நவராத்திரி ஸ்பெஷல்: கேரளாவில் புதர்களுக்குள் மறைந்திருக்கும் சரஸ்வதி!

மகாலெட்சுமி சுப்ரமணியன்

நவராத்திரி விழாவை இந்திரன் அனுஷ்டித்து விருத்திராசுரனை அழித்தான் என்கிறது புராணம்.

Navaratri | Imge credit: Timesnow

பங்குனி அமாவாசைக்கு பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசியில் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி, ஆடியில் வரும் மஹா வாராஹி நவராத்திரி, புரட்டாசியில் சாரதா நவராத்திரி என நான்கு நவராத்திரிகள் சிறப்பாக சொல்லப்படுகின்றன.

Navaratri | Imge credit: Linkedn

காளியை மிகவும் ஆத்மார்த்தமாக வழிபடும் மேற்கு வங்கத்தினரை சக்தி வணக்கக்காரர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

Navaratri | Imge credit: Instagram

கொல்லூர் செல்லும் வழியில் கட்டீல் வனதுர்க்கை திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த துர்க்கை மிகவும் உக்கிரமானவள் என்பதால் அம்பிகையின் வெப்பத்தை தணிக்க நிமிஷத்துக்கு நிமிஷம் இளநீர் அபிஷேகம் செய்வர்.

navratri | Imge credit: Instagram

கேரளாவில் செடிகள் புதராக மண்டியிருக்கும் பனச்சிக்காடு சரஸ்வதி கோயிலில் பள்ளத்தையே சரஸ்வதி தேவியாக வழிபடுகிறார்கள்.

Saraswati temple | Imge credit: Citymapia

உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி 9 நாட்களும் சேலை உடுத்தி சிறப்பு பூஜை செய்கிறார்கள். இது மைசூர் மகாராஜாவின் கைங்கர்யம்.

Navaratri | Imge credit: Pinterest

ஆலயம், மடம், தியான பீடம், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை, அலுவலகங்களில் அனைவரின் நலனுக்காக பிரஜாபிரதிஷ்டை எனும் முறைப்படி க்ஷீசக்கரம் அமைத்தால், ஒற்றுமை தழைக்கும், வளங்கள் சேரும், அமைதி நிலவும்.

Navaratri | Imge credit: Wikipedia

பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என பலவகைப்பட்ட நவராத்திரிகள் உள்ளன.

Navaratri | Imge credit: PHOOL

இரண்டு கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் உள்ள அம்மனை ஊத்துக்கோட்டை சுருட்டபள்ளி நீலகண்டேஸ்வரர் கோவிலில் மட்டுமே காணலாம்.

Amman in Padmasana | Imge credit: sannidhi

குடந்தை திருநீலக்குடியில் அநூபமஸ்தனி, பத்ராபீஷ்டப்ரதாயினி என்ற பெயர்களில் இரண்டு அம்மன் சந்ததிகள் உள்ளன.

Thiruneelakudi | Imge credit: Rattibha

மிக குறைந்த உயரமுள்ள அம்மன் திருவண்ணாமலையில் அருளும் உண்ணாமுலை அம்மன்.

Unnaamulai amman | Imge credit: Pinterest

அம்மன் படுத்த கோலத்தில் பொள்ளாச்சி அருகே மாசாணியம்மன் ஆக காணலாம். 

Masaniyamman | Imge credit: en wikipedia

காயத்ரி தேவிக்கு மாடம்பாக்கம் யஷ்வந்த் நகரில் கோவில் உள்ளது.

navratri | Imge credit: Pinterest

ஷோடச லட்சுமிகளையந்திர ரூபமாக சேலையூர் அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் காணலாம்.

Abirami temple | Imge credit: en Wikipedia

வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அமர்ந்திருக்கும் அம்மனை திருமீயச்சூரில் லலிதா பரமேஸ்வரியாக தரிசிக்கலாம்.

Lalitha parameshwari | Imge credit: Pinterest

கர்நாடகா மாநிலத்தில் தார்வார் அருகே சௌதத்தி என்கிற குன்றில் அம்மனை ரேணுகாதேவி என்ற நாமத்தில் கழுத்து வரையிலான வடிவில் காணலாம்.

Renugadevi | Imge credit: Kamma sangamam (YT)

கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி சமயத்தில் மட்டும் திறக்கப்படும் வாசல் ஒன்று உள்ளது. அதற்கு நவராத்திரி வாசல் எனப் பெயர்.

Padaleeshwarar temple | Imge credit: Maalaimalar
healthy body
பெண்களே எச்சரிக்கை! இந்த காயை மட்டும் ஒதுக்காதீர்கள்!