மன அமைதிக்கு புத்தர் கூறிய 10 உபதேச பொன்மொழிகள்..!

செ.ஹரிஷ்

ஒரு சில நேரங்களில் புத்தரின் போதனைகளான பொன்பொழிகளை படிக்கும் போதும், கேட்கும்போது நமக்குள்ளே ஓர் அளப்பரிய ஒரு மன அமைதியும் சாந்தமும் நிலவுகிறது. வாழ்வின் மன அமைதிக்காக புத்தர் போதித்த போதனைகளில் 10 உபதேச பொன்மொழிகளை இக்கட்டுரையில் காண்போம்.

Buddha | Imge credit: Pinterest

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.

Buddha Quotes | Imge credit: Pinterest

இந்த உலகம் ஒரு மாயை, இதை உணர்ந்து செயல்படு, உன் செயல்களின் மீது நீயே பொறுப்பேற்றுக் கொள், நீயே உனக்கு ஒளி கொடு.

Buddha Quotes | Imge credit: Pinterest

கோபத்தை கோபத்தால் வெல்ல முடியாது, அன்பால் மட்டுமே வெல்ல முடியும்.

Buddha Quotes | Imge credit: Pinterest

உனது செயல்கள் மற்றும் எண்ணங்களில் கவனமாக இரு, ஏனெனில் அவை உன் வாழ்க்கையை உருவாக்குகின்றன.

Buddha Quotes | Imge credit: Pinterest

துன்பத்திற்கான காரணம் அறியாமல் துன்பப்படுவதை விட, காரணத்தை அறிந்து அதை கடந்து செல்வது நல்லது. ஏனென்றால் மன அமைதியை வெளியே தேட வேண்டியது இல்லை.. அது உனக்குள் தான் இருக்கிறது.

Buddha Quotes | Imge credit: Pinterest

எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்து, வெறுப்பை விலக்கு.

Buddha Quotes | Imge credit: Pinterest

சகிப்புத்தன்மை மற்றும் மன்னிக்கும் குணம் ஆகியவற்றை கடைபிடி.

Buddha Quotes | Imge credit: Pinterest

தியானத்தின் மூலம் மனதை அமைதிப்படுத்து, ஒழுக்கப்படுத்து, நடப்பது எல்லாம் நன்மைக்காகவே.

Buddha Quotes | Imge credit: Pinterest

நிகழ்காலத்தில் வாழ், கடந்த காலத்தை நினைத்து வருந்தாதே, எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாதே.

Buddha Quotes | Imge credit: Pinterest

நீ அன்பாய் இருக்கிறதை விட, அன்போடு சேர்ந்த உண்மையாய் இருக்கிறாய் என்பதே முக்கியம் ஏனென்றால் அதுதான் அதிக மகிழ்ச்சி தரக்கூடியது..!

Buddha Quotes | Imge credit: Pinterest
Garuda vahanam | Imge credit: Sanathanadharmasblog
இந்த கருடன் சன்னதிகள் தெரியுமா? உங்கள் வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட இடங்கள்!