வெள்ளத்தில் இருந்து ஊரைக் காப்பாற்றிய விநாயகர்... இவருக்கு இப்படி ஒரு பெயரா?

ஆர்.பிரசன்னா

திருப்புறம்பியம் பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் ஒரு குடம் தேன் அபிஷேகம் செய்கிறார்கள்.  

திருப்புறம்பியம் பிரளயங்காத்த விநாயகர் | Imge credit: Blogger.com

ஜப்பான் நாட்டில் வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆரத்தழுவிக் கொண்டிருப்பதை போல உருவம் கொண்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த இரு விநாயகர்களையும் வழிபட்டால் நீண்ட காலங்கள் வாழலாம் என்று நம்புகின்றனர்.

Vinayagar in Japan | Imge credit: booksfact

திருவண்ணாமலை ஆலயச் சுவரில் வீற்றிருக்கும் ஒரு ஜான் உயரமே கொண்ட விநாயகருக்கு 'ஆயிரம் யானை திரை கொண்ட விநாயகர்' என்று பெயர்.

திருவண்ணாமலை விநாயகர் | Imge credit: Pinterest

திருவையாற்றில் ஒரு சமையம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதை மக்களுக்கு உணர்த்த, விநாயகர் நள்ளிரவில் ஓலமிட்டு, ஊர்மக்களைக் காப்பாற்றினார். அதனால் இவருக்கு ஓலமிட்ட விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது.

ஓலமிட்ட விநாயகர் | Imge credit:தஞ்சயம்பதி

ஆடுதுறைக்கு அருகேயுள்ள ஊர் மருத்துவக்குடி. இங்கு உள்ள ஆலயத்தில் தேள் போன்ற வடிவமைப்பில் விருச்சிகப் பிள்ளையாராக அருள்கிறார்.

விருச்சிகப் பிள்ளையார் | Imge credit: hindutemplesonline.com

கேரள மாநிலத்தில் உள்ள மல்லியூர் திருத்தலத்தில் விநாயகர் உண்ணிக்கண்ணன் என்ற திருநாமம் பூண்ட கண்ணனை தனது இடது மடியில் அமர்த்திய நிலையில் தரிசனமளிப்பது வித்தியாசமான ஒன்றாகும்.

மல்லியூர் விநாயகர் | Imge credit: Malliyoor.org

திருச்சி உச்சிப்பிள்ளையாரை வழிபட்டு வலம் வரும் போது, ஏழாவதாக இருக்கும் பிள்ளையார், ஏழாப்பிள்ளையார் என அழைத்து காலப்போக்கில் மருவி ஏழைப்பிள்ளையார் என்றானது. இவர் சன்னதியில் இசைக்கலைஞர்கள் வணங்கினால் குரல் வளம் நீடித்திருக்கும் என்பது ஐதீகம்.

திருச்சி உச்சிப்பிள்ளையார் | Imge credit: Fnewsnow

மதுரை சுந்தரேஸ்வரர் கோவிலில் விநாயகர் புலிக்கால்களுடன் காட்சி தருகிறார்.

மதுரை சுந்தரேஸ்வரர் கோவில் விநாயகர் | Imge credit: Facebook

சேலம் மாவட்டம் ஆத்தூரில் தலையாட்டி விநாயகர் உள்ளார்.

ஆத்தூர் தலையாட்டி விநாயகர்

விருதுநகர் அருகே உள்ள திருச்சுழி சிவன் கோவிலில் தூணில் விநாயகரை தரிசிக்கலாம்.

திருச்சுழி சிவன் கோவில் விநாயகர் | Imge credit: Kulalkuravu thiagi

நாகர்கோவில் வடிவீஸ்வரம் கோவிலில் வீணை ஏந்திய கோலத்தில் விநாயகர் அருள்கிறார்.

வடிவீஸ்வரம் கோவில் விநாயகர் | Imge credit: Exotic Indian Art

திருநெல்வேலியை அடுத்த வாசுதேவநல்லூர் கோவிலில் வாள், கோடாரி தாங்கி விநாயகர் வீற்றிருக்கிறார்.

வாசுதேவநல்லூர் கோவில் விநாயகர் | Imge credit: Webdunia Tamil news
Vijayakanth
விஜயகாந்த் பேசிய பஞ்ச் வசனங்கள், படங்கள்!