திருமணத்துக்கு தயாரான அடுத்த பிரபலம்! இதற்காக யாரை சந்தித்து வந்தார் தெரியுமா?

திருமணத்துக்கு தயாரான அடுத்த பிரபலம்! இதற்காக யாரை சந்தித்து வந்தார் தெரியுமா?

கோலிவுட்டில் பல முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளளது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். விஜய், சூர்யா, விக்ரம், மகேஷ் பாபு என பிரபல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வலம் வரும் கீர்த்தி சுரேஷ், 'அண்ணாத்த' படத்தில் சூப்பர் ஸ்டாரின் பாசத்திற்குரிய தங்கையாகவும், 'சாணி காயிதம்' படத்தில் எதிரிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியவர்களை பழிவாங்கும் பெண்ணாகவும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளள 'மாமன்னன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கான வேலைகள் தற்போது முடிந்துள்ள நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் திருநெல்வேலியில் உள்ள அவரது பாரம்பரிய வீட்டிற்கு சென்று வந்த நிலையில், அவருக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பபதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷின் பூர்விகம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடி கிராமமான திருக்குறுங்குடி ஆகும். அங்கு தன்னுடைய பூர்வீக வீட்டுக்கு சென்றதோடு மட்டுமில்லாமல், தங்களுடைய சக்திமிக்க குலதெய்வக் கோவிலுக்கும் சென்று வந்துள்ளார். இந்நிலையில், அவர் கோவிலுக்கு சென்றுவந்தது ஆன்மிக பயணமாக இல்லாமல், சாமியை தரிசனம் செய்ததாேடு, அவருடைய திருமணம் நல்லபடியா நடக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுவதற்காகவும்தான் சென்று வந்துள்ளதாகவும் தகவல் அறியப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், தற்போது இன்னும் சில படங்களில் கமிட் ஆகியுள்ளள கீர்த்தி சுரேஷ் அதன்பின்னர் நடிப்பதை விட்டுட்டு, தயாரிப்பில்தான் அதிகளவு ஈடுபாடு காட்டுவார் என்றும் தகவல்கள் அறியப்படுகின்றன.

ஆனால், இது சம்பந்தமாக கீர்த்தி சுரேஷ் குடும்பத்தின் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவராத நிலையில் விரைவில் இதுகுறித்து தெரியவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com