கவிதா பாலாஜிகணேஷ்
நீங்கள் ஏழையாக பிறந்தால் அது உங்களது தவறு ஏதும் இல்லை. ஆனால், நீங்கள் ஏழையாக இறந்தால், அது உங்கள் தவறு தான்.
கடினமான வேலைகளுக்கு சோம்பேறியான ஆட்களைத் தேர்வு செய்கிறேன். ஏனெனில், அவர்களால்தான் அந்த வேலையை செய்து முடிக்க சுலபமான வழியை கண்டுபிடிக்க முடியும்.
உலகில் உள்ள எவருடனும் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்... அப்படிச் செய்தால், உங்களை நீங்களே அவமதித்துக் கொள்கிறீர்கள் என அர்த்தம்.
பிரச்சினைகள் இருக்கும் இடத்திலேயே அதற்கான தீர்வுகளையும் தேடுகிறேன்.
நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன. ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.
கழிவறையை சுத்தம் செய்ய வேண்டுமானாலும் கூட அதற்கு 100% சதவீத உழைப்பை கொடுப்பேன்.
வெற்றியைக் கொண்டாடுவது சிறப்பானது. ஆனால் தோல்வியின் படிப்பினைகளைக் கவனிப்பதும் அவசியம்.
வறுமையில் இருப்பவர்களை என் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்கிறேன். ஒருபோதும் அவர்களின் வறுமையை அல்ல.
வெற்றி ஒரு மோசமான ஆசிரியர். அது புத்திசாலிகளை மயக்கி தோல்வியே இல்லை என்ற எண்ணத்தை தூண்டும்.
ஒரு செயலை சிறப்பாக செய்ய முடியாவிட்டால் குறைந்தபட்சம் அதை செய்து முடித்துவிட வேண்டும்.