மணிமேகலை பெரியசாமி
செங்கால் குரங்குகள் அவற்றின் உடலில் உள்ள பலவிதமான நிறங்களுக்காகவே 'பஞ்சவர்ண குரங்குகள்' என்று அழைக்கப்படுகின்றன.
இதன் முகம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். கண்களைச் சுற்றி ஒரு அழகான மேக்கப் போட்டது போன்ற தோற்றம் காணப்படுவது இதன் சிறப்பு.
இவை தென்கிழக்கு ஆசிய நாடுகளான வியட்நாம், லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளின் அடர்ந்த காடுகளில் மட்டுமே வாழ்கின்றன.
இவை மிகவும் சமூக உணர்வு கொண்டவை. பொதுவாக 4 முதல் 15 குரங்குகள் கொண்ட குழுவாகவே காடுகளில் சுற்றித் திரியும். ஒவ்வொரு குழுவிலும் ஒரு தலைமை ஆண் இருக்கும்.
இவை பெரும்பாலும் இலைகளை மட்டுமே உணவாகக் கொள்கின்றன. அவ்வப்போது பூக்கள், பழங்கள் மற்றும் மொட்டுகளையும் ரசித்து உண்ணும்.
இவற்றின் வால் உடலை விட நீளமானது. மரங்களுக்கு இடையே தாவும்போது சமநிலையைப் பேண இந்த வால் பெரிதும் உதவுகிறது.
மற்ற குரங்கு இனங்களை விட இவை மிகவும் அமைதியானவை. தனித்துவமான குரல் ஒலி மூலம் குழு உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளும்.
இவை பெரும்பாலும் மரங்களில் வாழும் (arboreal) தன்மை கொண்டவை; தரையில் அரிதாகவே இறங்கும்.
இவற்றிற்கு உணவைத் தேடும் திறனும், சிக்கல்களைத் தீர்க்கும் திறனும் அதிகம்.