கணிப்பு : கி.சுப்பிரமணியன் (8610023308).பொதுப்பலன்கள்.தமிழ் புத்தாண்டு சுபகிருது வருஷம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி 2022 அன்று சுக்ரனுடைய பூர நட்சத்திரத்தில் தொடங்குகிறது.சுபகிருது என்று சொன்னால் எல்லோருக்கும் நல்ல சுபத்துவத்தைக் கொடுக்கக்கூடிய ஆண்டு என்று பொருள். கடந்த இரண்டு ஆண்டுகளாகமக்கள் பட்ட கஷ்டங்களுக்கு இந்த ஆண்டு நல்ல தீர்வு கொடுக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மக்களுக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டாகும். இந்த ஆண்டில் அரசனாக சனி பகவானும் மந்திரியாக குரு பகவானும் வருகிறார்கள். அதனால் நிறைய வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடிய ஆண்டு என்று இதைச் சொல்லலாம்.மக்களுக்கு நேர்மை, நீதியின் மீது நம்பிக்கை வரும். நீதித் துறையில்பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த ஆண்டு மழை மற்றும் நிலம் சம்பந்தமான பிரச்னைகளும் வரக்கூடும்..மேஷம்.மேஷ ராசி வாசகர்களே, உங்கள் ராசியாதிபதி செவ்வாய் லாபத்தில் இருப்பதால் இந்த ஆண்டு நல்ல லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு உருவாகும். வெளிநாட்டுப் பயணம் வாய்ப்புண்டு. அவரவர் வயதிற்கேற்ப படிப்பு, வேலை மற்றும் தொழில் விஷயமாக வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் வரும். சிலருக்கு வெளிநாட்டுத் தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கணவன்-மனைவி இடையே பேச்சில் அதிக கவனம் தேவை. திருமணமாகாதவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்..குருவின் பார்வையால் சொந்த வீடு, வண்டி வாகன யோகம் உண்டு. பங்கு சந்தையில் ஆதாயம் காணலாம். பிள்ளைகள் ஆசைப்பட்ட படிப்பைப் படிக்கக்கூடிய அமைப்பும், எதிர்பார்த்த பள்ளி மற்றும் கல்லூரி கிடைக்கக்கூடிய அமைப்பும் உண்டு.குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் நல்ல குழந்தைப் பேறு கிடைக்கும். தொழில்நுட்பத்தில் வளர்ச்சி காணலாம். ஐ.டி துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான காலகட்டம். அதேசமயம் சனியின் பார்வையால் நூதன திருட்டுகள் நடைபெற வாய்ப்புண்டு. ஒருசிலர் பொருட்களை இழக்கக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். சொந்த வீடு பழுது பார்க்கக்கூடிய நிலை ஏற்படும். அம்பிகையை வழிபட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் காணலாம்..ரிஷபம்.ரிஷப ராசி வாசகர்களே, உங்கள் ராசியாதிபதி ஆண்டு துவக்கத்தில் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சுபத்துவம் அடைவதால் கலைத் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குக் கலைத்துறையில் நல்ல வாய்ப்பும், அங்கீகாரங்களும், பாராட்டுக்களும் கிடைக்கும். சிலருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வரும். அதுபோல, கலைத்துறையில் பாட்டு, நடனம், ஓவியம், கவிதை மற்றும் கதை எழுதுபவர்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் வரும். இதுநாள்வரை உடல் ரீதியாக பிரச்னையில் உள்ளவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல ஆரோக்கியம் ஏற்படும். முதியவர்களுக்கும் சிறப்பான காலகட்டமாக இது அமைகிறது..குரு லாபத்தில் ஆட்சியாக இருப்பதால் வெளிநாட்டு பயணம் நல்ல ஆதாயத்தை ஏற்படுத்தும். ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்குத் திருமண யோகமும், தனிக் குடித்தனம் அமையும் யோகமும் உண்டு. கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்கள் சேர்ந்து வாழும் சூழல் உருவாகும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பன்னிரெண்டாம் இடத்தில்ராகு இருப்பதால் வெளிநாட்டுப் பயணம் ஏற்பட வாய்ப்புண்டு. அதுபோல, அரசியல்வாதிகளுக்கும் வெளிநாடு செல்லக்கூடிய அமைப்பு ஏற்படும்.சுக்ரனை வழிபட்டு வந்தால் நினைத்தவை அனைத்தும் நடக்கும்..மிதுனம்.மிதுன ராசி வாசகர்களே, இந்த ஆண்டு தொடக்கத்தில் ராசியாதிபதி லாப ஸ்தானத்தில் ராகுவுடன் அமர்வதால் வேலை மூலமாக நல்ல ஆதாயம் கிடைக்கும். மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதுபோல, ராணுவத்தில் பணி புரிபவர்களுக்கும் இந்த ஆண்டு நல்ல சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு நண்பர்களால் நல்ல ஆதாயம் உருவாகும். குருவின் பார்வையால் பேச்சை மூலதனமாக வைத்து வேலை செய்பவர்களுக்கு நல்ல அனுகூலம் உண்டாகும். குறிப்பாக, ஆசிரியர் பணியில் இருப்பவர்கள், வழக்கறிஞர்களுக்கு சிறப்பான காலம். சிலருக்கு ஜோதிடம் அல்லது ஆயுர்வேதம் போன்ற சாஸ்திர விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் ஏற்படும்..ராசிக்கு ஏழாம் அதிபதி குரு லாபத்தில் அமர்வதால் வெகு நாட்கள் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகம் வந்துசேரும். அதுபோல, பிரிந்த தம்பதியர் சேர்ந்து வாழும் அமைப்பு ஏற்படும். கூட்டுத்தொழில் நல்ல லாபம் தரும். வெகுநாட்களாக குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடி வரும். ஆயுர்வேத, சித்த மருத்துவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய வாடிக்கையாளர்களைக் கவர்வர். யோகம் பெறும் செவ்வாயால் சிலருக்கு விளையாட்டுத் துறையில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் ஏற்பட வாய்ப்புண்டு. குலதெய்வ வழிபாட்டுக்கான செலவுகள் ஏற்படும். திருப்பதி வேங்கடேச பெருமானை வழிபடுவதால் நல்ல பலன் கிடைக்கும்..கடகம்.கடக ராசி வாசகர்களே, இந்த ஆண்டு சிலருக்கு தந்தை வழி சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. தந்தை வழி சொந்தங்களுடன் அன்பு பாராட்டக்கூடிய ஆண்டாகவும் இது அமைகிறது. கொடுத்த கடன் வசூலாகும். படித்து விட்டு வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு ஐ.டி. போன்ற துறைகளில் வேலை கிடைக்கும். சிலருக்கு மருத்துவத்துறையிலும் ராணுவத்திலும் பணிபுரியும் வாய்ப்புகள் வரும். சிலருக்கு ஜோதிடம் அல்லது ஆயுர்வேதம் போன்ற சாஸ்திர விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் ஏற்படும். சனியின் பார்வையால் இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு இனி குருவின் பார்வையால் திருமணம் நடைபெறும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்..இதுநாள்வரை உடல் ரீதியான பிரச்னையால் அவதிப்பட்டவர்கள் இனி குருவின் பார்வையால் நல்ல ஆரோக்கியமும் புது தெம்பும் பெறுவர். புதிய முயற்சி நல்ல வெற்றியைக் கொடுக்கும். சிலருக்கு இளைய சகோதர, சகோதரிகளால் ஆதாயம் ஏற்படும். யோகம் பெறும் செவ்வாயால் சிலருக்கு விளையாட்டுத் துறையில் நல்ல வெற்றி கிடைக்கும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் ஆண்டாக இது அமைகிறது. பிள்ளைகள் சிறப்பாகக் கல்வி பயில்வர். பெற்றோர்களுக்கு அனுசரணையாக இருப்பர். சிலர் விளையாட்டுத் துறையில் நல்ல வெற்றி காண்பர். சிவபெருமான் வழிபாடு நல்ல யோகத்தைத் தரும்..சிம்மம்.சிம்ம ராசி வாசகர்களே, இந்த ஆண்டு உங்களுக்கு உத்தியோக உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புண்டு. சிலருக்கு அரசாங்க அனுகூலங்கள் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு அரசியலில் சேர்வதற்கான வாய்ப்பு ஏற்படும். தந்தை வழி சொந்தங்களிடம் சிலருக்கு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்குக் குல தெய்வத்தை வழிபடும் வாய்ப்பும் அதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் உருவாகும். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுத்த கடன் திரும்பி வரும். புதிய கடன்கள் கிடைக்கும்..செல்போன், கூரியர், போக்குவரத்து போன்ற துறைகளில் உள்ளவர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். திருமணமாகாதவர்களுக்கு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு திருமண வாய்ப்புகள் தேடிவரும். பெண்களுக்கு கலைத்துறையில் ஆர்வம் ஏற்படும். சிலர் நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவர். ஸ்ரீரங்கநாதப் பெருமானை வழிபட்டு வருவதால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்..கன்னி.கன்னி ராசி வாசகர்களே, உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் குரு ஆட்சி செய்வதால் திருமண யோகம் ஏற்படும். சிலருக்குக் காதல் திருமணம் கைகூடும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு இது லாபகரமான காலகட்டம். எட்டாம் இடத்தில் ராகு இருப்பதால் சிலருக்கு எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றல் உருவாகும். கேட்ட இடத்தில் கடன் உடனே கிடைக்கும். சமூக வலைதளங்கள் மூலம் சிலருக்கு பிரபலமாகக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும். ஐ.டி. மற்றும் கணக்காயர் துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு ஏற்பட வாய்ப்புண்டு..வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். விவசாயிகள் நல்ல லாபம் காண்பர். சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பிள்ளைகளுக்கு கல்வியில் கவனக் குறைவு, மறதி, சோம்பல் ஏற்படும். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்ட வேண்டிய காலகட்டம் இது. பேச்சில் அதிக கவனம் வேண்டும். பேச்சை மூலதனமாக வைத்து வேலை செய்பவர்கள் அதிக கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். ஸ்ரீ ராமரை வழிபடுவது நல்ல பலனைத் தரும்..துலாம்.துலா ராசி வாசகர்களே, உங்கள் ராசி அதிபதியான சுக்ரன் ஐந்தாமிடத்தில் சுபத்துவம் பெறுவதால் பெற்றோர்களால் நல்ல அனுகூலம் ஏற்படும். பிள்ளைகள் கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் பிரபலமாகக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்தால் அவர்களோடு சேர்ந்து இருக்கக்கூடிய யோகமும் இந்த ஆண்டு ஏற்படும். சிலருக்குக் கலைத்துறையில் வாய்ப்பும், அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கும். பேச்சாற்றல் நன்மை தரும். குறிப்பாக, வக்கீல் தொழில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். அதுபோல, பட்டிமன்ற பேச்சாளர்கள் உபன்யாசகர்களுக்கும் நல்ல ஆதாயம் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகளும் தேடி வரும்..கணவன்-மனைவி ஒற்றுமையில் கவனம் தேவை. திருமணத் தாமதங்கள், தடைகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை. தாய் மற்றும் தாய்வழி சொந்தங்களோடு பேச்சில் அதிக கவனத்தோடு இருப்பது நல்லது.சொந்த வீடு, வண்டி வாகனங்கள் வாங்க முயற்சி செய்பவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் அந்த முயற்சி பலிக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சூரியன் உச்சம் பெற்று செவ்வாயும் யோகம் பெறுவதால் சிலருக்கு அரசாங்க பதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு. தடைகள் முழுவதும் விலகி, நல்ல பலன்களை அடைய விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பு..விருச்சிகம்.விருச்சிக ராசி வாசகர்களே, உங்கள் ராசிக்கு ராசியாதிபதி ஆண்டு துவக்கத்தில் நான்காமிடத்தில் சுக்ரனுடன் சேர்ந்து சுபத்துவம் பெறுவதால் பங்கு சந்தையில் நல்ல ஆதாயம் கிடைக்கும். அதுபோல, ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பொருளாதார வளர்ச்சி ஏற்படும். மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு நல்ல புகழ் கிடைக்கும். சிலருக்குக் குடும்பத்திற்குத் தேவையான பொருளாதார வசதிகளை மேம்படுத்தக்கூடிய காலகட்டம். மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான வாய்ப்புகள் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்குப் பின் திருமண பாக்கியம் கூடிவரும். பிரிந்த தம்பதியர் சேர்ந்து வாழும் யோகமும் உண்டு. சிலருக்குக் காதல் திருமணம் கைகூடும். குழந்தைப் பேறு இல்லாதவர் சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும்..பேச்சை மூலதனமாக வைத்துப் பிழைப்பவர்கள், குறிப்பாக ஆசிரியர் தொழில் செய்பவர்களுக்கு நல்ல யோகமாக இருக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வழக்குகள் நிலுவையில் இருந்தால் இந்த ஆண்டு அது சாதகமாக முடியும்.வங்கித் துறையில் பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்கு சொந்த வீடு, வண்டி வாங்கக்கூடிய யோகமும் உண்டு. சூரியன் உச்சம் பெற்று, செவ்வாயும் யோகம் பெறுவதால் சிலருக்கு அரசாங்கப் பதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு. முருகப்பெருமானை வழிபட்டு வர சிறப்பான யோகம் ஏற்படும்..தனுசு.தனுசு ராசி வாசகர்களே, உங்கள் ராசிக்கு ராசியாதிபதி இந்த ஆண்டு நான்காமிடத்தில் ஆட்சி பெறுவதால் சிலருக்கு சொந்த வீடு, நிலம், வண்டி வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். தாயாரின் உடல் நலம் வரும் குரு பெயர்ச்சிக்குப் பிறகு பூரண ஆரோக்கியம் பெற வாய்ப்பு உண்டு. சிலருக்கு பங்கு சந்தையில் நல்ல ஆதாயம் ஏற்படும். சிலர் தங்கம் முதலீட்டில் நல்ல வருவாய் காண்பர். பேச்சில் அதிக கவனம் தேவை. பேச்சை மூலதனமாக வைத்து பிழைப்பவர்கள் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பிள்ளைகள் படிப்பில் அதிக கவனம் தேவை..ஆண்டு துவக்கத்தில் ராசிக்கு மூன்றாமிடத்தில் நல்ல கிரக சேர்க்கை இருப்பதால் சிலருக்கு முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். சிலருக்கு இளைய சகோதர, சகோதரிகளால் ஆதாயம் ஏற்படும். சொந்த தொழில் செய்பவர்கள், பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல ஆதாயம் அடைவர். சிலர் சொந்த தொழில் செய்வதில் ஆர்வம் காட்டுவர். கணக்காயர் துறையில் புதிய வேலை வாய்ப்புக்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த ஆண்டு செழுமையாக வாழ குரு பகவானை வியாழன்தோறும் வழிபடுவது நல்லது..மகரம்.மகர ராசி வாசகர்களே, உங்கள் ராசிக்கு ஜன்ம சனி என்றாலும், தொழில் ஸ்தான அதிபதியான சுக்ரன் இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால் கலைத்துறையில் பின்னணி குரல் கொடுப்பவர்கள், நடிகர்கள், பாடகர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்களுக்கு நல்ல யோகத்தைத் தரக்கூடிய ஆண்டாக இது அமைகிறது. குறிப்பாக, பெண்களுக்கு கலைத்துறையில் அதிக ஆர்வம் ஏற்படும். ஜன்ம சனி என்பதால் அடிக்கடி உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. சொந்த வீட்டை பழுது பார்க்கும் சூழ்நிலை உருவாகும்..குரு மூன்றாம் இடத்தில் ஆட்சி பெறுவதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி நிச்சயமாக கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு ஜூலை மாதத்திற்குப் பிறகு திருமண ஆலோசனைகள் வர வாய்ப்புண்டு. பிரிந்த தம்பதியர் சேர்ந்து வாழும் சூழ்நிலை உருவாகும். சமையல் தொழில் செய்பவர்கள், அதையே சமூக வலைதளங்களில் கற்றுத் தருபவர்களுக்கு நல்ல பொருளாதார உயர்வு ஏற்பட வாய்ப்புண்டு. பிள்ளைகள் கல்வி மேலோங்கும். சிலர் விளையாட்டுத் துறையில் ஆர்வம் காட்டுவர். வெற்றியும் அடைவர். சனிக்கிழமை தோறும் ஆஞ்சனேயரை வழிபட்டு வர, கெடு பலன்கள் குறைய வாய்ப்புண்டு..கும்பம்.கும்ப ராசி வாசகர்களே, கண்டக சனி உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்திலேயே. தனகாரகன் தனஸ்தானத்தில் ஆட்சி பெறுவதால் நல்ல யோகம் ஏற்படும். குடும்பத்திற்குத் தேவையான பொருளாதார வசதிகளை மேம்படுத்தக்கூடிய காலகட்டம். பேச்சாற்றல் வெளிப்படும். சிலரது பேச்சாற்றல் அவர்களை வெளிநாட்டுக்குச் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். உதாரணமாக, உபன்யாசகர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், அரசுஆலோசகர்களுக்கு நல்ல ஆதாயம் ஏற்படும். வழக்குகள் நிலுவையில் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக முடியும்..திருமணமாகாதவர்களுக்கு இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நல்ல திருமண ஆலோசனைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு ரியல் எஸ்டேட் தொழில் நல்ல லாபத்தைத் தரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் ஆண்டாக இது இருக்கும். மருத்துவர்கள் நல்ல யோகத்தை அடைவார்கள். அதிலும் பாரம்பரிய மருத்துவம் என்று சொல்லக்கூடிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம், ஹோமியோபதி ஆகிய மருத்துவத் துறையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல யோகத்தைத் தரும். பெண்களுக்கு கலைத் துறையில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வர, சகல பிரச்னைகளும் குறையும்..மீனம்.மீன ராசி வாசகர்களே, உங்கள் ராசியாதிபதி ராசியிலேயே ஆட்சி பெறுவதால் சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் ஏற்படும். சிலருக்கு உத்தியோக உயர்வு, பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மாணவர்கள் கல்வி நிமித்தமாக வெளிநாடு செல்லக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும். திருமணமாகாதவர்களுக்கு இந்த ஆண்டின் முற்பகுதியான முதல் ஆறு மாதங்களில் நல்ல திருமண ஆலோசனைகள் தேடி வரும்..ராசிக்கு இரண்டாம் இடத்தில் ராகு இருப்பதால் பேச்சில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். பிள்ளைகள் பெற்றோர்களுக்கு அனுகூலமாக இருப்பர். மேலும், சிறப்பாகப் படித்து விருப்பப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்புகள் அமையும். அதோடு,கலைத் துறையில் பிரபலமாகக்கூடிய வாய்ப்பும் ஏற்படும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடிய யோகமும் இந்த ஆண்டு உண்டு. தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வர, இந்த ஆண்டு நல்ல யோகமாக இருக்கும்.
கணிப்பு : கி.சுப்பிரமணியன் (8610023308).பொதுப்பலன்கள்.தமிழ் புத்தாண்டு சுபகிருது வருஷம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி 2022 அன்று சுக்ரனுடைய பூர நட்சத்திரத்தில் தொடங்குகிறது.சுபகிருது என்று சொன்னால் எல்லோருக்கும் நல்ல சுபத்துவத்தைக் கொடுக்கக்கூடிய ஆண்டு என்று பொருள். கடந்த இரண்டு ஆண்டுகளாகமக்கள் பட்ட கஷ்டங்களுக்கு இந்த ஆண்டு நல்ல தீர்வு கொடுக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மக்களுக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டாகும். இந்த ஆண்டில் அரசனாக சனி பகவானும் மந்திரியாக குரு பகவானும் வருகிறார்கள். அதனால் நிறைய வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடிய ஆண்டு என்று இதைச் சொல்லலாம்.மக்களுக்கு நேர்மை, நீதியின் மீது நம்பிக்கை வரும். நீதித் துறையில்பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த ஆண்டு மழை மற்றும் நிலம் சம்பந்தமான பிரச்னைகளும் வரக்கூடும்..மேஷம்.மேஷ ராசி வாசகர்களே, உங்கள் ராசியாதிபதி செவ்வாய் லாபத்தில் இருப்பதால் இந்த ஆண்டு நல்ல லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு உருவாகும். வெளிநாட்டுப் பயணம் வாய்ப்புண்டு. அவரவர் வயதிற்கேற்ப படிப்பு, வேலை மற்றும் தொழில் விஷயமாக வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் வரும். சிலருக்கு வெளிநாட்டுத் தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கணவன்-மனைவி இடையே பேச்சில் அதிக கவனம் தேவை. திருமணமாகாதவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்..குருவின் பார்வையால் சொந்த வீடு, வண்டி வாகன யோகம் உண்டு. பங்கு சந்தையில் ஆதாயம் காணலாம். பிள்ளைகள் ஆசைப்பட்ட படிப்பைப் படிக்கக்கூடிய அமைப்பும், எதிர்பார்த்த பள்ளி மற்றும் கல்லூரி கிடைக்கக்கூடிய அமைப்பும் உண்டு.குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் நல்ல குழந்தைப் பேறு கிடைக்கும். தொழில்நுட்பத்தில் வளர்ச்சி காணலாம். ஐ.டி துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான காலகட்டம். அதேசமயம் சனியின் பார்வையால் நூதன திருட்டுகள் நடைபெற வாய்ப்புண்டு. ஒருசிலர் பொருட்களை இழக்கக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். சொந்த வீடு பழுது பார்க்கக்கூடிய நிலை ஏற்படும். அம்பிகையை வழிபட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் காணலாம்..ரிஷபம்.ரிஷப ராசி வாசகர்களே, உங்கள் ராசியாதிபதி ஆண்டு துவக்கத்தில் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சுபத்துவம் அடைவதால் கலைத் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குக் கலைத்துறையில் நல்ல வாய்ப்பும், அங்கீகாரங்களும், பாராட்டுக்களும் கிடைக்கும். சிலருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வரும். அதுபோல, கலைத்துறையில் பாட்டு, நடனம், ஓவியம், கவிதை மற்றும் கதை எழுதுபவர்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் வரும். இதுநாள்வரை உடல் ரீதியாக பிரச்னையில் உள்ளவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல ஆரோக்கியம் ஏற்படும். முதியவர்களுக்கும் சிறப்பான காலகட்டமாக இது அமைகிறது..குரு லாபத்தில் ஆட்சியாக இருப்பதால் வெளிநாட்டு பயணம் நல்ல ஆதாயத்தை ஏற்படுத்தும். ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்குத் திருமண யோகமும், தனிக் குடித்தனம் அமையும் யோகமும் உண்டு. கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்கள் சேர்ந்து வாழும் சூழல் உருவாகும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பன்னிரெண்டாம் இடத்தில்ராகு இருப்பதால் வெளிநாட்டுப் பயணம் ஏற்பட வாய்ப்புண்டு. அதுபோல, அரசியல்வாதிகளுக்கும் வெளிநாடு செல்லக்கூடிய அமைப்பு ஏற்படும்.சுக்ரனை வழிபட்டு வந்தால் நினைத்தவை அனைத்தும் நடக்கும்..மிதுனம்.மிதுன ராசி வாசகர்களே, இந்த ஆண்டு தொடக்கத்தில் ராசியாதிபதி லாப ஸ்தானத்தில் ராகுவுடன் அமர்வதால் வேலை மூலமாக நல்ல ஆதாயம் கிடைக்கும். மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதுபோல, ராணுவத்தில் பணி புரிபவர்களுக்கும் இந்த ஆண்டு நல்ல சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு நண்பர்களால் நல்ல ஆதாயம் உருவாகும். குருவின் பார்வையால் பேச்சை மூலதனமாக வைத்து வேலை செய்பவர்களுக்கு நல்ல அனுகூலம் உண்டாகும். குறிப்பாக, ஆசிரியர் பணியில் இருப்பவர்கள், வழக்கறிஞர்களுக்கு சிறப்பான காலம். சிலருக்கு ஜோதிடம் அல்லது ஆயுர்வேதம் போன்ற சாஸ்திர விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் ஏற்படும்..ராசிக்கு ஏழாம் அதிபதி குரு லாபத்தில் அமர்வதால் வெகு நாட்கள் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகம் வந்துசேரும். அதுபோல, பிரிந்த தம்பதியர் சேர்ந்து வாழும் அமைப்பு ஏற்படும். கூட்டுத்தொழில் நல்ல லாபம் தரும். வெகுநாட்களாக குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடி வரும். ஆயுர்வேத, சித்த மருத்துவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய வாடிக்கையாளர்களைக் கவர்வர். யோகம் பெறும் செவ்வாயால் சிலருக்கு விளையாட்டுத் துறையில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் ஏற்பட வாய்ப்புண்டு. குலதெய்வ வழிபாட்டுக்கான செலவுகள் ஏற்படும். திருப்பதி வேங்கடேச பெருமானை வழிபடுவதால் நல்ல பலன் கிடைக்கும்..கடகம்.கடக ராசி வாசகர்களே, இந்த ஆண்டு சிலருக்கு தந்தை வழி சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. தந்தை வழி சொந்தங்களுடன் அன்பு பாராட்டக்கூடிய ஆண்டாகவும் இது அமைகிறது. கொடுத்த கடன் வசூலாகும். படித்து விட்டு வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு ஐ.டி. போன்ற துறைகளில் வேலை கிடைக்கும். சிலருக்கு மருத்துவத்துறையிலும் ராணுவத்திலும் பணிபுரியும் வாய்ப்புகள் வரும். சிலருக்கு ஜோதிடம் அல்லது ஆயுர்வேதம் போன்ற சாஸ்திர விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் ஏற்படும். சனியின் பார்வையால் இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு இனி குருவின் பார்வையால் திருமணம் நடைபெறும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்..இதுநாள்வரை உடல் ரீதியான பிரச்னையால் அவதிப்பட்டவர்கள் இனி குருவின் பார்வையால் நல்ல ஆரோக்கியமும் புது தெம்பும் பெறுவர். புதிய முயற்சி நல்ல வெற்றியைக் கொடுக்கும். சிலருக்கு இளைய சகோதர, சகோதரிகளால் ஆதாயம் ஏற்படும். யோகம் பெறும் செவ்வாயால் சிலருக்கு விளையாட்டுத் துறையில் நல்ல வெற்றி கிடைக்கும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் ஆண்டாக இது அமைகிறது. பிள்ளைகள் சிறப்பாகக் கல்வி பயில்வர். பெற்றோர்களுக்கு அனுசரணையாக இருப்பர். சிலர் விளையாட்டுத் துறையில் நல்ல வெற்றி காண்பர். சிவபெருமான் வழிபாடு நல்ல யோகத்தைத் தரும்..சிம்மம்.சிம்ம ராசி வாசகர்களே, இந்த ஆண்டு உங்களுக்கு உத்தியோக உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புண்டு. சிலருக்கு அரசாங்க அனுகூலங்கள் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு அரசியலில் சேர்வதற்கான வாய்ப்பு ஏற்படும். தந்தை வழி சொந்தங்களிடம் சிலருக்கு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்குக் குல தெய்வத்தை வழிபடும் வாய்ப்பும் அதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் உருவாகும். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுத்த கடன் திரும்பி வரும். புதிய கடன்கள் கிடைக்கும்..செல்போன், கூரியர், போக்குவரத்து போன்ற துறைகளில் உள்ளவர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். திருமணமாகாதவர்களுக்கு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு திருமண வாய்ப்புகள் தேடிவரும். பெண்களுக்கு கலைத்துறையில் ஆர்வம் ஏற்படும். சிலர் நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவர். ஸ்ரீரங்கநாதப் பெருமானை வழிபட்டு வருவதால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்..கன்னி.கன்னி ராசி வாசகர்களே, உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் குரு ஆட்சி செய்வதால் திருமண யோகம் ஏற்படும். சிலருக்குக் காதல் திருமணம் கைகூடும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு இது லாபகரமான காலகட்டம். எட்டாம் இடத்தில் ராகு இருப்பதால் சிலருக்கு எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றல் உருவாகும். கேட்ட இடத்தில் கடன் உடனே கிடைக்கும். சமூக வலைதளங்கள் மூலம் சிலருக்கு பிரபலமாகக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும். ஐ.டி. மற்றும் கணக்காயர் துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு ஏற்பட வாய்ப்புண்டு..வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். விவசாயிகள் நல்ல லாபம் காண்பர். சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பிள்ளைகளுக்கு கல்வியில் கவனக் குறைவு, மறதி, சோம்பல் ஏற்படும். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்ட வேண்டிய காலகட்டம் இது. பேச்சில் அதிக கவனம் வேண்டும். பேச்சை மூலதனமாக வைத்து வேலை செய்பவர்கள் அதிக கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். ஸ்ரீ ராமரை வழிபடுவது நல்ல பலனைத் தரும்..துலாம்.துலா ராசி வாசகர்களே, உங்கள் ராசி அதிபதியான சுக்ரன் ஐந்தாமிடத்தில் சுபத்துவம் பெறுவதால் பெற்றோர்களால் நல்ல அனுகூலம் ஏற்படும். பிள்ளைகள் கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் பிரபலமாகக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்தால் அவர்களோடு சேர்ந்து இருக்கக்கூடிய யோகமும் இந்த ஆண்டு ஏற்படும். சிலருக்குக் கலைத்துறையில் வாய்ப்பும், அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கும். பேச்சாற்றல் நன்மை தரும். குறிப்பாக, வக்கீல் தொழில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். அதுபோல, பட்டிமன்ற பேச்சாளர்கள் உபன்யாசகர்களுக்கும் நல்ல ஆதாயம் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகளும் தேடி வரும்..கணவன்-மனைவி ஒற்றுமையில் கவனம் தேவை. திருமணத் தாமதங்கள், தடைகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை. தாய் மற்றும் தாய்வழி சொந்தங்களோடு பேச்சில் அதிக கவனத்தோடு இருப்பது நல்லது.சொந்த வீடு, வண்டி வாகனங்கள் வாங்க முயற்சி செய்பவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் அந்த முயற்சி பலிக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சூரியன் உச்சம் பெற்று செவ்வாயும் யோகம் பெறுவதால் சிலருக்கு அரசாங்க பதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு. தடைகள் முழுவதும் விலகி, நல்ல பலன்களை அடைய விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பு..விருச்சிகம்.விருச்சிக ராசி வாசகர்களே, உங்கள் ராசிக்கு ராசியாதிபதி ஆண்டு துவக்கத்தில் நான்காமிடத்தில் சுக்ரனுடன் சேர்ந்து சுபத்துவம் பெறுவதால் பங்கு சந்தையில் நல்ல ஆதாயம் கிடைக்கும். அதுபோல, ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பொருளாதார வளர்ச்சி ஏற்படும். மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு நல்ல புகழ் கிடைக்கும். சிலருக்குக் குடும்பத்திற்குத் தேவையான பொருளாதார வசதிகளை மேம்படுத்தக்கூடிய காலகட்டம். மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான வாய்ப்புகள் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்குப் பின் திருமண பாக்கியம் கூடிவரும். பிரிந்த தம்பதியர் சேர்ந்து வாழும் யோகமும் உண்டு. சிலருக்குக் காதல் திருமணம் கைகூடும். குழந்தைப் பேறு இல்லாதவர் சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும்..பேச்சை மூலதனமாக வைத்துப் பிழைப்பவர்கள், குறிப்பாக ஆசிரியர் தொழில் செய்பவர்களுக்கு நல்ல யோகமாக இருக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வழக்குகள் நிலுவையில் இருந்தால் இந்த ஆண்டு அது சாதகமாக முடியும்.வங்கித் துறையில் பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்கு சொந்த வீடு, வண்டி வாங்கக்கூடிய யோகமும் உண்டு. சூரியன் உச்சம் பெற்று, செவ்வாயும் யோகம் பெறுவதால் சிலருக்கு அரசாங்கப் பதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு. முருகப்பெருமானை வழிபட்டு வர சிறப்பான யோகம் ஏற்படும்..தனுசு.தனுசு ராசி வாசகர்களே, உங்கள் ராசிக்கு ராசியாதிபதி இந்த ஆண்டு நான்காமிடத்தில் ஆட்சி பெறுவதால் சிலருக்கு சொந்த வீடு, நிலம், வண்டி வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். தாயாரின் உடல் நலம் வரும் குரு பெயர்ச்சிக்குப் பிறகு பூரண ஆரோக்கியம் பெற வாய்ப்பு உண்டு. சிலருக்கு பங்கு சந்தையில் நல்ல ஆதாயம் ஏற்படும். சிலர் தங்கம் முதலீட்டில் நல்ல வருவாய் காண்பர். பேச்சில் அதிக கவனம் தேவை. பேச்சை மூலதனமாக வைத்து பிழைப்பவர்கள் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பிள்ளைகள் படிப்பில் அதிக கவனம் தேவை..ஆண்டு துவக்கத்தில் ராசிக்கு மூன்றாமிடத்தில் நல்ல கிரக சேர்க்கை இருப்பதால் சிலருக்கு முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். சிலருக்கு இளைய சகோதர, சகோதரிகளால் ஆதாயம் ஏற்படும். சொந்த தொழில் செய்பவர்கள், பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல ஆதாயம் அடைவர். சிலர் சொந்த தொழில் செய்வதில் ஆர்வம் காட்டுவர். கணக்காயர் துறையில் புதிய வேலை வாய்ப்புக்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த ஆண்டு செழுமையாக வாழ குரு பகவானை வியாழன்தோறும் வழிபடுவது நல்லது..மகரம்.மகர ராசி வாசகர்களே, உங்கள் ராசிக்கு ஜன்ம சனி என்றாலும், தொழில் ஸ்தான அதிபதியான சுக்ரன் இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால் கலைத்துறையில் பின்னணி குரல் கொடுப்பவர்கள், நடிகர்கள், பாடகர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்களுக்கு நல்ல யோகத்தைத் தரக்கூடிய ஆண்டாக இது அமைகிறது. குறிப்பாக, பெண்களுக்கு கலைத்துறையில் அதிக ஆர்வம் ஏற்படும். ஜன்ம சனி என்பதால் அடிக்கடி உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. சொந்த வீட்டை பழுது பார்க்கும் சூழ்நிலை உருவாகும்..குரு மூன்றாம் இடத்தில் ஆட்சி பெறுவதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி நிச்சயமாக கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு ஜூலை மாதத்திற்குப் பிறகு திருமண ஆலோசனைகள் வர வாய்ப்புண்டு. பிரிந்த தம்பதியர் சேர்ந்து வாழும் சூழ்நிலை உருவாகும். சமையல் தொழில் செய்பவர்கள், அதையே சமூக வலைதளங்களில் கற்றுத் தருபவர்களுக்கு நல்ல பொருளாதார உயர்வு ஏற்பட வாய்ப்புண்டு. பிள்ளைகள் கல்வி மேலோங்கும். சிலர் விளையாட்டுத் துறையில் ஆர்வம் காட்டுவர். வெற்றியும் அடைவர். சனிக்கிழமை தோறும் ஆஞ்சனேயரை வழிபட்டு வர, கெடு பலன்கள் குறைய வாய்ப்புண்டு..கும்பம்.கும்ப ராசி வாசகர்களே, கண்டக சனி உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்திலேயே. தனகாரகன் தனஸ்தானத்தில் ஆட்சி பெறுவதால் நல்ல யோகம் ஏற்படும். குடும்பத்திற்குத் தேவையான பொருளாதார வசதிகளை மேம்படுத்தக்கூடிய காலகட்டம். பேச்சாற்றல் வெளிப்படும். சிலரது பேச்சாற்றல் அவர்களை வெளிநாட்டுக்குச் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். உதாரணமாக, உபன்யாசகர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், அரசுஆலோசகர்களுக்கு நல்ல ஆதாயம் ஏற்படும். வழக்குகள் நிலுவையில் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக முடியும்..திருமணமாகாதவர்களுக்கு இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நல்ல திருமண ஆலோசனைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு ரியல் எஸ்டேட் தொழில் நல்ல லாபத்தைத் தரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் ஆண்டாக இது இருக்கும். மருத்துவர்கள் நல்ல யோகத்தை அடைவார்கள். அதிலும் பாரம்பரிய மருத்துவம் என்று சொல்லக்கூடிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம், ஹோமியோபதி ஆகிய மருத்துவத் துறையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல யோகத்தைத் தரும். பெண்களுக்கு கலைத் துறையில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வர, சகல பிரச்னைகளும் குறையும்..மீனம்.மீன ராசி வாசகர்களே, உங்கள் ராசியாதிபதி ராசியிலேயே ஆட்சி பெறுவதால் சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் ஏற்படும். சிலருக்கு உத்தியோக உயர்வு, பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மாணவர்கள் கல்வி நிமித்தமாக வெளிநாடு செல்லக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும். திருமணமாகாதவர்களுக்கு இந்த ஆண்டின் முற்பகுதியான முதல் ஆறு மாதங்களில் நல்ல திருமண ஆலோசனைகள் தேடி வரும்..ராசிக்கு இரண்டாம் இடத்தில் ராகு இருப்பதால் பேச்சில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். பிள்ளைகள் பெற்றோர்களுக்கு அனுகூலமாக இருப்பர். மேலும், சிறப்பாகப் படித்து விருப்பப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்புகள் அமையும். அதோடு,கலைத் துறையில் பிரபலமாகக்கூடிய வாய்ப்பும் ஏற்படும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடிய யோகமும் இந்த ஆண்டு உண்டு. தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வர, இந்த ஆண்டு நல்ல யோகமாக இருக்கும்.