ஆர்.ஜெயலட்சுமி
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன.
உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது.
ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.
பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.
தீமைக்கு பின் அதை அழிக்க வல்ல நன்மையை செய்யுங்கள்.
மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.
இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.
தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பதுதான்.
ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.
தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுகிறான்.
ஏழைகளின் கண்ணீர் கூறிய வாளுக்கு ஒப்பாகும்.
தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்க பயிற்சியும் ஆகும்.
கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்து விடுங்கள்.