ஆர்.பிரசன்னா
திருநீறு கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கி வந்தால், உஷ்ணத்தால் ஏற்படும் நோய்கள் தீரும்.
குங்குமம் கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், செவ்வாய் தோஷம் நீங்கும்.
சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி ஏற்படும்.
வெண்ணெய் கொண்டு பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.
வெல்லத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், உடலின் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் கரையும்.
வெள்ளெருக்கு இலையில் பிள்ளையார் உருவத்தை வரைந்து வைத்து வணங்கினால், பில்லி மற்றும் சூனியம் போன்ற தீவினைகள் அகலும்.
புற்று மண்ணால் பிள்ளையார் செய்து வழிபாடு செய்தால், விவசாயம் செழிக்கும்.
உப்பு கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால், எதிரிகளின் தொல்லை நீங்கும்.
சாணத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட, சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.