ஜூன் 9-ம் தேதி நயன்தாரா திருமணம்: திருப்பதியில் ஏற்பாடுகள் தீவிரம்!

ஜூன் 9-ம் தேதி நயன்தாரா திருமணம்: திருப்பதியில் ஏற்பாடுகள் தீவிரம்!

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

நேற்று காலை திருப்பதி ஆலயத்தில் விஐபி தரிசனத்தில் நடிகை நயன்தாரா அவரது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இணைந்து சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் நயந்தாராவுடன் இணைந்து செல்பி எடுப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு சென்றனர்.

பின்னர் நயந்தாராவும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து கோவில் முன்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டனர். கடந்த வாரம் நயன்தாராவிக்னேஷ் சிவன் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த நிலையில் மீண்டும் இந்த வாரம் ஏழுமலையானை சாமி தரிசனம் செய்தனர்

இது குறித்து நயந்தாரா – விக்னேஷ் சிவன் சார்பாக அவருடன் வந்தவர்கள் கூறியதாவது:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற ஜூன் 9-ம் தேதி நயந்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமண்ம் நடக்கவுள்ளது. திருமலையில் சன்னதிக்கு அருகேயுள்ள ஒரு மடத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். நயன்தாராவும் விக்னேஷூம்  நீண்டகாலம் இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வரும் நிலையில் அவர்கள் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் இந்த நட்சத்திர ஜோடி ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com