக்குமதி செய்யப்பட்ட டைதிலீன் கிளைகோல் [DEG] அல்லது எத்திலீன் கிளைக்கால் [EG] உடன் மாசுபடுத்தப்பட்ட அந்த மருந்துகள் அதை உட்கொண்ட குழந்தைகளிடையே கடுமையான சிறுநீரக காயங்களுக்கு (AKI) வழிவகுத்தன என்று இந்த விசாரணை உறுதியாகக் கூறுகிறது."

"DEG நச்சுத்தன்மை கொண்ட நோயாளிகள் மாறுபட்ட மன நிலை, தலைவலி மற்றும் இரைப்பை குடல் அறிகுறிகள் உட்பட பலவிதமான அறிகுறிகளையும் அனுபவிக்கலாம்; இருப்பினும், மிகவும் நிலையான வெளிப்பாடு AKI ஆகும், இது ஒலிகுரியா (குறைந்த சிறுநீர் வெளியீடு) அல்லது அனூரியா (மிக அதிக சிறுநீர் வெளியீடு-1/3 க்கு மேல் வெளியேறும்.) வாக மாறி இறுதியாக சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும்.

CDC இன் கூற்றுப்படி, கடந்த ஆகஸ்டில் நோய் (கடுமையான சிறுநீரகக் காயம் மற்றும் குழந்தைகளின் இறப்புகளின் பல நிகழ்வுகள்), தொற்றுநோய்களை விவரித்தல் மற்றும் சாத்தியமான காரண காரணிகள் மற்றும் அவற்றின்

ஆதாரங்களைக் கண்டறிவதில் உதவுவதற்காக காம்பியாவின் சுகாதார அமைச்சகம் (MoH) CDC ஐத் தொடர்புகொண்டது.

ஏற்றுமதிக்கான மருந்துகள் உள்நாட்டு பயன்பாட்டிற்கான மருந்துகளை விட குறைவான ஒழுங்குமுறை தரங்களுக்கு உட்பட்டதாக இருக்கலாம் என்று அது மேலும் கூறியது.

ஆனால், CDC ன் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார் பிப்ரவரி 3 ஆம் தேதி மக்களவையில் அளித்த பதிலில், சோதனைக்குப் பிறகு, இருமல் மருந்துகளின் மாதிரிகள் தரமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகள் டைத்திலீன் கிளைகோல் (DEG) மற்றும் எத்திலீன் கிளைகோல் (EG) ஆகிய இரண்டிற்கும் எதிர்மறையாக இருப்பது கண்டறியப்பட்டதாகவும் பவார் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT