திருநெல்வேலி அல்வாவையே மிஞ்சும் ஆந்திரா ஸ்வீட்ஸ்! மிஸ் பண்ணாதீங்க!

நான்சி மலர்

ஆந்திரா காரமான உணவுகளுக்கு மட்டும் பெயர் போனதல்ல. சுவைமிக்க வித்தியாசமான இனிப்பு பலகாரங்களுக்கு பெயர் பெற்றது. ஆந்திர இனிப்புகளில் நெய் மற்றும் வெல்லத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும். அவற்றைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

Andhra sweets

Paper sweet: மெல்லிய காகிதம் போன்ற இனிப்பு. அரிசி தாள்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனை "காகித இனிப்பு" என்று அழைக்கலாம்.

Paper sweet

பல்நாடு பால்கோவா: ஆந்திராவில் 'பல்நாடு' என்னும் இடத்தில் செய்யப்படும் இந்த பால் கோவா மிகவும் பிரபலம்.

Palkova

கவ்வாலு: சிப்பிகள் போன்ற வடிவத்தில் மைதா மாவைக் கொண்டு செய்யப்படும் இனிப்பு வகை.

Gavvalu

Bobbatlu: நம்முடைய 'பருப்பு போளி' போன்ற இனிப்பு வகை. மைதா அல்லது கோதுமை மாவுக்குள் பருப்பு வெல்லம் பூரணம் வைத்து திரட்டப்படும் பலகாரம்.

Bobbatlu

அரிசெலு: நம் ஊரின் 'அதிரசம்' போன்று பச்சரிசி மாவு, வெல்லம் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும். சங்கராந்தி பண்டிகையின் போது இது முக்கிய இடம் பிடிக்கும். எள் அல்லது கசகசா தூவி, நல்ல மொறுமொறுப்பாகச் செய்வார்கள்.

Ariselu

சுன்னூண்டலு: ஆரோக்கியமான உளுந்து உருண்டை. கருப்பு உளுந்து, நெய், வெல்லம் சேர்த்து உருட்டப்படும் லட்டு. இது உடலுக்கு நல்ல வலிமையை தரும்.

Sunnundalu

சந்திரகலா: பிறை நிலா வடிவம் கொண்டது. இதன் உள்ளே கோவா வைத்து மடிக்கப்பட்டு எண்ணெயில் பொரித்து எடுத்து பாகில் ஊற வைத்து எடுக்க வேண்டும்.

Chandrakala

Boorelu: ஆந்திராவின் 'சுழியம்' என்று சொல்லலாம். பருப்பு வெல்லம் கலந்த பூரணத்தை அரிசி மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். அனைத்து பூஜைகளிலும் நைவேத்தியமாக படைக்கப்படும்.

Boorelu

பால்காயலு: இது மாவு மற்றும் பால் சேர்த்து செய்யப்படும் சிறிய உருண்டைகள். இவை மொறுமொறுப்பாகவும், லேசான இனிப்புச் சுவையுடனும் இருக்கும். கோதாவரி மாவட்டங்களில் இது மிகவும் பிரபலம்.

Palakayalu
Pongal festival 2026
பற்களை இரும்பு போல மாற்றும் கரும்பு! பொங்கல் அன்று இதை மட்டும் தவறவிடாதீர்கள்!