எஸ்.மாரிமுத்து
தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் இருந்தவரும் தென்னாப்பிரிக்காவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது குடியரசுத் தலைவரும் தான் நெல்சன் மண்டேலா. (Nelson Rolihlahla Mandela). அவரது பொன்மொழிகள் சில.
என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் நான் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள்!
பயமே இல்லாதவர் தைரியமான மனிதர் அல்ல, பயத்தை வென்றவேரே தைரியமான மனிதர்!
பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒருவர் தனது நேரத்தையும் சக்தியையும் கொடுப்பதைவிட சிறந்த பரிசு எதுவும் இருக்க முடியாது!
இந்த உலகில் வாழும் அனைவருக்குமான ஒரு சிறந்த உலகை உருவாக்குவது உங்கள் கைகளில் தான் உள்ளது!
ஞானிகள் அமைதியாக இருக்கும் பொழுது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும். செய்து முடிக்கும் வரை மட்டுமே அது சாத்தியமற்றதாக தோன்றும்!
தாங்கள் செய்வதில் அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் இருந்தால் சூழ்நிலைகளை கடந்து வந்து அனைவராலும் வெற்றி அடைய முடியும்!
இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்விதான்!
அடிமைத்னம் மற்றும் நிறவெறி போலவே வறுமையும் இயற்கையானது அல்ல!
வறுமை மனிதனால் உருவாக்கப்பட்டதாகும், மேலும் மனிதர்களின் செயல்கள் மூலம் இதை வெல்லவும், ஒழிக்கப்படவும் முடியும்!
நீங்கள் உங்கள் கொள்கைகளை சமரசம் செய்ய கூடாது. ஆனால் உங்கள் எதிராளியை அவமானப்படுத்த கூடாது. அவமானப்படுத்தப்பட்டவரை விட ஆபத்தானவர்கள் வேறு யாரும் இல்லை!
மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று சமுதாயத்தை மாற்றுவது அல்ல ! உங்களை நீங்களே மாற்றிக் கொள்வது!
மக்கள் கல்வி அறிவு பெறாத வரை எந்த ஒரு நாடும் உண்மையில் அபிவிருத்தி அடைய முடியாது !
வரலாற்றை படைப்பது மன்னர்களும் தளபதிகளும் அல்ல. மாறாக வெகுஜனமக்களே.
மக்களால் தங்கள் வயிற்றுக்கு உணவிட முடியாவிட்டால் அவர்களுக்கு ஒரு இருப்பிடம் இல்லாவிட்டால் அறியாமை மற்றும் நோய்கள் அவர்களை தொடர்ந்து கொண்டே இருந்தால் சுதந்திரம் என்பது அர்த்தமற்றது !
நம்பிக்கை ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம், உங்களிடமிருந்து பறிக்கக் கூடிய சக்தி இந்த பூமியில் யாரிடமும் இல்லை!