காதலியை கரம்பிடித்தார் நடிகர் அசோக் செல்வன்..!

AshokSelvan,Keerthipandian
AshokSelvan,Keerthipandian

டிகர் அசோக் செல்வன் தனது நீண்டநாள் காதலியும் நடிகர் அருண் பாண்டியன் மகளுமான கீர்த்தி பாண்டியனை இன்று திருமணம் செய்துக்கொண்டார்.

சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமானவர் அசோக் செல்வன். சோலோ ஹீரோவாக தெகிடி படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. பின்னர் ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், பிசாசு, மன்மத லீலை, நித்தம் ஒரு வானம் என அடுத்தடுத்து அவரது பல படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.சமீபத்தில் வெளியான போர்த்தொழில் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாகவே அமைந்தது என சொல்லலாம்.

இந்த நிலையில், நடிகர் அசோக் செல்வன், நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்கள் சம்மதத்துடன் இன்று காலை திருநெல்வேலியில் ஜோராக இருவருக்கும் திருமணம் முடிந்தது.

நடிகர் அருண் பாண்டியன் இணைந்த கைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். இன்றும் அவரது சில படங்கள் 80ஸ் கிட்ஸின் ஃபேவரிட்டாகும்.இவரது மகள்தான் கீர்த்தி பாண்டியன். இவர் தும்பா, அன்பிற்கினியாள் படங்களில் நாயகியாக நடித்தார். இவரும் நடிகர் அசோக் செல்வனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர்.

இந்தக் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்நிலையில, இருவருக்கும் இன்று திருமணம் முடிந்தது. கீர்த்தி பாண்டியன் ரம்யா பாண்டியனின் சித்தப்பா மகளும் ஆவார். தங்கையின் திருமணத்தில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படத்தை பகிர்ந்து வெல்கம் புது மாப்பிள்ளை என அசோக் செல்வனை வரவேற்றுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com