துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் மர்ம விலங்கு! ஆய்-ஆய் பற்றிய உள்ளூர் மக்களின் அதிர்ச்சி நம்பிக்கை!

பெரெரிக்கா லெ

மடகாஸ்கரின் காடுகளில் வசிக்கும் ஆய்-ஆய் எனும் விலங்கு, அதன் தனித்துவமான தோற்றத்தாலும் நடத்தைகளாலும் உலகில் உள்ள மற்ற விலங்குகளிலிருந்து வேறுபட்டுள்ளது.

Aye Aye animal | Imge credit: Pinterest

இது ஒரே விலங்கினத்தை சேர்ந்தது என்பதால் இதற்கு நெருங்கிய உறவினர்கள் இல்லை. 

Aye Aye animal | Imge credit: Pinterest

எலியின் பற்கள், வௌவாலின் காதுகள், ஓநாயின் முகத்தைப் போன்று தோற்றமளிக்கும் இது மற்ற விலங்குகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

Aye Aye animal | Imge credit: Pinterest

இரவில் உணவு தேடி மரக்கிளைகளில் பயணிக்கும், இரவில் உணவு தேடும் விலங்கு ஆய்-ஆய் ஆகும்.

Aye Aye animal | Imge credit: Pinterest

இது பகல் நேரத்தில் இலைகளையும், கிளைகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட வட்ட வடிவ கூட்டில் ஓய்வெடுக்கும்.

Aye Aye animal | Imge credit: Pinterest

இதன் முக்கிய உணவு பூச்சிகளும் புழுக்களும் ஆகும். இது நட்ஸ், பழங்கள், தேன் மற்றும் காளான்கள் போன்றவற்றைக்கூட உண்ணும். புழுக்களைத் தேடி உண்பதற்கு அதன் தனித்துவமான உடலமைப்பே முக்கியக் காரணம்.

Aye Aye animal | Imge credit: Pinterest

இதன் பெரிய வௌவால் போன்ற காதுகள் மிகவும் கூர்மையானவை. இது மரத்தின் உள்ளே இருக்கும் புழுக்களின் சத்தத்தை வைத்து அதை அடையாளம் கண்டு கொள்ளும்.

Aye Aye animal | Imge credit: Pinterest

இதன் நடுவிரல் மிகவும் நீளமாகவும் கூர்மையாகவும் இருக்கும். இதன் மூலம், மரத்தில் இருக்கும் புழுக்களைத் தட்டி, இழுத்து வெளியே எடுக்கும். புழுக்களைப் பிடிக்கவும், தேங்காயை வெட்டி எடுக்கவும் இந்த விரல் பெரிதும் உதவுகிறது.

Aye Aye animal | Imge credit: Pinterest

தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் அதன் முன் பற்களைப் பார்த்து, இது ஒரு கொறிக்கும் விலங்கு என ஆரம்பத்தில் ஆராய்ச்சியாளர்கள் நினைத்தனர். இந்த பற்கள் சிமெண்ட் கற்களைக் கூட கடிக்கும் அளவுக்கு வலிமையானவை.

Aye Aye animal | Imge credit: Pinterest

இரவில் பார்க்க உதவும் பெரிய, வட்டமான கண்களை இது கொண்டுள்ளது.

Aye Aye animal | Imge credit: Pinterest

அதன் கால் விரல்கள் நீண்ட மற்றும் கூர்மையானவை. இதனால் மரக்கிளைகளில் எளிதாக தொங்க முடியும்.

Aye Aye animal | Imge credit: Pinterest

ஆய்-ஆய் பயப்படும்போதும் அல்லது உற்சாகமடையும்போதும் அதன் உரோமங்கள் நிமிர்ந்து, அதன் உடலின் அளவை இரட்டிப்பாக்கியது போல் தோற்றமளிக்கும்.

Aye Aye animal | Imge credit: Pinterest

உள்ளூர் பழமொழியின்படி, ஆய்-ஆய் விலங்கு துரதிர்ஷ்டத்தையும் மரணத்தையும் கொண்டு வரும் என மக்கள் நம்புகின்றனர்.

Aye Aye animal | Imge credit: Pinterest
Natural health tips
உங்கள் சமையலறையில் இருக்கும் இந்த பொருட்களே போதும்... பல நோய்களை விரட்டி அடிக்கலாம்!