பட்ஜெட் 2022; நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி அறிக்கை தாக்கல்!

பட்ஜெட் 2022;  நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி அறிக்கை தாக்கல்!

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கிய நிலையில், இன்று மத்திய நிதியமைச்சர் நிமலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 10-வது மத்திய பட்ஜெட் தாக்கல் இது! அதையடுத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது;

இந்த ஆண்டிற்கான பட்ஜெட் புதிய இந்தியாவுக்கான பட்ஜெட்டாக இருக்கும். கொரோனா காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது.எந்தவித பொருளாதார சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். கொரோனா பரவலால் சரிவடைந்த பொருளாதாரத்தை சரிசெய்து வருகிறோம்.

உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.2% ஆக இருக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

ரயில்வே, கனரக தொழில் உள்ளிட்ட 15 துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.போக்குவரத்து கட்டமைப்பு துறையின் மேம்பாட்டிற்காக ரூ.20,000 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.தொழில்துறை உற்பத்தியை ஊக்குவிக்க கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும்.

நாடு முழுவதும் 4 இடங்களில் சரக்கக பூங்காக்கள் அமைக்கப்படும்.

அடுத்த 3 ஆண்டுகளில் 4000 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும். சிறு தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக ரயில்வே துறையில் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக 2.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் தானியங்களின் அளவு அதிகரிக்கப்படும்.

நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் 25,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரிவுபடுத்தப்படும்.

-இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com