கிரி கணபதி
சரியான முறைகளைப் பின்பற்றினால் வீட்டிலேயே அருமையான மிருதுவான இட்லிகளை வார்க்கலாம்.
1. தரமான இட்லி அரிசியைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். இதுவே இட்லியின் மென்மைக்கு முக்கியக் காரணமாக அமைகிறது.
2. முழு உளுந்தைச் சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் மாவு நன்கு பொங்கி மிருதுவாகக் கிடைக்கும்.
3. அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாகக் கழுவி ஊறவைப்பது நன்று. குறைந்தபட்சம் 4 மணி நேரமாவது ஊற வேண்டும்.
4. உளுந்துடன் சிறிது வெந்தயம் சேர்த்து ஊறவைக்கலாம். இது மாவுக்கு கூடுதல் மணத்தையும் சுவையையும் கொடுக்கும்.
5. உளுந்தை மிகவும் மென்மையாக அரைத்து எடுக்க வேண்டும். அரிசியை கொரகொரப்பாக அரைப்பது சிறந்தது.
6. மாவு அரைக்கும்போது குளிர்ந்த நீரைப் பயன்படுத்தவும். இதனால் மாவு அரைபடும்போது சூடாவது எளிதில் தவிர்க்கப்படும்.
7. மாவு அரைத்தவுடனே தேவையான கல் உப்பு சேர்க்க வேண்டும். கைகளால் நன்கு கலக்குவது மாவு புளிக்க உதவும்.
8. மாவு புளிப்பதற்கு 8 மணி நேரம் தேவை. தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப இந்த நேரம் மாறுபடும்.
9. மாவு பொங்கி வரும் என்பதால் பெரிய பாத்திரத்தைப் பயன்படுத்தவும். இது மாவு கீழே சிந்தாமல் பாதுகாக்கும்.
10. இட்லி பானையில் தண்ணீர் கொதித்த பின் தட்டுகளை வைக்கவும். மிதமான தீயில் வேகவைப்பது சரியான முறையாகும்.
இந்தச் சிறு குறிப்புகளை கவனத்தில் கொண்டால் மிருதுவான இட்லிகள் இனி நீங்களும் செய்யலாம்.