சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்!

சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்!

நாதஸ்வரம் தொடரில் நடித்து பிரபலமடைந்த கோவையைச் சேர்ந்த நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா, தொடந்து வாணி ராணி, கல்யாணப்பரிசு தொடங்கி பாரதி கண்ணம்மா வரை பல தொடர்களில் நடித்துள்ளார்.

இவரது கணவர் அரவிந்த் சேகர் பிரபல பாடி பில்டர். அது மட்டுமின்றி ஜிம் ட்ரெய்னராகவும் வலம் வந்த அரவிந்த் தன் உடலை கட்டுக்கோப்பாகப் பேணுவதில் நாட்டம் கொண்டவர். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு தங்கள் ரசிகர்களை இந்தத் தம்பதி மகிழ்வித்து வந்தனர்.

இவர்கள் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த நிலையில், வீட்டில் இருந்த போது அரவிந்த் சேகருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் கொண்ட அரவிந்த் திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான ஒரே வருடத்தில் அரவிந்த் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உயிரிழப்புக்கு அதிகமாக ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டதுதான் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுபோல் ஆணழகன் போட்டிக்கு தயாராகும் பலரும் அளவுக்கு அதிகமாக சப்ளிமெண்டரி எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்தை கெடுப்பதுடன், கிட்னி போன்ற உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனாவுக்குப் பிறகு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளதாக  இதய சிகிச்சை மருத்துவர்கள் கூறுகின்றனர். தொடர் பரிசோதனைகள் மூலம் ரத்தம் உறைதல் பிரச்னையை கண்டறிந்தால், மாரடைப்பை தடுக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com