நான்சி மலர்
1/10. வீட்டில் எறும்பு புற்று அல்லது எறும்புகள் அதிகம் வரும் இடங்களில் சிறிது பெருங்காயத் தூளைத் தூவி விட்டால், எறும்புத் தொல்லை இருக்காது.
2/10. வெள்ளி ஆபரணங்கள் அல்லது பாத்திரங்களைச் சேமித்து வைக்கும் டப்பாவில் ஒரு துண்டு கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அவை கருப்பாவதைத் தடுக்கலாம்.
3/10. துணிகளில் எண்ணெய் அல்லது கிரீஸ் கறை படிந்திருந்தால், அந்த இடத்தில் சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் (Eucalyptus oil) தடவி ஊறவைத்துத் துவைத்தால் கறை எளிதில் நீங்கிவிடும்.
4/10. சாக்பீஸ்களைப் பொடி செய்து, டியூப்லைட் அல்லது சுவர்களின் மூலைகளில் தடவி வைத்தால் பல்லிகள் வராது.
5/10. பாத்ரூமில் உள்ள துர்நாற்றத்தைத் தவிர்க்க, ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை சிறிய துளைகளிட்ட பிளாஸ்டிக் கவரில் போட்டுத் தொங்க விடுங்கள். இது பாத்ரூமை எப்போதும் நறுமணமாக வைத்திருக்கும்.
6/10. துருப்பிடித்த பூட்டுகளைத் திறக்க சிரமமாக இருந்தால், எண்ணெய்க்குப் பதிலாகச் சிறிது பவுடரைத் தூவி முயற்சி செய்யுங்கள்; பூட்டு எளிதாகத் திறக்கும்.
7/10. பூண்டு தோலை எளிதாக உரிக்க, பூண்டுப் பற்களில் சிறிது எண்ணெய் தடவி 3 மணி நேரம் வெயிலில் வைத்துவிட்டுப் பிறகு உரித்தால், தோல் தானாகவே வரும்.
8/10. எவர்சில்வர் பாத்திரங்களின் மங்கலைப் போக்க, வாரத்திற்கு ஒருமுறை விபூதி கொண்டு தேய்த்துக் கழுவினால் பாத்திரங்கள் வெள்ளி போல மின்னும்.
9/10. வீட்டில் புதிதாக பெயிண்ட் அடித்திருந்தால், அதன் வாசனை நீங்க ஒரு வெங்காயத்தை நறுக்கி வீட்டின் நடுவே ஒரு தட்டில் வைத்து விடுங்கள். வெங்காயம் பெயிண்ட் வாடையை இழுத்துக்கொள்ளும்.
10/10. பிளாஸ்டிக் பக்கெட்டில் ஓட்டை விழுந்துவிட்டால், பழைய டூத் பிரஷை நெருப்பில் காட்டி உருக்கி, அந்த உருகுதிரவத்தைக் கொண்டு ஓட்டையை அடைக்கலாம்.