நான்சி மலர்
பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவர்களுக்கு நாம் சொல்லித் தர வேண்டிய 10 மிக முக்கியமான பாதுகாப்பு குறிப்புகள்.
1/10. குழந்தைகளுக்கு உடலின் எந்தெந்த பகுதிகள் தனிப்பட்டவை (Private parts) என்பதை மிகத் தெளிவாகக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
2/10. யாராவது அசௌகரியமாகத் தொட்டாலோ அல்லது தவறாக நடத்த முயன்றாலோ, உடனே சத்தமாக 'வேண்டாம் (NO)' என்று சொல்ல வேண்டும் என்று சொல்லித் தாருங்கள்.
3/10. 'இதை அம்மாவிடம் சொல்லாதே, உனக்கு சாக்லேட் தருகிறேன்' என்று யாராவது கூறினால், அதை உடனே பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்துங்கள்.
4/10. தெரியாத நபர்கள் தரும் சாக்லேட், பொம்மைகள் அல்லது திண்பண்டங்களை வாங்கக்கூடாது. அதேபோல, பெற்றோருக்குத் தெரியாமல் முன்பின் தெரியாதவர்களுடன் தனியாக எங்கும் செல்லக்கூடாது என்று சொல்லித் தாருங்கள்.
5/10. குழந்தைகளுக்கான அவசர உதவி எண்ணான 1098 (Childline) மற்றும் போலீஸ் உதவி எண்ணான 100 ஆகியவற்றை அவசர காலத்தில் எப்படிப் பயன்படுத்துவது என்று கற்றுக் கொடுங்கள்.
6/10. குழந்தையின் சம்மதம் இல்லாமல் உறவினர்களோ அல்லது நண்பர்களோ கூட அவர்களைக் கட்டியணைக்கவோ அல்லது முத்தமிடவோ கட்டாயப்படுத்தக் கூடாது.
7/10. தற்போது குழந்தைகள் ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுவதால், தெரியாத நபர்களுடன் சாட் செய்யக்கூடாது, தங்களின் புகைப்படம், முகவரி, பள்ளி விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பகிரக்கூடாது.
8/10. குழந்தைகள் உங்களிடம் எதைச் சொன்னாலும் நீங்கள் அவர்கள் பக்கம் நிற்பீர்கள் என்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுங்கள்.
9/10. பெற்றோர்கள் இல்லாத நேரத்தில், அவசர உதவிக்கு அணுகக்கூடிய நம்பகமான நபர்களை ஆசிரியை, தாத்தா, பாட்டி குழந்தைக்கு அடையாளம் காட்டி, அவர்களை 'பாதுகாப்பான வட்டம்' என்று புரிய வைக்க வேண்டும்.
10/10. ஒரு நபரின் அருகில் இருக்கும்போது பயமாகவோ, அசௌகரியமாகவோ தோன்றினால், அந்த இடத்தை விட்டு உடனே நகர்ந்துவிட வேண்டும் என்று சொல்லித் தாருங்கள்.