மழைக்காலத்தில் தொல்லை தரும் சேற்றுப்புண்: ஆறுவதற்கு சில டிப்ஸ்..!

எஸ்.ராஜம்

தேங்காய் எண்ணெயுடன் மஞ்சளைக் சேர்த்து, குளிப்பதற்கு முன்பு, காலில் தடவிக் குளித்தால் (Rainy season foot care tips) சேற்றுப்புண் வராது.

Coconut Oil + Turmeric Tip

உப்பு, கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. சேற்றுப்புண்ணுக்கு மருந்து பயன்படுத்துவதற்கு முன்பு உப்பு நீரை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அது முழுமையாக புண்ணை குணமாக்கும்.

Saltwater Cleaning

இடித்த பூண்டுடன் தேங்காய் எண்ணெய் கலந்து கால்களில் பயன்படுத்தலாம். சேற்றுப் புண் விரைவில் குணமாகும்.

Garlic and Coconut Oil Remedy

விரல் இடுக்குகளில் மருதாணி மற்றும் மஞ்சளை அரைத்து தடவி வர சேற்றுப்புண் ஆறிவிடும்.

Henna and Turmeric Paste

கடுக்காய் தூள், மாசிக்காய் தூள், தான்றிக்காய் தூள் போன்ற துவர்ப்புள்ள பொடிகளால் புண்ணை கழுவி சுத்தம் செய்தால், புண் விரைவில் ஆறி விடும்.

Herbal Powders

விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், மஞ்சள் பொடி கலந்து கால் விரல்களில் தடவி வர சேற்றுப்புண் ஆறும். குளிர்காலத்தில் வரும் கால் வலியும் கட்டுப்படும்.

Castor Oil Mix

குழந்தைகளுக்கு காலில் சேற்றுப்புண் வந்தால் வெண்ணெயை தடவினால், எரிச்சல் அடங்கும். 

Butter for Kids’ Foot Sores

உளுந்தம் பருப்பு, ரவை இரண்டையும் பொடித்து, எலுமிச்சை சாறு கலந்து, குழைத்து, சேற்றுப் புண்களில் தடவி ஒரு மணி நேரம் கழித்து துடைத்து, சிறிது கிளிசரின் தடவி வர ஒரு வாரத்தில் சேற்றுப்புண் ஆறும். கால் விரல்களும் மென்மையாகும்.

Black Gram + Rava + Lemon Remedy

காய்ச்சிய வேப்ப எண்ணெய் தடவி வர சேற்றுப்புண் குணமாகும்.

Neem Oil Mix

கீழாநெல்லி இலையை மஞ்சள் சேர்த்து அரைத்து சேற்றுப்புண் உள்ள இடத்தில் ஐந்து நாட்கள் இரவில் தடவிவர சேற்றுப் புண் ஆறிவிடும்.

Amla Leaf + Turmeric Paste
10 Unmissable Silk Sarees from India
பாட்டிகள் முதல் பேத்திகள் வரை: தலைமுறைகள் தாண்டி மிளிரும் இந்தியாவின் 10 பட்டுப் புடவைகள்!