– சிவ. அ.விஜய் பெரியசுவாமி.திருக்கடையூரில் அவதரித்தவர் கலயன் எனும் சிவபக்தர். கலயன் என்றால் இத்தல ஈசன் அமிர்த கலயத்தால் ஆனவர் ஆதலால், இவருக்கு இவரது பெற்றோர் கலயன் எனப் பெயரிட்டனர். இவர் தன்னிடம் உள்ள செல்வத்தைக் கொண்டுசிவ அடியவர்களை உபசரித்து வந்தார். அதுமட்டுமல்ல; தினமும் இத்தல அபிராமிக்கும், அமிர்தகடேஸ்வரருக்கும் குங்கிலிய தூபம் எனும் சாம்பிராணிதூபத் திருப்பணியை தவறாமல் செய்து வந்தார். அதன் பொருட்டு ஈசனின் திருவிளையாடலால் அனைத்து சொத்துக்களையும் இழந்து வறுமையில் வாடினார். வறுமையில் வாடினாலும் தாம் செய்யும் தூபத் திருப்பணியைத் தவறாமல் செய்து வந்தார்..ஒரு நாள் அவரது மனைவியும், குழந்தைகளும் கடும் பட்டினியாய் இருந்தனர்.ஆம்! கையில் பொருள் இல்லை. இதனால் ஆலயத்தில் குங்கிலிய தூபம் இடவும் வழியில்லை. பசியில் கலயனாரின் குழந்தைகள் அழுதன. இதனால் பெரிதும் மனம் கலங்கி, இத்தல ஈசனை எண்ணியபடி அமர்ந்திருந்தார். பசி பொறுக்க முடியாமல் அழுத குழந்தைகளின் முகம் பார்த்து வாடிய கலயனாரின் மனைவி தனது கழுத்தில் கிடந்த தாலியை கணவர் கையில் கொடுத்து, அதை விற்று நெல் வாங்கி வரும்படி கூறினார்..தாலியை கையில் வாங்கிய கலயனார், நெல் வாங்கி வரப் போனார். இப்போதும் அவர் மனதில் இன்று ஈசனுக்கும் அம்பிகைக்கும் குங்கிலிய தூபம் காட்ட முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தது. அப்போது வழியில் ஒரு வணிகன் குங்கிலிய பொதிமூட்டை கொண்டு வரக் கண்டு, அவனிடம் தம் கையிலிருந்த மனைவியின் தாலியை விலையாகக் கொடுத்து அதற்கு ஈடாக அந்த குங்கிலிய மூட்டை முழுவதையும் பெற்றுக்கொண்டு திருக்கடையூர் ஆலயத்துக்குச் சென்று அங்கு குங்கிலியத்தை புகைய விட்டு சுவாமியை துதித்துக்கொண்டு இருந்தார்.அதில் வீட்டை மறந்தார்; மனைவி, குழந்தைகள் பசியால் துடிப்பதை மறந்தார்..அப்போது அங்கு வந்த அன்பர் ஒருவர், "என்ன கலயனாரே! சாம்பிராணி புகை போடுவது போல் குங்கிலியத்தை இப்படியா போடுவது?" எனக் கேட்க, "சிவத்தொண்டு செய்வதில் கணக்குப் பார்க்க கூடாதய்யா" என்றபடிஉள் பிராகாரத்தில் அமர்ந்து, 'சிவாய நம' எனக் கூறி, தியானத்தில் அமர்ந்தார் கலயனார். ஆனால், வீட்டில் பசியால் வாடிப்போன அவரது குழந்தைகளும், மனைவியும் நெல் வாங்கி வந்துவிடுவார் எனக் கருதி கலயனாரின் வருகைக்காகக் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் ஆலயத்தின் பிராகாரத்தில் படுத்து உறங்கிப் போனார் கலயனார். வீட்டில் அவரின் வருகையை எதிர்பார்த்து கவலையுடன்பசிக் கொடுமையால் வாடியிருந்த அவரது மனைவியும் உறங்கிப்போனார்..அப்போது கலயனார் மனைவியின் கனவில் வந்த ஈசன், ''உத்தமியே! உனது கணவன் இப்போது கோயிலில் உறங்கிக் கொண்டிருக்கிறான். அவனது பக்தியின் உயர்வை உலகிற்கு உணர்த்த வேண்டியே வறுமையைக் கொடுத்தோம். கையில் பொருள் இல்லாமல் குடும்பமே பசியால் வாடி வதங்கியபோதும், நீ உனது திருமாங்கல்யத்தைக் கொடுத்து நெல் வாங்கி வரச் சொல்லியபோதும், அதற்கும் குங்கிலியம் வாங்கி வந்து எமது ஆலயத்தில் தூபம் காட்டி மகிழ்வித்து வீட்டை மறந்து இதோ உறங்கி கொண்டிருக்கிறான். பதறாதே! குபேரன் எமது கட்டளையின்படி இப்போதே உங்கள் இல்லத்தில் சகல வசதிகளையும், வளங்களையும் அளித்து உங்கள் இல்லத்தை நிறைப்பான். கலயனின் உண்மையான தூப சேவைக்கு இது எமது அன்புப் பரிசு" என்று அருளி மறைந்தார் ஈசன்..விழித்துப் பார்த்த கலயனாரின் மனைவியால் நம்ப முடியவில்லை. ஆம்! கனவில் ஈசன் கூறியதுபோல இப்போது அவள் வீட்டில் நெல் மூட்டைகளும், பொன் மூட்டைகளுமாக குவிந்திருந்தன. வறுமை தாண்டவமாடிய அந்த வீடு ஈசன் அருளாசியால் பெரும் மாளிகையாக மாறி இருந்தது. இங்கே ஆலயத்தில் தூங்கிக் கொண்டிருந்த கலயனார் அப்போதுதான் விழித்துத் திடுக்கிட்டார். வீட்டு நினைவு அவருக்கு வந்து, 'மனைவி தாலியைக் கொடுத்து குழந்தைகளுக்கு உணவு வாங்கிவரச் சொன்னாரே' என்ற எண்ணம் மேலிட, ஆலயத்திலிருந்து வீட்டிற்குப் புறப்பட்டார். தன்னுடைய தெருவில் வீட்டைத் தேடினார். என்ன மாயம்! வீட்டைக் காணவில்லை. அப்போது ஒரு மாளிகையில் இருந்து கலயனாரின் குழந்தையும் மனைவியும், "இங்கே நம் வீட்டுக்குள் வாருங்கள்" என்று அழைத்தனர். அதிர்ந்துவிட்டார் கலயனார்..ஆம்! அவரது வீடு இருந்த இடத்தில் பெரும் மாளிகை இருந்தது. அதனுள் இருந்துதான் அவரது மனைவியும் குழந்தைகளும் அவரை அழைத்தனர். வியந்தவாறே வீட்டிற்குள் சென்று குழந்தைகளையும், மனைவியையும் அணைத்துக்கொண்ட கலயனாரிடம் நடந்தவை அனைத்தையும் தெரிவித்தார் அவரது மனைவி. ஆனந்தத்தின் எல்லைக்குச் சென்ற கலயனார், ஈசனை தொழுது மீண்டும் ஈசனுக்கும், அன்னை அபிராமிக்கும் குங்கிலிய தூபத் திருப்பணி செய்ய ஆலயத்தை நோக்கி நடக்கலானார்..திருக்கடையூர் சிவாலயத்தில் ஈசனுக்கும், அம்பிகைக்கும் இப்படி குங்கிலிய தூபம் இடும் திருப்பணியை தமது வறுமை நிலையிலும் செய்து, ஈசன் அருட்திறத்தால் வாழ்வில் கலயனார் உயர்ந்ததால் கலயனாரை, 'குங்கிலிய கலயனார்' என அழைத்தனர். இப்படியே பல காலம் அவரது தூபத் திருப்பணி தொடர்ந்தது..ஒரு நாள் கலயனாரை திருக்கடையூரில் சந்தித்த அன்பர் ஒருவர் திருப்பனந்தாள் பெரியநாயகி உடனுறை அருணஜடேஸ்வரர் ஆலய கருவறை சிவலிங்கம் சாய்ந்து உள்ளது என்றும் அதனை மன்னர் படைகளாலும் கூட நிமிர்த்த முடியவில்லை என்றும் கூறினார். உடனே ஈசனின் சித்தம் எனக்கருதி, திருப்பனந்தாள் நோக்கிப் பயணமானார் கலயனார்..ஒரு முறை தாடகை எனும் பெண், புத்திரப் பாக்கியம் வேண்டி திருப்பனந்தாள் ஈசனை தினமும் மாலை சூட்டி வழிபட்டு வந்தாள். ஒருநாள் சிவலிங்கத்துக்கு மாலை சாத்தும்போது எதிர்பாராத விதமாக தாடகையின் இடுப்பில் இருந்து சேலை நழுவியது. அதனை இரு கைகளாலும் பற்றிக்கொண்டே சிவலிங்கத்துக்கு மாலை அணிவிக்க முயன்றாள். முடியவில்லை. இதனால் தாடகை பெரும் வருத்தம் கொண்டாள். அவளுக்காக இரங்கிய ஈசன், தனது சிவலிங்கத் திருமேனியை சிறிது சாய்த்து அவளது மாலையை ஏற்றுக்கொண்டார். அன்றுமுதல் திருப்பனந்தாளில் சிவலிங்கம் சாய்ந்தே இருந்தது..ஒரு சமயம் இங்கு வழிபட வந்த சோழ மன்னன், சிவலிங்கம் சாய்ந்திருப்பதைக் கண்டு அதனை நிமிர்த்த முயன்றான். தனது படை வீரர்களையும், யானை, குதிரை முதலியவற்றையும் கொண்டு சாய்ந்திருந்த சிவலிங்கத்தைக் கட்டி இழுத்துப் பார்த்தும் அது சற்று கூட அசைந்து கொடுக்கவில்லை. இந்த நிலையில் குங்கிலியக் கலயனார் திருப்பனந்தாள் வந்து சேர்ந்தார். சாய்ந்திருந்த ஈசனைக் கண்ட அவர், சிவலிங்கத்தை தனது கழுத்தில் ஒரு சுருக்குக் கயிற்றை கட்டிக் கொண்டு அந்தக் கயிற்றின் மறு முனையில் சிவலிங்கத்தைக் கட்டி நிமிர்த்த முயன்றார்.முதலில் சிவலிங்கம் நிமிரவில்லை. அதனால் குங்கிலியக் கலயனாரின் கழுத்தில் போடப்பட்டிருந்த சுருக்கு இறுகிக்கொண்டே வந்தது..சிவலிங்கம் நிமிரவில்லை என்றால் கயிறு இறுகி கலயனார் உயிர் துறப்பது நிச்சயம் என்ற நிலை வந்து விட்டது. 'சிவாய நம' என்ற மந்திரத்தை உச்சரித்தபடியே மீண்டும் சிவலிங்கத்தை கயிற்றால் கட்டி இழுத்தார். என்ன ஆச்சரியம்! அதுவரை நிமிராத சிவலிங்கம் நிமிர்ந்தது. ஆம்! அன்று பக்தைக்காக சாய்ந்த சிவலிங்கம் இன்றுதம் பக்தன் கலயனுக்காக மீண்டும் நிமிர்ந்தது. பின்பு சிறிது காலம் அங்கும் ஈசனுக்கு குங்கிலிய திருப்பணியைத் தொடர்ந்த கலயனார் மீண்டும் திருக்கடையூருக்கு வந்தார். தினமும் முன்புபோலவே தமது குங்கிலிய தூப திருப்பணியை அமிர்தகடேஸ்வரருக்கும், அன்னை அபிராமிக்கும் செய்து வந்தார்..அந்த சமயத்தில் ஒருநாள் திருக்கடையூருக்கு சம்பந்தரும், அப்பரும் வருகை புரிந்தனர். அவர்களை வரவேற்று ஆலயத்துக்கு அழைத்துச் சென்று தமது தூபத் திருப்பணியை தொடர்ந்து செய்து முக்தி பெற்று, பின்னாளில் திருவாரூர் ஈசன் அருளால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய திருத்தொண்டத்தொகையில் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரானார் குங்கிலியக் கலய நாயனார். ஆண்டுதோறும் திருக்கடையூர் திருத்தலத்தில் ஆவணி மாதம் மூலம் நட்சத்திர நன்னாளில் குங்கிலியக் கலய நாயனார் குரு பூஜை விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அட்ட வீரட்டத் தலங்களில் திருக்கடையூர் ஈசன், மார்கண்டேயனுக்காக எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்து அருள்பாலிக்கும் திருத்தலமாகும்..இங்கு காலனை சம்காரம் செய்த காலசம்காரமூர்த்தியும், அவரது உடனுறை சக்தியாக பாலாம்பிகை அம்மனும் தனிச்சன்னிதியில் அருள்கிறார்கள். இத்தல ஈசனை வழிபடுவோருக்கு ஆயுள் பலம் அதிகரிக்கும். மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள், ஆயுள் தோஷம் உள்ளவர்கள் இங்கு ஈசனை வழிபட்டு ஆயுள் தோஷம் விலகி, ஆயுள் விருத்தி பெறுகிறார்கள். மார்க்கண்டேயர் சாகாவரம் பெற்ற தலம் இது என்பதால், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், ஆயுள் ஹோமம் போன்றவை அனுதினமும் இங்கு நடைபெறுகிறது..27.3.2022 அன்று இந்தத் திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது. அதைத் தொடர்ந்து மண்டல பூஜைகள் தற்போது நடைபெற்று வருகின்றன..இத்திருத்தல கருவறையில் பசு நெய் சேர்த்து குங்குலிய தூபமிட்டு வழிபடுவது வாழ்வின் வறுமை, தரித்திரங்களை அகற்றுவதாகும். தம் பக்தன் அபிராமி பட்டரின் சொல்லினை மெய்ப்பிக்க தை மாத அமாவாசை தினத்தில் வானில் பௌர்ணமி நிலவை வரவழைத்து அற்புதம் நிகழ்த்திய அன்னை அபிராமி அருளும் பவித்திரமான திருத்தலம் இதுவாகும். அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதியை பாராயணம் செய்து இத்தல அம்பிகையை வழிபட்டால் பதினாறு வகை பேறுகளையும் பெற்று வாழ்வாங்கு வாழலாம்..அமைவிடம் : மயிலாடுதுறையில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும், சீர்காழியில் இருந்து 17 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது திருக்கடையூர்.
– சிவ. அ.விஜய் பெரியசுவாமி.திருக்கடையூரில் அவதரித்தவர் கலயன் எனும் சிவபக்தர். கலயன் என்றால் இத்தல ஈசன் அமிர்த கலயத்தால் ஆனவர் ஆதலால், இவருக்கு இவரது பெற்றோர் கலயன் எனப் பெயரிட்டனர். இவர் தன்னிடம் உள்ள செல்வத்தைக் கொண்டுசிவ அடியவர்களை உபசரித்து வந்தார். அதுமட்டுமல்ல; தினமும் இத்தல அபிராமிக்கும், அமிர்தகடேஸ்வரருக்கும் குங்கிலிய தூபம் எனும் சாம்பிராணிதூபத் திருப்பணியை தவறாமல் செய்து வந்தார். அதன் பொருட்டு ஈசனின் திருவிளையாடலால் அனைத்து சொத்துக்களையும் இழந்து வறுமையில் வாடினார். வறுமையில் வாடினாலும் தாம் செய்யும் தூபத் திருப்பணியைத் தவறாமல் செய்து வந்தார்..ஒரு நாள் அவரது மனைவியும், குழந்தைகளும் கடும் பட்டினியாய் இருந்தனர்.ஆம்! கையில் பொருள் இல்லை. இதனால் ஆலயத்தில் குங்கிலிய தூபம் இடவும் வழியில்லை. பசியில் கலயனாரின் குழந்தைகள் அழுதன. இதனால் பெரிதும் மனம் கலங்கி, இத்தல ஈசனை எண்ணியபடி அமர்ந்திருந்தார். பசி பொறுக்க முடியாமல் அழுத குழந்தைகளின் முகம் பார்த்து வாடிய கலயனாரின் மனைவி தனது கழுத்தில் கிடந்த தாலியை கணவர் கையில் கொடுத்து, அதை விற்று நெல் வாங்கி வரும்படி கூறினார்..தாலியை கையில் வாங்கிய கலயனார், நெல் வாங்கி வரப் போனார். இப்போதும் அவர் மனதில் இன்று ஈசனுக்கும் அம்பிகைக்கும் குங்கிலிய தூபம் காட்ட முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தது. அப்போது வழியில் ஒரு வணிகன் குங்கிலிய பொதிமூட்டை கொண்டு வரக் கண்டு, அவனிடம் தம் கையிலிருந்த மனைவியின் தாலியை விலையாகக் கொடுத்து அதற்கு ஈடாக அந்த குங்கிலிய மூட்டை முழுவதையும் பெற்றுக்கொண்டு திருக்கடையூர் ஆலயத்துக்குச் சென்று அங்கு குங்கிலியத்தை புகைய விட்டு சுவாமியை துதித்துக்கொண்டு இருந்தார்.அதில் வீட்டை மறந்தார்; மனைவி, குழந்தைகள் பசியால் துடிப்பதை மறந்தார்..அப்போது அங்கு வந்த அன்பர் ஒருவர், "என்ன கலயனாரே! சாம்பிராணி புகை போடுவது போல் குங்கிலியத்தை இப்படியா போடுவது?" எனக் கேட்க, "சிவத்தொண்டு செய்வதில் கணக்குப் பார்க்க கூடாதய்யா" என்றபடிஉள் பிராகாரத்தில் அமர்ந்து, 'சிவாய நம' எனக் கூறி, தியானத்தில் அமர்ந்தார் கலயனார். ஆனால், வீட்டில் பசியால் வாடிப்போன அவரது குழந்தைகளும், மனைவியும் நெல் வாங்கி வந்துவிடுவார் எனக் கருதி கலயனாரின் வருகைக்காகக் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் ஆலயத்தின் பிராகாரத்தில் படுத்து உறங்கிப் போனார் கலயனார். வீட்டில் அவரின் வருகையை எதிர்பார்த்து கவலையுடன்பசிக் கொடுமையால் வாடியிருந்த அவரது மனைவியும் உறங்கிப்போனார்..அப்போது கலயனார் மனைவியின் கனவில் வந்த ஈசன், ''உத்தமியே! உனது கணவன் இப்போது கோயிலில் உறங்கிக் கொண்டிருக்கிறான். அவனது பக்தியின் உயர்வை உலகிற்கு உணர்த்த வேண்டியே வறுமையைக் கொடுத்தோம். கையில் பொருள் இல்லாமல் குடும்பமே பசியால் வாடி வதங்கியபோதும், நீ உனது திருமாங்கல்யத்தைக் கொடுத்து நெல் வாங்கி வரச் சொல்லியபோதும், அதற்கும் குங்கிலியம் வாங்கி வந்து எமது ஆலயத்தில் தூபம் காட்டி மகிழ்வித்து வீட்டை மறந்து இதோ உறங்கி கொண்டிருக்கிறான். பதறாதே! குபேரன் எமது கட்டளையின்படி இப்போதே உங்கள் இல்லத்தில் சகல வசதிகளையும், வளங்களையும் அளித்து உங்கள் இல்லத்தை நிறைப்பான். கலயனின் உண்மையான தூப சேவைக்கு இது எமது அன்புப் பரிசு" என்று அருளி மறைந்தார் ஈசன்..விழித்துப் பார்த்த கலயனாரின் மனைவியால் நம்ப முடியவில்லை. ஆம்! கனவில் ஈசன் கூறியதுபோல இப்போது அவள் வீட்டில் நெல் மூட்டைகளும், பொன் மூட்டைகளுமாக குவிந்திருந்தன. வறுமை தாண்டவமாடிய அந்த வீடு ஈசன் அருளாசியால் பெரும் மாளிகையாக மாறி இருந்தது. இங்கே ஆலயத்தில் தூங்கிக் கொண்டிருந்த கலயனார் அப்போதுதான் விழித்துத் திடுக்கிட்டார். வீட்டு நினைவு அவருக்கு வந்து, 'மனைவி தாலியைக் கொடுத்து குழந்தைகளுக்கு உணவு வாங்கிவரச் சொன்னாரே' என்ற எண்ணம் மேலிட, ஆலயத்திலிருந்து வீட்டிற்குப் புறப்பட்டார். தன்னுடைய தெருவில் வீட்டைத் தேடினார். என்ன மாயம்! வீட்டைக் காணவில்லை. அப்போது ஒரு மாளிகையில் இருந்து கலயனாரின் குழந்தையும் மனைவியும், "இங்கே நம் வீட்டுக்குள் வாருங்கள்" என்று அழைத்தனர். அதிர்ந்துவிட்டார் கலயனார்..ஆம்! அவரது வீடு இருந்த இடத்தில் பெரும் மாளிகை இருந்தது. அதனுள் இருந்துதான் அவரது மனைவியும் குழந்தைகளும் அவரை அழைத்தனர். வியந்தவாறே வீட்டிற்குள் சென்று குழந்தைகளையும், மனைவியையும் அணைத்துக்கொண்ட கலயனாரிடம் நடந்தவை அனைத்தையும் தெரிவித்தார் அவரது மனைவி. ஆனந்தத்தின் எல்லைக்குச் சென்ற கலயனார், ஈசனை தொழுது மீண்டும் ஈசனுக்கும், அன்னை அபிராமிக்கும் குங்கிலிய தூபத் திருப்பணி செய்ய ஆலயத்தை நோக்கி நடக்கலானார்..திருக்கடையூர் சிவாலயத்தில் ஈசனுக்கும், அம்பிகைக்கும் இப்படி குங்கிலிய தூபம் இடும் திருப்பணியை தமது வறுமை நிலையிலும் செய்து, ஈசன் அருட்திறத்தால் வாழ்வில் கலயனார் உயர்ந்ததால் கலயனாரை, 'குங்கிலிய கலயனார்' என அழைத்தனர். இப்படியே பல காலம் அவரது தூபத் திருப்பணி தொடர்ந்தது..ஒரு நாள் கலயனாரை திருக்கடையூரில் சந்தித்த அன்பர் ஒருவர் திருப்பனந்தாள் பெரியநாயகி உடனுறை அருணஜடேஸ்வரர் ஆலய கருவறை சிவலிங்கம் சாய்ந்து உள்ளது என்றும் அதனை மன்னர் படைகளாலும் கூட நிமிர்த்த முடியவில்லை என்றும் கூறினார். உடனே ஈசனின் சித்தம் எனக்கருதி, திருப்பனந்தாள் நோக்கிப் பயணமானார் கலயனார்..ஒரு முறை தாடகை எனும் பெண், புத்திரப் பாக்கியம் வேண்டி திருப்பனந்தாள் ஈசனை தினமும் மாலை சூட்டி வழிபட்டு வந்தாள். ஒருநாள் சிவலிங்கத்துக்கு மாலை சாத்தும்போது எதிர்பாராத விதமாக தாடகையின் இடுப்பில் இருந்து சேலை நழுவியது. அதனை இரு கைகளாலும் பற்றிக்கொண்டே சிவலிங்கத்துக்கு மாலை அணிவிக்க முயன்றாள். முடியவில்லை. இதனால் தாடகை பெரும் வருத்தம் கொண்டாள். அவளுக்காக இரங்கிய ஈசன், தனது சிவலிங்கத் திருமேனியை சிறிது சாய்த்து அவளது மாலையை ஏற்றுக்கொண்டார். அன்றுமுதல் திருப்பனந்தாளில் சிவலிங்கம் சாய்ந்தே இருந்தது..ஒரு சமயம் இங்கு வழிபட வந்த சோழ மன்னன், சிவலிங்கம் சாய்ந்திருப்பதைக் கண்டு அதனை நிமிர்த்த முயன்றான். தனது படை வீரர்களையும், யானை, குதிரை முதலியவற்றையும் கொண்டு சாய்ந்திருந்த சிவலிங்கத்தைக் கட்டி இழுத்துப் பார்த்தும் அது சற்று கூட அசைந்து கொடுக்கவில்லை. இந்த நிலையில் குங்கிலியக் கலயனார் திருப்பனந்தாள் வந்து சேர்ந்தார். சாய்ந்திருந்த ஈசனைக் கண்ட அவர், சிவலிங்கத்தை தனது கழுத்தில் ஒரு சுருக்குக் கயிற்றை கட்டிக் கொண்டு அந்தக் கயிற்றின் மறு முனையில் சிவலிங்கத்தைக் கட்டி நிமிர்த்த முயன்றார்.முதலில் சிவலிங்கம் நிமிரவில்லை. அதனால் குங்கிலியக் கலயனாரின் கழுத்தில் போடப்பட்டிருந்த சுருக்கு இறுகிக்கொண்டே வந்தது..சிவலிங்கம் நிமிரவில்லை என்றால் கயிறு இறுகி கலயனார் உயிர் துறப்பது நிச்சயம் என்ற நிலை வந்து விட்டது. 'சிவாய நம' என்ற மந்திரத்தை உச்சரித்தபடியே மீண்டும் சிவலிங்கத்தை கயிற்றால் கட்டி இழுத்தார். என்ன ஆச்சரியம்! அதுவரை நிமிராத சிவலிங்கம் நிமிர்ந்தது. ஆம்! அன்று பக்தைக்காக சாய்ந்த சிவலிங்கம் இன்றுதம் பக்தன் கலயனுக்காக மீண்டும் நிமிர்ந்தது. பின்பு சிறிது காலம் அங்கும் ஈசனுக்கு குங்கிலிய திருப்பணியைத் தொடர்ந்த கலயனார் மீண்டும் திருக்கடையூருக்கு வந்தார். தினமும் முன்புபோலவே தமது குங்கிலிய தூப திருப்பணியை அமிர்தகடேஸ்வரருக்கும், அன்னை அபிராமிக்கும் செய்து வந்தார்..அந்த சமயத்தில் ஒருநாள் திருக்கடையூருக்கு சம்பந்தரும், அப்பரும் வருகை புரிந்தனர். அவர்களை வரவேற்று ஆலயத்துக்கு அழைத்துச் சென்று தமது தூபத் திருப்பணியை தொடர்ந்து செய்து முக்தி பெற்று, பின்னாளில் திருவாரூர் ஈசன் அருளால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய திருத்தொண்டத்தொகையில் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரானார் குங்கிலியக் கலய நாயனார். ஆண்டுதோறும் திருக்கடையூர் திருத்தலத்தில் ஆவணி மாதம் மூலம் நட்சத்திர நன்னாளில் குங்கிலியக் கலய நாயனார் குரு பூஜை விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அட்ட வீரட்டத் தலங்களில் திருக்கடையூர் ஈசன், மார்கண்டேயனுக்காக எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்து அருள்பாலிக்கும் திருத்தலமாகும்..இங்கு காலனை சம்காரம் செய்த காலசம்காரமூர்த்தியும், அவரது உடனுறை சக்தியாக பாலாம்பிகை அம்மனும் தனிச்சன்னிதியில் அருள்கிறார்கள். இத்தல ஈசனை வழிபடுவோருக்கு ஆயுள் பலம் அதிகரிக்கும். மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள், ஆயுள் தோஷம் உள்ளவர்கள் இங்கு ஈசனை வழிபட்டு ஆயுள் தோஷம் விலகி, ஆயுள் விருத்தி பெறுகிறார்கள். மார்க்கண்டேயர் சாகாவரம் பெற்ற தலம் இது என்பதால், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், ஆயுள் ஹோமம் போன்றவை அனுதினமும் இங்கு நடைபெறுகிறது..27.3.2022 அன்று இந்தத் திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது. அதைத் தொடர்ந்து மண்டல பூஜைகள் தற்போது நடைபெற்று வருகின்றன..இத்திருத்தல கருவறையில் பசு நெய் சேர்த்து குங்குலிய தூபமிட்டு வழிபடுவது வாழ்வின் வறுமை, தரித்திரங்களை அகற்றுவதாகும். தம் பக்தன் அபிராமி பட்டரின் சொல்லினை மெய்ப்பிக்க தை மாத அமாவாசை தினத்தில் வானில் பௌர்ணமி நிலவை வரவழைத்து அற்புதம் நிகழ்த்திய அன்னை அபிராமி அருளும் பவித்திரமான திருத்தலம் இதுவாகும். அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதியை பாராயணம் செய்து இத்தல அம்பிகையை வழிபட்டால் பதினாறு வகை பேறுகளையும் பெற்று வாழ்வாங்கு வாழலாம்..அமைவிடம் : மயிலாடுதுறையில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும், சீர்காழியில் இருந்து 17 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது திருக்கடையூர்.