விஜய் டி.வி.யில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒரே வீட்டில் வித்தியாசமான மனநிலைகளை கொண்ட மனிதர்கள் எந்தவிதமான தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் சக மனிதர்களுடன் நடந்துக் கொள்ளும் விதம் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக 6 சீசன்களை கடந்து 7வது சீசனில் காலடி எடுத்து வைக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் புதுபுது அப்டேட்கள் மூலம் “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என ரசிகர்களை எப்படியாவது கட்டிப்போட்டுவிடும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கியுள்ளது. இதில் வரும் ஸ்மால் பாஸ், பிக்பாஸ் வீடு கான்சப்ட் பலரையும் ரசிக்க செய்துள்ளது. இதில், 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதுவரை அனன்யா முதல் வாரம் எலிமினேட் ஆன நிலையில், பவா செல்லத்துரை தானாக வெளியேறினார். 2 பேர் வீட்டை விட்டு வெளியேறியதால் ஒருவர் வைல் கார்டு மூலம் தற்போது உள்ளே வரபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மிகவும் பிரபலமான ’ஓர கண்ணால என்ன ஓரங்கட்டுரா’ பாடல் புகழ் கானா பாலா தான். வைல்ட் கார்ட் எண்ட்ரியாக இவரைத்தான் உள்ளே அனுப்பப்போகிறார்கள் என்ற தகவல் இணையத்தில் வைரலாக பரவி மக்களை அலெர்ட் மோடிலேயே வைத்துள்ளது. ஏற்கனவே சண்டை, சச்சரவுகள், கலேபரம் என சென்று கொண்டிருக்கும் வீட்டில் இவரது எண்ட்ரி எப்படி இருக்கும் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.