அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணியில் 4 பேருக்கு கொரோனா!

அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணியில் 4 பேருக்கு கொரோனா!

மேற்கிந்திய தீவுகளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் கல்ந்துகொண்டுள்ள இந்திய அணியின் கேப்டன் யாஷ்துல் உள்பட 4 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது;

மேற்கிந்திய தீவுகளில் நடந்து வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. அதேபோல் 2-வது ஆட்டத்தில் நேற்று அயர்லாந்து அணியையும் வென்றது. ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும், வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப் படுகிறது. அந்தவகையில் நேற்றைய ரிசோதனையில் கேப்டன் யாஷ்துல் உடபட இந்திய அணி வீரர்கள் 4 பேருக்கு கொரோனா இருபப்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இப்போட்டியில்

இந்திய அணியில் 6 பேர் தேர்வு செய்யப்படவில்லை. மேலும் வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளர்கள், உடபட அனைவர் உடல்நிலை குறித்து தொடர்ந்து வாரியம் கண்காணித்து வருகிறது.

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com