பாலியல் தொல்லையால் தற்கொலை செய்த மாணவி: அதே பள்ளியின் ஆசிரியர் தற்கொலை!

பாலியல் தொல்லையால் தற்கொலை செய்த மாணவி: அதே பள்ளியின் ஆசிரியர் தற்கொலை!

கரூரில் தனியார் பள்ளி மாணவி பாலியல் தொல்லை காரணமாக இறப்பதாக தற்கொலை செய்துகொண்ட நிலையில் அதே பள்ளியின் கணித ஆசிரியர் இன்று தற்கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறீத்து திருச்சி, துறையூர் மாவட்டம் செங்காட்டுப்பட்டி போலீஸார் தெரிவித்ததாவது:

கரூரில் தனியார் பள்ளியின் ப்ளஸ்டூ வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 19-ம் தேதி மாலையில் பள்ளிலிருந்து வீடு திரும்பியதும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வெங்கமேடு போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, பாலியல் தொல்லை காரணமாக தான் தற்கொலை செய்து கொள்வதாக அந்த மாணவி கடைசியாக எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது. அவரது தற்கொலைக்கு கார்ணமானவர்களை கண்டறிய போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டது. இந்நிலையில் அநத மாணவி படித்த அதே பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் என்பவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டில் இன்று தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விபரமறிந்து போலீஸார் அங்கு விரைந்து, சரவணன் உடலை பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இறக்குமுன் சரவணன் எழுதிய கடிதத்தில் ''மாணவர்கள் என்னை தவறாக நினைக்கிறார்கள் எனக்கு அவமானமாக இருக்கிறது. நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் மாணவர்களை கோபத்தில் திட்டி இருக்கிறேனே தவிர வேறெந்த தவறூம் செய்யவில்லை. என்னை அனைவரும் மன்னித்து விடுங்கள்'' என எழுதியிருக்கிறார். மாணவியில் தற்கொலைக்கும் சரவணன் தற்கொலைக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

-இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாணவியின் தற்கொலைக்குக் . எனினும் தற்கொலைக்கு காரணமானவர்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தொய்வு ஏற்பட்டது.

இந்த சூழலில் அதே பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்த சரவணன் என்பவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை விவகாரத்தில், கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர் இவர்தானா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கணித ஆசிரியர் சரவணன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்த கடிதம் கிடைத்துள்ளது. அதில், என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்னை மன்னித்து விடுங்கள், உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன்.என்னை மாணவர்கள் அனைவரும் தவறாக நினைக்கிறார்கள் மாணவர்களின் முன் அவமானமாக இருக்கிறது. எனக்கு வாழ விருப்பமில்லை.

இன்று காலை வந்தவுடன் மாணவர்கள் என்னைத் தவறாகக்கூறுகின்றனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. ஏன் இப்படி கூறுகிறார் என்று தெரியவில்லை. நான் மாணவர்களை கோபத்தில் திட்டி இருப்பேன். அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். நன்றாக படியுங்கள். ஐமிஸ்யூ ஆல் என கடிதத்தை எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவி நவம்பர் 19ஆம் தேதி மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மாணவி எழுதிய கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், "பாலியல் துன்புறுத்தலால் சாகுறகடைசிப் பொண்ணு நானா தான் இருக்கணும். என்னையார் இந்த முடிவை எடுக்கவைச் சாங்கன்னு எனக்குச் சொல்ல பயமா இருக்கு என தெரிவித்துஇருந்தார். இந்த சம்பவத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்ததுடன் குற்றவாளியை கண்டுபிடித்து உடனே கைது செய்ய வேண்டும் என கோரிக்கைவைத்தனர்.

இந்நிலையில் மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் என்பவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகேசெங்காட்டு ப்பட்டியில் உள்ளதனது மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துளனர்.

தற்பொழுது ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில் என்னை மாணவர்கள் அனைவரும் தவறாக நினைக்கிறார்கள் எனக்கு அவமானமாக இருக்கிறது. நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் மாணவர்களை கோபத்தில் திட்டி இருக்கிறேன். அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள் என கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com