வெங்கடராமன் ராமசுப்ரமணியன்
"இரவு உணவில்லாமல் தூங்குவதென்பது காலையில் கடனாளியாக எழுந்திருப்பதை விட மேலானது" - பெஞ்சமின் பிராங்க்ளின்.
"கடனிலிருந்து வெளியேற இரண்டு வழிகள் உண்டு. உழைப்பை அதிகரித்து, வருமானத்தை அதிகரிப்பது. பணத்தைச் செலவழிப்பதில் சிக்கனமாக இருப்பது - தாமஸ் கார்லைல்."
"நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், இளமையாக உள்ளீர்கள் என்று பொருள். அதேபோல், உங்களுக்கு கடன் இல்லையென்றால், நீங்கள் பணக்காரர் என்று பொருள்." - சிசிலியன் பழமொழி.
"ஒருபோதும் கடன் கொடுப்பவராகவோ அல்லது கடனாளியாகவோ இருக்காதீர்கள்" - வில்லியம் ஷேக்ஸ்பியர்.
"பல கடன்களுடன் இருப்பதுதான், மிக மோசமான வறுமை" - இந்தியப் பழமொழி.
"கடனில்லாத மனிதனே மகிழ்ச்சியான மனிதன்" - இலத்தீன் பழமொழி.
"நீ எப்போது கடன் வாங்குகிறாயோ, அப்போதே அடிமையாகி விடுகிறாய்" - ஆன்ட்ரூ ஜாக்ஸன்.
"நோயாளி தூங்குகிறான். ஆனால், கடனாளி தூங்குவதில்லை" - ஸ்பானிய பழமொழி.
"கடனில்லாத மனிதனே நிம்மதியான மனிதன்" - தமிழ்ப் பழமொழி.
"கடன் அன்பை முறிக்கும்" - பிரபல பழமொழி.
"கடன் நெருஞ்சி முள்ளைப் போன்றது. அது சிறியதாக இருந்தாலும் ஏற்படுத்தும் வலி அதிகம்" - வேதாத்திரி மகரிஷி.
"கடனைக் கட்டி முடிப்பவன், பணத்தை உருவாக்குகிறான்" - இத்தாலிய பழமொழி.