ஸ்பெஷல்

தருமபுர ஆதீனம்; கொடியேற்றத்துடன் பட்டினப் பிரவேச விழா தொடக்கம்!

கல்கி

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

தருமபுரம் ஆதீன திருமடத்தில் குருபூஜையின்போது பட்டணப் பிரவேச நிகழ்வில் ஆதின குரு மகா சந்நிதானத்தை பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி கடந்த மாதம் 27-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே பட்டணப் பிரவேசத்திற்கு விதித்த தடையை நீக்க முதல்வரை நேரில் சந்தித்து ஆதீனங்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, பட்டணப் பிரவேச நிகழ்விற்கான தடையை தமிழக அரசு நீக்கியது.

இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இம்மாதம் 22-ம் தேதி ஆதீன மகாகுரு சன்னிதானத்தை பல்லக்கில் அமர்த்தி சுமக்கும் முக்கிய நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் மார்க்கெட் போகப் போகிறீர்களா? இதைப் படிச்சிட்டுப் போங்க!

கோடைக்கால உடல் சோர்வை அகற்றி, உற்சாகமளிக்கும் 7 உணவு வகைகள்!

அர்த்தநாரீஸ்வரராக அருளும் தட்சிணாமூர்த்தி எங்கு காட்சி தருகிறார் தெரியுமா?

ஹைலூரோனிக் அமிலம் என்றால் என்னவென்று தெரியுமா?

செவித்திறன் பாதிப்புகளும் நிவாரணமும்!

SCROLL FOR NEXT