பங்கு வெளியீட்டு விதிமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ள செபி!

SEBI.
SEBI.

பங்கு வெளியிட்டு விதிமுறையை விரைவுபடுத்தி, மாற்றம் செய்துள்ளது செபி.

பங்குச்சந்தை வெளியீடு தொடர்பான கால நிலையில் புதிய மாற்றத்தை பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி அறிவித்திருக்கிறது. இது பங்குச் சந்தையை சீராக்கும் நடவடிக்கையாகவும், முதலீட்டாளர்களுக்கான நம்பிக்கையை வலுப்படுத்தும் நடவடிக்கையாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய மாற்றத்தின் மூலம் பங்குச்சந்தை நடவடிக்கைகள் விரைவாக்கப்படுவதோடு முதலீட்டாளர்களும் நிறுவனங்களும் பயனடைய ஏதுவான சூழல் உருவாகும். இவ்வாறு புதிதாக ஒரு நிறுவனம் பங்குகளை வெளியிடும்போது 6 நாட்கள் அவற்றை பட்டியலிட வேண்டும்.

செப்டம்பர் மாதம் முதல் 3 நாட்கள் தன்னார்வ அடிப்படையில் பட்டியலிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பங்குகளை பட்டியலிட விரும்பும் நிறுவனங்கள் விரைவான நடவடிக்கையில் ஈடுபட இந்த மாற்றம் வழிவகிக்கிறது. பங்குகளை வெளியீட்டு விரைவில் நிதி பெற முடியும். முதலீட்டாளர்கள் பங்குகளை வெளியிட்டதற்கான சான்றிதழை விரைவாக நிறுவனங்களிடமிருந்து பெற முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com