எஸ்.ராஜம்
1/11. மண்பானையை சுற்றி ஈரத்துணியை நனைத்து பிழிந்து கட்டி விட, தண்ணீர் ஜில்லென்று இருக்கும்.
2/11. கற்கண்டு, தூய்மையான சந்தனம்,1டீஸ்பூன் இவற்றை வெற்றிலையோடு சாப்பிட வெயிலால் ஏற்படும் வயிற்று வலி,,சன்ஸ்ட்ரோக் உபாதைகளை வரவிடாமல் தடுக்கும்.
3/11. மருதாணி இலைகளை அரைத்து கை, பாதங்களில் வைத்து கொண்டு பின் கழுவி விட உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
4/11. படுக்கும் முன் உள்ளங்காலில் விளக்கெண்ணை தொட்டு மசாஜ் செய்து விட்டு படுக்க உடல்சூடு குறையும்.
5/11. சோப்பிற்கு பதில் நலுங்கு மாவு, பாசிப்பயறு மாவு உபயோகிக்க சரும நோய்கள் வராமல் இருக்கும்.
6/11. பவுடர், வியர்க்குரு பவுடர் போடாமல் மாய்ச்சுரைசர்,லோஷன் உபயோகிக்க உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு குளிர்ச்சியையும் தரும்.
7/11. வடிகஞ்சி, பழைய சோறு மோருடன் சேர்த்து அருந்த உடல் உஷ்ணம் ஏற்படாது. வெப்ப நோய்கள் வராது.
8/11. பல காய்கறி கூட்டு, கீரை கடையல் போன்றவை வயிற்றுக்கு இதமளிக்கும்.
9/11. இந்த கோடையில் அதிக காரம், மசாலா இல்லாமல் சாப்பிட வேண்டும்.
10/11. தர்பூசணி சாப்பிட இந்த சீசனில் உகந்தது என்றாலும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
11/11. வெள்ளரியை அப்படியே சாப்பிடுவது நல்லது. குழந்தைகளுக்கு , ரய்த்தாகவாக கொடுக்க உடல் குளிர்ச்சி அடைவதோடு மலச்சிக்கல் பிரச்சினை வராது.