எஸ்.மாரிமுத்து
ஒரு நல்ல நூலைப் போலச் சிறந்த நண்பனும், நெருக்கமான உறவினனும் வேறு யாருமே இல்லை.
பரிசுகள் கொடுத்து நண்பர்களை சேர்க்காதே! நீ கொடுப்பது நின்றால், அவர்கள் அன்பு செலுத்துவதை நிறுத்திவிடுவார்கள்.
இரண்டு பேரில் ஒருவருடைய சிறு தவறுகளை மற்றவர் மன்னிக்க முடியாவிட்டால் அவர்களுடைய நட்பு நீடித்திருக்க முடியாது!
உன்னை விட உயர்வான ஒரு மனிதரைத் தவிர மற்றவருடன் ஒருபோதும் நட்பு கொள்ள வேண்டாம்.
நட்பு கொள்வதில் நிதானமாக இருக்கவும். ஆனால் நட்பு கொண்ட பின் அதில் உறுதியாகவும் நிலையாகவும் நிற்கவும்.
ஒரு நண்பனைப் பெறுவதற்கு நீ ஒரு நல்ல நண்பனாய் இருப்பது ஒன்றே வழியாகும்.
உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது. அதை இழந்து விடும் வரை நாம் அதன் உண்மையான மதிப்பை உணர்வதே இல்லை.
உலகின் அதிபதியாக இருந்தாலும் ஒரு நண்பன் அவசியமே.
முன் கவனமுள்ள ஒரு நண்பனை போல் வாழ்க்கையில் வேறு பாக்கியம் இல்லை.
இனிமையான நண்பன், வழிப் பயணத்துக்கு வண்டி போன்றவன்.
எல்லோருக்கும் நண்பன், ஒருவருக்கும் நண்பனாக இருக்க மாட்டான்.
நண்பன் கிடைப்பது அரிது - அவனை இழப்பது எளிது.
நண்பன் தலையைப் பார்ப்பான் -பகைவன் பாதத்தை பார்ப்பான்.
உடையில் புதியவையும் - நட்பில் பழையவர்களும் மேல்.
உனக்கு ஒருவனிடம் சந்தேகம் இருந்தால் தள்ளி விடு, நட்பான பின் சந்தேகப்படாதே.
நம்மை பாராட்டி மதிப்பதை விட, நம்மிடம் அதிகமாக அன்பு செலுத்தி நமது பெரிய வேலையில் பங்கு கொள்பவனே நண்பன்.