புவனா நாகராஜன்
குரு பகவான் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சி செய்வாா். சனி பகவான் முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை. அதேபோல ராகு கேது பெயர்ச்சியானது பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்வாா்கள்.
பொதுவாக ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் குரு, சனி, ராகுகேது பெயர்ச்சிகளே மாறி மாறி நோ்மறை மற்றும் எதிா்மறையான பலன்களை கொடுப்பது வழக்கம், என ஜோதிட ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன.
அதன்படி எதிா்வரும் மே 26 - ஜீன் 2-ல் திருக்கணித மற்றும் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் குருப் பெயர்ச்சியானது நிகழ்கிறது. இந்த முறை குருபகவான் கடக ராசியில் உச்சம் பெறுகிறாா்.
அதன் வகையில் மிதுனம், கடகம், கன்னி உள்ளிட்ட ராசிகள் அதிக நன்மையை பெறப்போகின்றன. குருபாா்க்க கோடி நன்மை என்பாா்கள். அதேபோல இந்த ஆண்டில் ஒவ்வொரு ராசிக்கும் குரு பெயர்ச்சியின்பலன்கள் ஒருசில வரிகளில் பாா்க்கலாம்.
நீண்ட நாட்களாக சிரமம் கொடுத்து வந்த கடன் தொல்லைகள் நிவர்த்தியாகலாம். தொழில், வியாபாரம் முன்னேற்றமே, ஆரோக்கியத்தில் கவனம் தேவை!
வீடு, மண், மனை, பூமி வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் ஏற்பட்டு வந்த கருத்து வேறுபாடுகள் மறைய வாய்ப்பு உண்டு.
பணவரவில் திருப்தி, பிாிந்த உறவுகள் திரும்ப சேர வாய்ப்பு வரலாம், உத்யோக உயர்வுக்கான வாய்ப்பு வரலாம்!
உச்ச குருவின் பலனாய் ஹம்ச ராஜயோகம் ஏற்படும். நினைத்த காாியம் கைகூடும் முன்னேற்றம் உண்டு.
ஏற்கனவே அனுபவித்து வந்த சிரமங்கள் குறையும், செய்தொழிலில் மேன்மை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம், தொட்ட காாியம் துலங்கலாம்.
மந்த கதியில் இருந்து வந்த பொருளாதார பின்னடைவு மேன்மை அடையலாம். ஆன்மிக பயணம் ஏற்பட வாய்ப்புகைள் உண்டு.
திடீா் பண வரவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். குடும்பத்தில் சுபகாாியங்கள் நடக்கலாம். பிாிந்தவர்கள் சோ்வதற்கான வாய்ப்புகள் அதிகமே!
நீண்ட நாட்களாய் தடைபட்டு வந்த காாியங்கள் நிறைவேறும். பூா்வீக சொத்து கிடைக்க வாய்ப்பு உண்டு.
எதிா்பாராத தனவரவு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் மேம்பட வாய்ப்புகள் அதிகம்.
செய்து வரும் தொழிலில் கூட்டாளிகளால் ஆதாயம் வர வாய்ப்புகள் உண்டு. வெளியூா் பயணம் லாபம் தரும்.
பேச்சில் நிதானம் தேவை. அலைச்சல் அதிகமாகலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அம்மன் வழிபாடு மேன்மையைத் தரும்.
பூா்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு அமர்வதால், அறிவுத்திறன் மேம்படும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் விலகும்.