பொ.பாலாஜிகணேஷ்
மோகத்தில் வீழ்ந்துவிட்டால், மொத்தமாய் வீழ்ந்திடுவாய் - சாந்தனுவாய்
சத்தியம் செய்துவிட்டால், சங்கடத்தில் மாட்டிடுவாய்
- கங்கை மைந்தானாய்
முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும் - பாண்டுவாய்
வஞ்சனை நெஞ்சில் கொண்டால், வாழ்வனைத்தும் வீணாகும் - சகுனியாய்
ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு - குந்தியாய்
குரோதம் கொண்டால், விரோதம் பிறக்கும் - திருதராஷ்டிரனாய்
பெற்றோர்கள் செய்யும் பாவங்கள், பிள்ளைகளை பாதிக்கும் - கௌரவர்கள்
பேராசை உண்டாக்கும், பெரும் அழிவினையே - துரியோதனனாய்
கூடா நட்பு, கேடாய் முடியும் - கர்ணனாய்
சொல்லும் வார்த்தை, கொல்லும் ஓர்நாள் - பாஞ்சாலியாய்
தலைக்கணம் கொண்டால், தர்மமும் தோற்கும் - யுதிஷ்டிரனாய்
பலம் மட்டுமே, பலன் தராது - பீமனாய்
இருப்பவர் இருந்தால், கிடைப்பதெல்லாம் வெற்றியே
- அர்ஜூனனாய்
சாஸ்திரம் அறிந்தாலும், சமயத்தில் உதவாது - சகாதேவனாய்
விவேகமில்லா வேகம், வெற்றியை ஈட்டாது - அபிமன்யூ
நிதர்சனம் உணர்ந்தவன், நெஞ்சம் கலங்கிடான் - கண்ணனாய்