எஸ்.மாரிமுத்து
உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன்; வாழ்த்துக்குரியவன்; அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுவது சமுதாயத்தின் நல் வாழ்வையே புரையோடச் செய்வதாகும்.
போட்டியும், பொறாமையும் பொய் சிரிப்பு நிறைந்த இவ்வுலகில், நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருப்பது கல்வி மட்டுமே.
எதிரிகள் தாக்கி தாக்கித் தங்கள் வலுவை இழக்கட்டும் .... நீங்கள் தாங்கி தாங்கி வலுவை பெற்றுக் கொள்ளுங்கள்.
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்... இனி, நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திட மனம் இல்லை என்றால் கடமையை நிறைவேற்ற முடியாது.
கட்டுப்பாடு, ஒழுங்கும் கட்டாயம் நமக்கு தேவை; இவை சாதாரணமானவைதான். ஆனால், இம்மாதிரி சாதாரண விஷயங்களைக் கொண்டு தான் ஒரு சமூகத்தை எடை போட முடியும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கையுள்ளவர்களாக நடந்து கொண்டால் போதாது. தேர்ந்தெடுத்த மக்களுக்கும், நம்பிக்கையுள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.
விடுதலை பெறுவதற்கு இன்றியமையாதது, அதற்கான உணர்ச்சிக்கு ஊறு நேரிடாதபடி பார்த்துக் கொள்வதும், உணர்ச்சி பெற்றவர்களின் நிலையை உண்டாக்குவதுமாகும்.
பிறருக்கு தேவைப்படும் போது நல்லவர்களாக தெரியும் நாம் தான் அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் கெட்டவர்களாகிவிடுகிறோம்.
புகழை நாம் தேடி செல்லக்கூடாது. அதுதான் நம்மை தேடி வர வேண்டும்.
ஒரு ஜனநாயக சமுதாயத்தில் கருத்துக்களை சொல்வதற்கு தடையோ, சுதந்திர உணர்வுகளுக்கு அழிவு தரும் நடைமுறைகளோ கண்டிப்பாக இருக்கக் கூடாது.
சாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் சம தர்மத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்.
சமத்துவம், சம தர்மம் போன்ற லட்சியங்களை பேசுவது சுலபம். சாதிப்பது கடினம்.
ஊக்கத்தை கைவிடாதே; அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு.
ஒரு நல்ல நூலைப்போல் சிறந்த நண்பனும், நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை. மோரைக் கடந்து வெண்ணைய் எடுப்பது போல அறிவை வளர்த்துக் கொண்டு பலன் பெற வேண்டும்