ச. நாகராஜன்
1. எந்த உரையாடல்- பேச்சு -மோசமானது?
உரையாடலில் மோசமானது விவாதம் தான்! – ஜோனாதன் ஸ்விப்ட்
2. எவனுடன் போட்டி போடக் கூடாது?
எவனிடம் இழப்பதற்கு ஒன்றுமே இல்லையோ அவனிடம் போட்டி போடக் கூடாது. – பல்டாசர் க்ரேசியன்
3. உறுதி என்பது என்ன?
ஏழு தடவை விழுந்தாலும் எட்டாவது முறை எழுந்து நிற்பது! - ஜப்பானியப் பழமொழி
4. வணிகத்தில் வெற்றி பெறுவது எப்படி?
வணிகத்தில் வெற்றி பெற - தைரியமாக இரு, முதலாவதாக இரு, வித்தியாசமாக இரு. – யாரோ
5. பொறுமையாக இருப்பவனுக்கு என்ன பயன்?
மிகவும் பொறுமையாக இருப்பவன் எல்லாவற்றிலும் நிபுணன் ஆவான்! – ஜார்ஜ் சவில்
6. அதிக அதிகாரம் உள்ளவன் அதை என்ன செய்ய வேண்டும்?
அதிக அதிகாரம் உள்ளவன் அதை குறைவாகப் பயன்படுத்த வேண்டும்! – செனேகா
7. எப்போது ஒரு கடையை திறக்கக் கூடாது?
புன்சிரிப்புடன் பழகத் தெரியாவிடில் ஒரு கடையைத் திறக்காதே! – யூதப் பழமொழி
8. நன்மதிப்பை யார் இழக்க மாட்டார்கள்?
வெற்றி பெற்ற ஒருவன் ஒருபோதும் நன்மதிப்பை இழக்கமாட்டான். – தாமஸ் ஆல்பர்ட் கார்ல் ஃபுல்லர்
9. உயர்ந்த நிலையைப் பெறுவது எப்படி?
உயர்ந்த நிலையைப் பெறுவதற்கான விலை – பொறுப்புடன் இருப்பது! – வின்ஸ்டன் சர்ச்சில்
10. மேலே உயர்வதற்கான வழி என்ன?
பணிவதும் அனைவரையும் தயவுடன் அணுகுவதுமே மேலே உயர்வதற்கான வழி. – பென் ஜான்ஸன்
11. தந்திரம் என்பது என்ன?
ஒரு கருத்தை எதிரிகள் யாரையும் உருவாக்காமல் எடுத்துரைப்பது தான் தந்திரம்! – ஹோவர்ட் டபிள்யூ. நியூடன்
12. நல்ல நடையுடன் எழுதுவது எப்படி?
ஒருவன் நல்ல நடையுடன் எழுத விரும்பினால் அவன் தனது சிந்தனையில் தெளிவுடன் இருக்க வேண்டும். – ஜோஹன் டபிள்யூ வான் கதே
13. அதிஜாக்கிரதையாக ஒருவன் இருந்தால் என்ன நடக்கும்?
அதிஜாக்கிரதையாக செயல்படும் ஒருவன் குறைவாகவே சாதிப்பான்! – ஜோஹன் ஷில்லர்
14. மனித இயற்கையில் ஒருவன் மிகவும் அதிகமாக விரும்புவது எதை?
மனித இயற்கையில் ஒருவன் தன்னை மற்றவர்க்ள் பாராட்டுவதையே அதிகமாக விரும்புகிறான். – வில்லியம் ஜேம்ஸ்