மகாலெட்சுமி சுப்ரமணியன்
கத்தியை உபயோகித்ததும் அடிக்கடி அலம்பாமல் ஈரத்துணியால் துடைத்து விட்டு வைக்க, கூர் மழுங்காமல் ஷார்ப்பாக நீண்ட நாள் உழைக்கும்.
சாப்பர், வெஜிடபிள் கட்டரை உபயோகித்த பின் ஈரமில்லாமல் துடைத்து வைக்க வாடையின்றி இருக்கும்.
அனைத்து விதமான கத்தி, அரிவாள், அரிவாள் மனையை உபயோகித்ததும் துடைத்து விட்டு தேங்காய் எண்ணைய் தடவி வைக்க துரு ஏறாமல், கூர் மழுங்காமல் நீண்ட நாள் உழைக்கும்.
மிக்ஸி உபயோகம் முடிந்ததும் சுவிட்சை ஆன் - இல் வைக்காமல் ஒயரை சுருட்டாமல் அப்படியே வைத்து உபயோகிக்க அதன் தரம் நீண்ட நாள் நிலைக்கும்.
மிக்ஸி ஜார்களை வாரமிருமுறை வெதுவெதுப்பான நீரில் கழுவி துடைத்து விட்டு ஜாரை நிமிர்த்தே வைக்க வேண்டும். ஜார் ரப்பரை ஃப்ரீசரில் வைத்து எடுக்க அதன் லைஃப் நன்றாக இருக்கும்.
தேங்காய் துருவியதும், துருவியை ஈரத் துணியால் துடைத்து விட்டு கவர் பண்ணி வைக்க பூச்சி, எறும்பு தொல்லை இருக்காது.
கூர் மழுங்கிய பொருட்களை உப்பு கொண்டோ, உப்புத் தாள் கொண்டோ தேய்த்து விட்டு உபயோகிக்க ஷார்ப்பாக இருக்கும்.
நான்ஸ்டிக் பாத்திரங்களை அடுக்கும் போது டிஷ்யூ பேப்பரோ அல்லது மெல்லிய துணி வைத்தோ அடுக்க கீறல் விழாமல் இருக்கும்.
பாத்திரங்களை தனித்தனியே கவிழ்த்து வைக்க கீறல் விழாது.
பாத்திரம் வாங்கும்போது கனமான பிராண்டட் பொருட்களையே வாங்க அதன் தரம் நீண்ட நாள் நிலைத்து நிற்கும்.
மண்பாண்ட சமையல் முடிந்ததும், உணவை பாத்திரத்துக்கு மாற்றி விட்டு, மண்பாண்டங்களை, ஆறியதும், ஊற விட்டு கழுவ உணவு பொருட்கள் பிடித்துக் கொள்ளாமல் சுத்தமாக கழுவ முடியும்.
புழங்காத பித்தளை பாத்திரங்களை ஷோ பீஸாகவோ, வேறு உபயோகமான பொருளாகவோ மாற்றிக் கொள்ள அவற்றை பயன்படுத்திய திருப்தி கிடைக்கும்.
கண்ணாடி, பீங்கான் பாத்திரங்களை ஸ்பான்ஜ் கொண்டு கழுவி துடைத்து காயவிட்டு வைக்க கறை கீறல் இன்றி பளபளப்பாக இருக்கும்.
டீ கப், காபி மக்கில் கறையை நீக்க வினிகர் கொண்டு கழுவிட கறை நீங்கி சுத்தமாக இருக்கும்.