
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நடுத்தர வர்கத்தின் குடும்பச் சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது. அவ்வகையில் கடன் வாங்கிவிட்டு தவிக்கும் இந்தியர்கள் எத்தனை சதவிகிதம் பேர் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
இன்றைய பொருளாதார உலகில் கடன் வாங்குவது மிகவும் எளிதாகி விட்டது. வங்கியில் தனிநபர் கடனை வாங்க நாம் எங்கும் அலைய வேண்டிய அவசியம் இப்போது இல்லை. அந்த அளவிற்கு கடன் வழங்குதலை எளிதாக்கி விட்டன வங்கிகள். இதனால் தான் என்னவோ, இன்று கடனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.