பிரியாணி பாத்திரமே தோணி: கரைசேர்ந்த காதல் ஜோடி!

பிரியாணி பாத்திரமே தோணி: கரைசேர்ந்த காதல் ஜோடி!

கேரளாவில் சமையல் பாத்திரங்களை தோணியாகப் பயன்படுத்தி கோயிலுக்கு சென்று திருமணம் செய்த காதல் ஜோடி, வைரலாகியுள்ளது.

கேரளா அம்பலப்புழாவைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும் தகழி நகரைச் சேர்ந்த ஆகாஷும் காதலர்கள். இருவரும் செங்கனூரில் மருத்துவச் சுகாதாரப் பணியாளர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு

ஆலப்புழா மாவட்டம் தாளவாடி பண்ணையூர்காவு கோயலில் நேற்று (அக்டோபர் 18) திருமணம் நடப்பதாக முடிவாகியது. இருவரும் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி கடந்த 5-ம் தேதியே பதிவுத் திருமணம் செய்துகொண்டாலும் முறைப்படி கோயிலில் மாலை மாற்றி, தாலி கட்டித் திருமணம் செய்ய இருவரும் விரும்பினர். இந்நிலையில் கேரளாவில் கடந்த 3 நாட்களாக கொட்டித் தீர்க்கும் கனமழையால், கோயிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று மணமகன் ஆகாஷ், மணமகள் ஐஸ்வர்யா இருவரும் கோயில் சார்பில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பெரிய அலுமினியப் பாத்திரங்களை தோணியாகப் பயன்படுத்தி அழைத்து வரப்பட்டனர். பினர் கோயிலில் சம்பிரதாய முரைப்படி இருவரும் மாலை மாற்றி திருமணம் முடித்தனர். சமையல் பாத்திரத்தில் அமர்ந்து வந்து இந்த ஜோடி திருமணம் செய்தது கேரளாவில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com