– மாலதி சந்திரசேகரன்.சுமங்கலிகளால் மேற்கொள்ளப்படும் முக்கியமான விரதம் என்றால் அது காரடையான் நோன்புதான். இந்த நோன்பிற்கு, தாலி நோன்பு, காமாட்சி நோன்பு, சாவித்திரி நோன்பு, கௌரி நோன்பு என்று பல பெயர்கள் உண்டு. ஒவ்வொரு வருடமும் மாசி மாதக் கடைசி நாளில், பங்குனி மாதம் பிறக்கும் நாளில், அதாவது மாசியும் பங்குனியும் கூடும் நாளில் (14.3.2022) சுமங்கலிகளால் நோற்கப்படும் ஒரு விரதம் இது என்பது எல்லோருக்கும் தெரியும். இதை, மாசி பங்குனி கூடும் நோன்பு என்றும் கூறுவார்கள்..அஸ்வபதி என்னும் மன்னனுக்கு வெகு நாட்கள் குழந்தை இல்லாமல் இருந்தது. அவன் நிறைய தான தர்மங்கள் செய்து வந்தான். பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அனைத்து சாமுத்திரிகா லட்சணங்களும் கொண்ட பெண்ணாக இருந்ததால், அக்குழந்தைக்கு சாவித்திரி என்று பெயரிட்டான்..ஒருமுறை நாரதர் அஸ்வபதி மன்னனைக் காண வந்தார். அப்பொழுது அவர் சாவித்திரியின் எதிர்காலத்தைப் பற்றிக் கூறினார். அதாவது அவர், 'சாவித்திரியானவள் சத்தியவானை மணந்து கொள்வாள். ஆனால், சத்தியவான் இளம் வயதிலேயே இறந்து விடுவான்' என்று கூறினார்..நாரதர் கூறியபடி, தக்க வயதில் சாவித்திரி, சத்தியவானை மணந்து கொண்டாள். அவளுக்கு தன்னுடைய தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும் என்கிற எண்ணம் உறுதியாக இருந்ததால், நிறைய விரதங்களை மேற்கொண்டாள்..அயல்நாட்டு அரசனால் சத்தியவானின் நாடு பிடிபட்டு, அவனும் சாவித்திரியும் ஒரு காட்டில் வசித்து வந்தார்கள். இருவருமே விறகு சேகரித்து வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். காடாக இருந்தபொழுதிலும் சாவித்திரி, தான் நோன்பு நோற்கும் பழக்கத்தை விடாமல் அனுஷ்டித்து வந்தாள்..ஒரு நாள் சாவித்திரியின் மடியில் சத்தியவான் தலை வைத்துப் படுத்திருந்தான். அப்பொழுது எமதர்மராஜன் பாசக்கயிற்றுடன் வந்து, சத்தியவானின் உயிரைப் பறித்துச் சென்றான். நிலைகுலைந்து போன சாவித்திரி, என்ன செய்வது என்று புரியாமல் சத்தியவானின் தலையைத் தரையில் வைத்துவிட்டு, எமதர்மராஜனைத் தொடர்ந்து சென்றாள். ஒவ்வொரு லோகமாகக் கடந்து கடந்து எமலோகம் வரை சென்று விட்டாள். வழிநெடுகிலும், 'என் கணவரின் உயிரைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்' என்கிற கோரிக்கையை வைத்தவண்ணமே சென்றாள்..எம பட்டணத்தின் வாயிலை அடைந்த எமதர்மன், அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். அவர் சாவித்திரியிடம், "நீ திரும்பிப் போய்விடம்மா. எடுத்த உயிரைத் திருப்பிக் கொடுக்கும் பழக்கம் கிடையாது. காலனான நான், யார் கண்ணிற்கும் தெரிய மாட்டேன். நீ மகா பதிவிரதையாக இருப்பதினால் உன் கண்களுக்கு மட்டும் தெரிந்து விட்டேன். அந்த ஒரு மேன்மையான சக்தி உன்னிடம் இருப்பதால், உனது கணவனின் உயிருக்கு பதிலாக நீ என்ன வரங்கள் வேண்டுமானாலும் கேள் தருகிறேன்" என்றார்..அதற்கு சாவித்திரி, "எனக்கு மூன்று வரங்கள் வேண்டும். ஒன்று கண் பார்வை இல்லாத என் கணவரின் பெற்றோருக்கு மீண்டும் பார்வை கிடைக்க வேண்டும். இரண்டு இழந்த நாட்டை மீண்டும் என் கணவர் பெற வேண்டும். மூன்றாவதாக, நான் மகா பதிவிரதை என்று நீங்களே கூறினீர்கள். அப்படிப்பட்ட எனக்கு புத்திசாலியாகவும், பலசாலியாகவும் திகழும் மக்கட்பேறு அமைய வேண்டும்" என்று கேட்டாள்..உடனே, "ததாஸ்து" என்று பதில் கூறினார் எமதர்மன். அதாவது, 'அப்படியே தந்தேன்' என்று அதற்குப் பொருள். சாவித்திரி செய்த நோன்புகள் அப்பொழுது அவளுக்குக் கைகொடுத்தன. ஆம்… அவள் வழிபட்ட அம்பிகையானவள், எமதர்மனின் மனத்தில் புகுந்து அப்படி ஒரு பதிலைச் சொல்ல வைத்தாள் என்றுதான் நினைக்க வேண்டும்..மீண்டும் சாவித்திரி காட்டிற்குத் திரும்பியபோது, அவளது கணவர் சத்தியவான் தூக்கத்தில் இருந்து எழுவது போல எழுந்து இருப்பதைக் கண்டு பேரானந்தம் கொண்டாள். அதற்கு அம்பிகைக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சாவித்திரி என்ன செய்தாள் தெரியுமா?.காட்டில் மண்ணினால் ஒரு உருவத்தைச் சமைத்து, அதில் அம்பிகையை ஆவாஹனம் செய்தாள். காட்டில் கிடைத்த கார் அரிசியையும், துவரையையும், பூக்களில் கிடைத்த தேனையும் வைத்து இனிப்பு மற்றும் உப்பு அடை செய்து, மரப்பாலை வெண்ணையாக பாவித்து, மரப்பட்டைகளில் சரடு திரித்து அம்பாளுக்குச் சாத்தி, அங்கிருந்த பூக்களால் அர்ச்சித்து, அடைகளை நைவேத்யம் செய்தாள். இது நடந்தது ஒரு மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் வேளையில்தான். எமதர்மனின் வாக்குப்படி அவள் கேட்ட அனைத்து வரங்களும் கை கூடின. நூறு மக்களைப் பெற்று, சத்தியவானும் சாவித்திரியும் அமோகமாக வாழ்ந்தார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன..இந்தக் கதையை ஒவ்வொரு வருடமும் படிக்கிறோம் அல்லது கேட்கிறோம். அதன் பயன் என்ன தெரியுமா? இக்கதையைப் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், ஆண்களாக இருந்தால் ஆயுள் கூடும். பெண்களாக இருந்தால் சுமங்கலித்துவம் நீடிக்கும் என்பது ஐதீகம். செவ்வாயன்றும், வெள்ளியன்றும் 'சாவித்திரி பாடம்' என்று கூறப்படும் இப்புராண சம்பவத்தைப் படித்தல், கேட்டல் எதுவாக இருந்தாலும், குடும்பத்திற்கு சுபிக்ஷத்தைத் தரும்..சாவித்திரி கார் அரிசியைக் கொண்டு அடை செய்து வழிபட்டதால், 'காரடையான் நோன்பு' எனப்படுகிறது என்கிற செய்தி ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு தகவலும் கூறப்படுகிறது. அதாவது, கார் என்றால் கருமை அல்லது இருட்டு என்று பொருள். எமலோகம் என்பது, இருள் சூழ்ந்ததாக இருக்கும் என்று அறியப்படுகிறது. காரடையான் என்றால், 'என் கணவர் இருள் சூழ்ந்த யம பட்டணத்தை அடைய மாட்டார்' என்று பெண்களுக்கு சுமங்கலித்துவம் பற்றிய ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது..இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், முதல் நாளே பூஜை அறையைச் சுத்தம் செய்து, படங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூஜை பாத்திரங்களை நன்றாகத் தேய்த்து பூஜைக்குத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். விரதம் அனுஷ்டிப்பவர்கள், நோன்பு நேரம் வரை எந்த ஆகாரமும் சாப்பிடக் கூடாது. சில சமயங்களில் இரவு நேரங்களில் கூட நோன்பு அமையும். முக்கியமாக மோர், தயிர் போன்ற புளிப்புப் பொருட்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மருந்து உட்கொள்பவர்கள் பால் பழங்கள் சாப்பிடலாம்..பூஜை சமயத்தில் படங்களுக்கு வாசமான புஷ்பங்கள் சாத்தி, நோன்புச் சரட்டில் ஒரு வாசனை புஷ்பத்தை நடுவில் வைத்துத் தொடுத்து வைக்க வேண்டும். முக்கியமாக, காமாட்சி அம்மன் படம் இருந்தால் நல்லது. அப்படி இல்லாவிடில் எந்த அம்பாளாக இருந்தாலும், குலதெய்வம் பெண் தெய்வமாக இருக்கும் பட்சத்தில், அந்தப் படத்தையும் வைத்து, பூஜை செய்ய வேண்டும். வீட்டில் எத்தனை சுமங்கலிகள், பெண் குழந்தைகள் இருக்கிறார்களோ, எத்தனை பெண் தெய்வங்களுக்கு சரடு சாத்த வேண்டும் என்கிற கணக்கை வைத்து, அந்தக் கணக்கில் சரடினை வாங்கி பூ வைத்துத் தொடுத்து, வெற்றிலைப் பாக்குடன் வைத்துக் கொள்ளவும். முன்பெல்லாம் நோன்புச் சரடை வீட்டிலேயே தயார் செய்வார்கள். சரடு கிடைக்காதவர்கள் இப்படிச் செய்துகொள்ளலாம்..பூ தொடுக்கும் நூல் என்று கடைகளில் இருக்கும். அதில் பல இழைகள் சேர்ந்து இருக்கும். ஒற்றை இழை இருக்கும் நூலை உபயோகப்படுத்தக்கூடாது. நூலை தேவைப்படும் நீளத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மஞ்சள் பொடியை சிறிது நீர் சேர்த்துக் குழைத்து, சரடில் நன்றாகத் தடவி, திரிப்பது போல் இரண்டு கைகளாலும் தேய்த்து, ஒற்றைச் சரம் போல் ஆக்கி ஈரம் போக வைக்க வேண்டும். நாமே நம் கையால் தயாரிக்கும் நோன்புச் சரடு என்பது எவ்வளவு உயர்வானது..மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யம் அணிந்திருக்கும் சுமங்கலிகள், மாசி மாத கடைசி நாளன்று, மாசி இருக்கும்பொழுதே, மங்கல நாணை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ராகு காலம், எமகண்டம் இல்லாமல் திருமாங்கல்ய சரடினை மாற்றிக்கொள்ளலாம்..சிலருக்கு கலசம் வைத்து பூஜிக்கும் பழக்கம் இருக்கும். அவர்கள் கலசத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்து, மாவிலையைச் சொருகி, மஞ்சள் தடவி, சந்தன குங்குமம் வைத்த தேங்காயை வைக்க வேண்டும். வரலட்சுமி பூஜைக்கு செய்வதைப் போல் கலசத்திற்கு வஸ்திரமும் பூச்சரமும் சாத்த வேண்டும். எந்த பூஜையாக இருந்தாலும் முதலில் கணபதிக்கு பூஜை செய்துவிட்டுதான் ஆரம்பிக்க வேண்டும்..நல்ல நுனி இலையாக, ஒற்றை இலக்கு எண்ணில் அல்லாமல், வீட்டில் உள்ள சுமங்கலிகளைக் கணக்கு வைத்து, இரட்டை இலக்கில் அம்பாளுக்கு இடது கைப்பக்கம் நுனி இருக்குமாறு இலையைப் போட்டு, இரண்டு உப்பு அடை, இரண்டு இனிப்பு அடை, வெண்ணெய்யையும் வைத்து, 'உருகாத வெண்ணெய்யும் ஓர் அடையும் உனக்கு நான் தருகிறேன். ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டுப் பிரியாது இருக்க வேண்டும்' என்கிற மந்திரத்தைக் கூறி, நைவேத்தியம் செய்ய வேண்டும். பிறகு சரடினை எடுத்து, முதலில் காமாட்சி அம்மனுக்கும், பிற பெண் தெய்வங்களுக்கும் கட்டிவிட்டு, பிறகு கணவர் கைகளால் சுமங்கலிகள் கட்டிக் கொள்ளலாம். அல்லது வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்கள் கையால் கழுத்தில் நோன்புச் சரடு கட்டிக் கொள்ளலாம்..உபவாச நேரத்தில், ஸ்ரீ காமாக்ஷி விருத்தம் படிப்பது மிகவும் நல்லது. காமாக்ஷி விருத்தத்தில் அம்மனை உச்சி முதல் பாதம் வரை வர்ணித்து கூறியிருக்கும் அழகே மிகவும் நன்றாக இருக்கும். உபவாசத்தின்பொழுது அம்பாள் சம்பந்தப்பட்ட பாட்டுக்கள் அல்லது ஸ்லோகங்களைக் கூறலாம். தூப, தீபம் காட்டி பூஜை முடிந்தவுடன் ஆரத்தி எடுக்க வேண்டும். ஆரத்தியில் மஞ்சளும், குங்குமமும் கலந்து வைத்து எடுக்க வேண்டும். அம்பாளுக்கு ஆரத்தி எடுக்கும்பொழுது, அதில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது..மறுநாள் புனர் பூஜை செய்து, ஏதாவது ஒரு நைவேத்தியம், குறைந்த பட்சம் பாலாவது நைவேத்தியம் செய்து, தூப தீபம் காட்டி, மீண்டும் ஆரத்தி எடுக்க வேண்டும். பிறகு, கலசத்தை வடக்கு நோக்கி நகர்த்தி வைக்க வேண்டும். நோன்பு அன்று சுமங்கலிகளுக்கு மங்கலகரமான பொருட்களை வைத்து தாம்பூலம் கொடுக்க வேண்டும். வெற்றிலைப் பாக்கு, பழம், புஷ்பம், மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, வளையல், ரவிக்கைத் துணி இவற்றை வைத்தாலும், ஒரு ரூபாய் நாணயமாவது அதில் வைக்க வேண்டும். நாணயம் இல்லாமல் வெற்றிலைப் பாக்கு கொடுக்கக் கூடாது..இந்து பண்டிகைகளுக்குத்தான் எத்தனை ஒரு மகத்துவம். காலம் காலமாய் செய்துவரும் இத்தனை மேன்மை பொருந்திய இந்தத் தாலி நோன்பை, சுமங்கலிகள் சிரத்தையுடன் அனுஷ்டிப்பதால், கணவர் நோய் நொடியில் விழாமல் இருப்பதோடு நிறைந்த ஆயுளுடன் இருப்பார் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. எல்லா சுமங்கலிகளுக்கும் காமாட்சி அம்மனின் அனுக்கிரகம் பரிபூரணமாகக் கிடைக்கட்டும்.
– மாலதி சந்திரசேகரன்.சுமங்கலிகளால் மேற்கொள்ளப்படும் முக்கியமான விரதம் என்றால் அது காரடையான் நோன்புதான். இந்த நோன்பிற்கு, தாலி நோன்பு, காமாட்சி நோன்பு, சாவித்திரி நோன்பு, கௌரி நோன்பு என்று பல பெயர்கள் உண்டு. ஒவ்வொரு வருடமும் மாசி மாதக் கடைசி நாளில், பங்குனி மாதம் பிறக்கும் நாளில், அதாவது மாசியும் பங்குனியும் கூடும் நாளில் (14.3.2022) சுமங்கலிகளால் நோற்கப்படும் ஒரு விரதம் இது என்பது எல்லோருக்கும் தெரியும். இதை, மாசி பங்குனி கூடும் நோன்பு என்றும் கூறுவார்கள்..அஸ்வபதி என்னும் மன்னனுக்கு வெகு நாட்கள் குழந்தை இல்லாமல் இருந்தது. அவன் நிறைய தான தர்மங்கள் செய்து வந்தான். பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அனைத்து சாமுத்திரிகா லட்சணங்களும் கொண்ட பெண்ணாக இருந்ததால், அக்குழந்தைக்கு சாவித்திரி என்று பெயரிட்டான்..ஒருமுறை நாரதர் அஸ்வபதி மன்னனைக் காண வந்தார். அப்பொழுது அவர் சாவித்திரியின் எதிர்காலத்தைப் பற்றிக் கூறினார். அதாவது அவர், 'சாவித்திரியானவள் சத்தியவானை மணந்து கொள்வாள். ஆனால், சத்தியவான் இளம் வயதிலேயே இறந்து விடுவான்' என்று கூறினார்..நாரதர் கூறியபடி, தக்க வயதில் சாவித்திரி, சத்தியவானை மணந்து கொண்டாள். அவளுக்கு தன்னுடைய தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும் என்கிற எண்ணம் உறுதியாக இருந்ததால், நிறைய விரதங்களை மேற்கொண்டாள்..அயல்நாட்டு அரசனால் சத்தியவானின் நாடு பிடிபட்டு, அவனும் சாவித்திரியும் ஒரு காட்டில் வசித்து வந்தார்கள். இருவருமே விறகு சேகரித்து வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். காடாக இருந்தபொழுதிலும் சாவித்திரி, தான் நோன்பு நோற்கும் பழக்கத்தை விடாமல் அனுஷ்டித்து வந்தாள்..ஒரு நாள் சாவித்திரியின் மடியில் சத்தியவான் தலை வைத்துப் படுத்திருந்தான். அப்பொழுது எமதர்மராஜன் பாசக்கயிற்றுடன் வந்து, சத்தியவானின் உயிரைப் பறித்துச் சென்றான். நிலைகுலைந்து போன சாவித்திரி, என்ன செய்வது என்று புரியாமல் சத்தியவானின் தலையைத் தரையில் வைத்துவிட்டு, எமதர்மராஜனைத் தொடர்ந்து சென்றாள். ஒவ்வொரு லோகமாகக் கடந்து கடந்து எமலோகம் வரை சென்று விட்டாள். வழிநெடுகிலும், 'என் கணவரின் உயிரைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்' என்கிற கோரிக்கையை வைத்தவண்ணமே சென்றாள்..எம பட்டணத்தின் வாயிலை அடைந்த எமதர்மன், அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். அவர் சாவித்திரியிடம், "நீ திரும்பிப் போய்விடம்மா. எடுத்த உயிரைத் திருப்பிக் கொடுக்கும் பழக்கம் கிடையாது. காலனான நான், யார் கண்ணிற்கும் தெரிய மாட்டேன். நீ மகா பதிவிரதையாக இருப்பதினால் உன் கண்களுக்கு மட்டும் தெரிந்து விட்டேன். அந்த ஒரு மேன்மையான சக்தி உன்னிடம் இருப்பதால், உனது கணவனின் உயிருக்கு பதிலாக நீ என்ன வரங்கள் வேண்டுமானாலும் கேள் தருகிறேன்" என்றார்..அதற்கு சாவித்திரி, "எனக்கு மூன்று வரங்கள் வேண்டும். ஒன்று கண் பார்வை இல்லாத என் கணவரின் பெற்றோருக்கு மீண்டும் பார்வை கிடைக்க வேண்டும். இரண்டு இழந்த நாட்டை மீண்டும் என் கணவர் பெற வேண்டும். மூன்றாவதாக, நான் மகா பதிவிரதை என்று நீங்களே கூறினீர்கள். அப்படிப்பட்ட எனக்கு புத்திசாலியாகவும், பலசாலியாகவும் திகழும் மக்கட்பேறு அமைய வேண்டும்" என்று கேட்டாள்..உடனே, "ததாஸ்து" என்று பதில் கூறினார் எமதர்மன். அதாவது, 'அப்படியே தந்தேன்' என்று அதற்குப் பொருள். சாவித்திரி செய்த நோன்புகள் அப்பொழுது அவளுக்குக் கைகொடுத்தன. ஆம்… அவள் வழிபட்ட அம்பிகையானவள், எமதர்மனின் மனத்தில் புகுந்து அப்படி ஒரு பதிலைச் சொல்ல வைத்தாள் என்றுதான் நினைக்க வேண்டும்..மீண்டும் சாவித்திரி காட்டிற்குத் திரும்பியபோது, அவளது கணவர் சத்தியவான் தூக்கத்தில் இருந்து எழுவது போல எழுந்து இருப்பதைக் கண்டு பேரானந்தம் கொண்டாள். அதற்கு அம்பிகைக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சாவித்திரி என்ன செய்தாள் தெரியுமா?.காட்டில் மண்ணினால் ஒரு உருவத்தைச் சமைத்து, அதில் அம்பிகையை ஆவாஹனம் செய்தாள். காட்டில் கிடைத்த கார் அரிசியையும், துவரையையும், பூக்களில் கிடைத்த தேனையும் வைத்து இனிப்பு மற்றும் உப்பு அடை செய்து, மரப்பாலை வெண்ணையாக பாவித்து, மரப்பட்டைகளில் சரடு திரித்து அம்பாளுக்குச் சாத்தி, அங்கிருந்த பூக்களால் அர்ச்சித்து, அடைகளை நைவேத்யம் செய்தாள். இது நடந்தது ஒரு மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் வேளையில்தான். எமதர்மனின் வாக்குப்படி அவள் கேட்ட அனைத்து வரங்களும் கை கூடின. நூறு மக்களைப் பெற்று, சத்தியவானும் சாவித்திரியும் அமோகமாக வாழ்ந்தார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன..இந்தக் கதையை ஒவ்வொரு வருடமும் படிக்கிறோம் அல்லது கேட்கிறோம். அதன் பயன் என்ன தெரியுமா? இக்கதையைப் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், ஆண்களாக இருந்தால் ஆயுள் கூடும். பெண்களாக இருந்தால் சுமங்கலித்துவம் நீடிக்கும் என்பது ஐதீகம். செவ்வாயன்றும், வெள்ளியன்றும் 'சாவித்திரி பாடம்' என்று கூறப்படும் இப்புராண சம்பவத்தைப் படித்தல், கேட்டல் எதுவாக இருந்தாலும், குடும்பத்திற்கு சுபிக்ஷத்தைத் தரும்..சாவித்திரி கார் அரிசியைக் கொண்டு அடை செய்து வழிபட்டதால், 'காரடையான் நோன்பு' எனப்படுகிறது என்கிற செய்தி ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு தகவலும் கூறப்படுகிறது. அதாவது, கார் என்றால் கருமை அல்லது இருட்டு என்று பொருள். எமலோகம் என்பது, இருள் சூழ்ந்ததாக இருக்கும் என்று அறியப்படுகிறது. காரடையான் என்றால், 'என் கணவர் இருள் சூழ்ந்த யம பட்டணத்தை அடைய மாட்டார்' என்று பெண்களுக்கு சுமங்கலித்துவம் பற்றிய ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது..இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், முதல் நாளே பூஜை அறையைச் சுத்தம் செய்து, படங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூஜை பாத்திரங்களை நன்றாகத் தேய்த்து பூஜைக்குத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். விரதம் அனுஷ்டிப்பவர்கள், நோன்பு நேரம் வரை எந்த ஆகாரமும் சாப்பிடக் கூடாது. சில சமயங்களில் இரவு நேரங்களில் கூட நோன்பு அமையும். முக்கியமாக மோர், தயிர் போன்ற புளிப்புப் பொருட்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மருந்து உட்கொள்பவர்கள் பால் பழங்கள் சாப்பிடலாம்..பூஜை சமயத்தில் படங்களுக்கு வாசமான புஷ்பங்கள் சாத்தி, நோன்புச் சரட்டில் ஒரு வாசனை புஷ்பத்தை நடுவில் வைத்துத் தொடுத்து வைக்க வேண்டும். முக்கியமாக, காமாட்சி அம்மன் படம் இருந்தால் நல்லது. அப்படி இல்லாவிடில் எந்த அம்பாளாக இருந்தாலும், குலதெய்வம் பெண் தெய்வமாக இருக்கும் பட்சத்தில், அந்தப் படத்தையும் வைத்து, பூஜை செய்ய வேண்டும். வீட்டில் எத்தனை சுமங்கலிகள், பெண் குழந்தைகள் இருக்கிறார்களோ, எத்தனை பெண் தெய்வங்களுக்கு சரடு சாத்த வேண்டும் என்கிற கணக்கை வைத்து, அந்தக் கணக்கில் சரடினை வாங்கி பூ வைத்துத் தொடுத்து, வெற்றிலைப் பாக்குடன் வைத்துக் கொள்ளவும். முன்பெல்லாம் நோன்புச் சரடை வீட்டிலேயே தயார் செய்வார்கள். சரடு கிடைக்காதவர்கள் இப்படிச் செய்துகொள்ளலாம்..பூ தொடுக்கும் நூல் என்று கடைகளில் இருக்கும். அதில் பல இழைகள் சேர்ந்து இருக்கும். ஒற்றை இழை இருக்கும் நூலை உபயோகப்படுத்தக்கூடாது. நூலை தேவைப்படும் நீளத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மஞ்சள் பொடியை சிறிது நீர் சேர்த்துக் குழைத்து, சரடில் நன்றாகத் தடவி, திரிப்பது போல் இரண்டு கைகளாலும் தேய்த்து, ஒற்றைச் சரம் போல் ஆக்கி ஈரம் போக வைக்க வேண்டும். நாமே நம் கையால் தயாரிக்கும் நோன்புச் சரடு என்பது எவ்வளவு உயர்வானது..மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யம் அணிந்திருக்கும் சுமங்கலிகள், மாசி மாத கடைசி நாளன்று, மாசி இருக்கும்பொழுதே, மங்கல நாணை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ராகு காலம், எமகண்டம் இல்லாமல் திருமாங்கல்ய சரடினை மாற்றிக்கொள்ளலாம்..சிலருக்கு கலசம் வைத்து பூஜிக்கும் பழக்கம் இருக்கும். அவர்கள் கலசத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்து, மாவிலையைச் சொருகி, மஞ்சள் தடவி, சந்தன குங்குமம் வைத்த தேங்காயை வைக்க வேண்டும். வரலட்சுமி பூஜைக்கு செய்வதைப் போல் கலசத்திற்கு வஸ்திரமும் பூச்சரமும் சாத்த வேண்டும். எந்த பூஜையாக இருந்தாலும் முதலில் கணபதிக்கு பூஜை செய்துவிட்டுதான் ஆரம்பிக்க வேண்டும்..நல்ல நுனி இலையாக, ஒற்றை இலக்கு எண்ணில் அல்லாமல், வீட்டில் உள்ள சுமங்கலிகளைக் கணக்கு வைத்து, இரட்டை இலக்கில் அம்பாளுக்கு இடது கைப்பக்கம் நுனி இருக்குமாறு இலையைப் போட்டு, இரண்டு உப்பு அடை, இரண்டு இனிப்பு அடை, வெண்ணெய்யையும் வைத்து, 'உருகாத வெண்ணெய்யும் ஓர் அடையும் உனக்கு நான் தருகிறேன். ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டுப் பிரியாது இருக்க வேண்டும்' என்கிற மந்திரத்தைக் கூறி, நைவேத்தியம் செய்ய வேண்டும். பிறகு சரடினை எடுத்து, முதலில் காமாட்சி அம்மனுக்கும், பிற பெண் தெய்வங்களுக்கும் கட்டிவிட்டு, பிறகு கணவர் கைகளால் சுமங்கலிகள் கட்டிக் கொள்ளலாம். அல்லது வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்கள் கையால் கழுத்தில் நோன்புச் சரடு கட்டிக் கொள்ளலாம்..உபவாச நேரத்தில், ஸ்ரீ காமாக்ஷி விருத்தம் படிப்பது மிகவும் நல்லது. காமாக்ஷி விருத்தத்தில் அம்மனை உச்சி முதல் பாதம் வரை வர்ணித்து கூறியிருக்கும் அழகே மிகவும் நன்றாக இருக்கும். உபவாசத்தின்பொழுது அம்பாள் சம்பந்தப்பட்ட பாட்டுக்கள் அல்லது ஸ்லோகங்களைக் கூறலாம். தூப, தீபம் காட்டி பூஜை முடிந்தவுடன் ஆரத்தி எடுக்க வேண்டும். ஆரத்தியில் மஞ்சளும், குங்குமமும் கலந்து வைத்து எடுக்க வேண்டும். அம்பாளுக்கு ஆரத்தி எடுக்கும்பொழுது, அதில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது..மறுநாள் புனர் பூஜை செய்து, ஏதாவது ஒரு நைவேத்தியம், குறைந்த பட்சம் பாலாவது நைவேத்தியம் செய்து, தூப தீபம் காட்டி, மீண்டும் ஆரத்தி எடுக்க வேண்டும். பிறகு, கலசத்தை வடக்கு நோக்கி நகர்த்தி வைக்க வேண்டும். நோன்பு அன்று சுமங்கலிகளுக்கு மங்கலகரமான பொருட்களை வைத்து தாம்பூலம் கொடுக்க வேண்டும். வெற்றிலைப் பாக்கு, பழம், புஷ்பம், மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, வளையல், ரவிக்கைத் துணி இவற்றை வைத்தாலும், ஒரு ரூபாய் நாணயமாவது அதில் வைக்க வேண்டும். நாணயம் இல்லாமல் வெற்றிலைப் பாக்கு கொடுக்கக் கூடாது..இந்து பண்டிகைகளுக்குத்தான் எத்தனை ஒரு மகத்துவம். காலம் காலமாய் செய்துவரும் இத்தனை மேன்மை பொருந்திய இந்தத் தாலி நோன்பை, சுமங்கலிகள் சிரத்தையுடன் அனுஷ்டிப்பதால், கணவர் நோய் நொடியில் விழாமல் இருப்பதோடு நிறைந்த ஆயுளுடன் இருப்பார் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. எல்லா சுமங்கலிகளுக்கும் காமாட்சி அம்மனின் அனுக்கிரகம் பரிபூரணமாகக் கிடைக்கட்டும்.