மாமனாரை வெட்டிய பிரசாந்த்.. கைதான ஜீவா.. ஷாக்கில் மீனா! அடுத்து நடக்கபோவது என்ன?

பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ்

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தக் குடும்பத்தின் நான்கு சகோதரர்களுக்கும் திருமணமாகி விறுவிறுப்பாக கதைக்களம் நகர்ந்து கொண்டிருந்த நிலையில், அந்தக் குடும்பத்தின் மூன்று மருமகள்களும் குழந்தைப் பெற்று உள்ளனர்.

அந்தக் குடும்பத்தின் மூத்த மருமகள் தனத்துக்கு திடீரென மார்பகப் புற்றுநோய் வந்தது. இந்த விஷயம் ஐஸ்வர்யாவால் அனைவருக்கும் தெரிய வர, ஒருவழியாக அனைவரும் அழுது ஓய்ந்து தற்போது ஆறுதல் சொல்லும் நிலைக்கு தெம்பாகியுள்ளனர். கடந்த வாரத்திற்கு முன்பு வரை பிரஸ்ட் கேன்சர் விஷயம் வீட்டுக்கு தெரிந்தால் என்னவாகும் என்று கதை சென்று கொண்டிருந்த நிலையில் ஒருவழியாக தெரிந்துவிட்டது.

இது ஒரு புறம் இருக்க மாமனாரின் காசெல்லாம் கரைகிறதே, மாமனாரை பிரசாந்த் ஏமாற்றுகிறாரே என்ற வருத்தத்தில் ஜீவா இருந்துள்ளார். இந்த நிலையில் ஜீவா பிரசாந்தை நேரடியாக பார்த்து மாமனாரை ஏமாற்ற வேண்டாம் என கண்டிக்கிறார். அதற்கு பிரசாந்த் அப்படி தான் செய்வேன் என அடிக்க பாய்கிறார். கேட்டதற்கு உன் மாமனார் தான் அடிக்க சொல்கிறார் என கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த ஜீவா நல்லது நினைத்த எனக்கா இந்த நிலை என மனம் நொந்தார்.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான புரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில் பிரசாந்த் குறித்த உண்மையை அறிந்த மாமனார், பிரசாந்திடம் காசை கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்த் மாமனாரை கத்தியால் குத்தி யாரோ குத்தி விட்டார்கள் என போலீசாரிடம் நடிக்கிறார். பிறகு போலீசார் ஜீவாவையும், கதிரையும் கைது செய்கின்றனர். அப்போது மீனா அதிர்ச்சியில் உறைகிறார். உண்மை தெரியவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com