சிட்டி பசங்களுக்கு இது தெரியுமா? நம் மண்ணின் பாடல்களில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா!

பெ. சிவக்குமார்

கிராமப்புற மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள், விழாக்கள், பாரம்பரியம் போன்றவற்றை வாய்வழி பாடல்களாக தலைமுறைகளுக்கு கடத்த, நாட்டுப்புற பாடலை பயன்படுத்தினர். இப்பாடல்கள் எளிய நடையில் மக்களின் உணர்வை பிரதிபலிப்பதாக இருக்கும்.

Nattupura padalgal

அழும் குழந்தைக்கு தாய் ஆராரோ சொன்னால் அது தாலாட்டுப்பாட்டு.

Thalattu padal

நாற்றுநடும் பெண்களின் நாவில் வந்து ஒலிக்கும் குலவைப்பாட்டு.

Kulavai padal

சந்தைக்கு வண்டி பூட்டி செல்லும்போது வழிநெடுக வண்டிக்காரன் பாட்டு.

Vandikaran pattu

கேணியில் நீர் இரைக்கும் போது கேட்டுக் கொண்டிருந்த ஏற்றப்பாட்டு.

Ettra padal

காதலனும் காதலியும் அன்பை எடுத்துரைக்கும் எசப்பாட்டு!

Essai pattu

பாட்டியின் தெவிட்டாத வரிகளில் தெம்மாங்குப்பாட்டு.

Themmangu song

வீதி தோறும் குழந்தைகளின் விளையாட்டுப்பாட்டு.

Vilayattu pattu

மாரியம்மன் கோவில் திருவிழாவில் கும்மிப்பாட்டு.

Kummi pattu

மார்கழி மாதங்களில் பக்தி பஜனைப் பாட்டு.

Bajanai song

குமரிப்பெண் சடங்கானால் கூடிப்பாடும் சடங்குப் பாட்டு.

sadangu pattu

இப்படிப்பட்ட மனிதனுக்கு இயற்கை மரணம் என்றால்... கண்ணீர் பொங்க கவலை ததும்ப மாரில் அடித்துக் கொண்டு பாடும் மாரடிப்பாட்டு.

Maradi padal

இவருக்கு ஒப்பாய் எவரும் இல்லை என்று உணர்ச்சி பொங்க இசைக்க ஒரு ஒப்பாரிப்பாட்டு.

பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு வாழ்ந்தவன் எங்கள் தமிழன்!

Oppari padal
foods shouldn't put in fridge
இந்த ஒரு காய்கறியை பிரிட்ஜில் வைத்தால் அது சர்க்கரையாக மாறும்! – ஜாக்கிரதை!