– ரேவதி பாலு.நமது நான்கு வேதங்களான ரிக், சாம, யஜுர், அதர்வண வேதங்களுள் ரிக் வேதமே மிகத் தொன்மையானது. இந்த வேதத்தில் இருநூறு ஸ்லோகங்கள் அக்னி பகவான் குறித்தே சொல்லப்பட்டிருக்கின்றன..அக்னி என்றால் நெருப்பு. அக்னி நெருப்புக் கடவுளைக் குறிக்கிறது. அக்னி புருஷன் ஒரே சமயத்தில் வானுலகிலும், பூவுலகிலும் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. நமது புராணங்களின்படி அவருக்கு இரண்டு முகங்கள், மூன்று கால்கள், மூன்று உடல்கள் மற்றும் ஏழு கரங்கள், 'ஸ்வஸ்திக்' வடிவத்தில் காணப்படுகிறது. ஹோமங்களில் அக்னி வளர்க்கப்படும்போது அவருடைய கரங்களை ஏழு நாக்குகளாகவும் குறிப்பிடுவதும் உண்டு. ஹோமத்தில் நாம் எந்த தேவதையைக் குறித்து வேள்வி செய்யும்போதும் அக்னி தேவன்தான் துதுவராக இருந்து நாம் அக்னியில் சமர்ப்பிக்கும், 'அவிஸை' அந்தந்த தேவதைகளிடம் சேர்ப்பிக்கிறார். அக்னி வளர்க்காமல் எந்த ஒரு நல்ல காரியமும் செய்யப்படுவதில்லை. திருமணத்தையே, 'அக்னி சாட்சி'யாக வைத்துச் செய்வது என்றுதான் சொல்வார்கள். இப்படியாகப் போற்றப்படும் அக்னி பகவானைக் கண்டு அஞ்சி ஓடுவதே சித்திரை மாதம் அக்னி நட்சத்திர காலகட்டமாகும்..கோடைக் காலத்தில் வருடா வருடம் மே மாதத்தில் 4ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இருக்கும் காலகட்டத்தை, 'அக்னி நட்சத்திரம்' என்றும், 'கத்திரி வெய்யில்' என்றும் குறிப்பிடுகிறார்கள். இதற்கு ஒரு புராண கதை சொல்லப்படுகிறது..யமுனை ஆற்றங்கரைக்கு அருகில், 'காண்டவ வனம்' என்னும் பெயரில் அபூர்வ மூலிகை மரங்களுடன்கூடிய ஒரு காடு இருந்தது. இந்த வனத்தை தேவேந்திரன் பாதுகாத்து அவ்வப்போது மரங்கள் செழித்து வளர மழை பொழியச் செய்து வளர்த்து வந்தான். இயற்கை எழில் கொஞ்சும் அந்த வனப்பகுதிக்கு அருகில் ஓடும் யமுனை நதியில் ஒரு நாள் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ச்சுனனும் மேலும் சில தோழர்களுடன் நீராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் நீராடி கரையேறும்போது ஒரு அந்தணர் அவர்களை நோக்கி வந்து கை கூப்பினார்.."உங்களைப் பார்த்தால் கருணை மிக்கவர்களாக தோன்றுகிறீர்கள். எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்த வனத்தில் என் பசியைத் தீர்க்கும் உணவு இருக்கிறது. என் பசி தீர உங்களால்தான் உதவ முடியும்" என்றார்..அவரைச் சற்று நேரம் உற்றுப் பார்த்த ஸ்ரீகிருஷ்ணர், "அக்னி தேவரே! ஏனிந்த வேஷம்? உங்கள் சுய ரூபத்திலேயே வந்திருக்கலாமே?" என்றதும், அக்னி தேவர் தனது சுய ரூபத்தில் ஸ்ரீகிருஷ்ணரைப் பணிந்து நின்றார்.."பரமாத்மாவே! தங்களுக்குத் தெரியாதது இவ்வுலகில் என்ன இருக்கிறது? சுவேதசி என்னும் மன்னனுக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகளாக யாகம் வளர்த்து நடத்தி வருகிறார். அந்த யாகத்தில் விடப்படும் அதிகப்படியான நெய்யை உண்டு நான் மந்தமாகிப்போனேன். இந்த வனத்தில் உள்ள மூலிகை மரங்களை என் சக்தியால் எரித்து உட்கொண்டால்தான் என் பிணி நீங்கும்" என்றார் அக்னி தேவர்.."இதற்கு எங்களை ஏன் கேட்க வேண்டும்? தாங்களே வனத்தில் பிரவேசித்து மரங்களை உட்கொள்ளலாமே?" என்றான் அர்ச்சுனன்.."நான் ஒவ்வொரு முறை வனத்தில் நுழையும்போதும் இந்த வனத்தைக் காக்கும் தேவேந்திரன் மழையைப் பொழிவித்து தீ நாக்குகள் எரிய விடாமல் அணைத்து விடுகிறான்" என்றான்.."சரி! இந்திரன் உங்களைத் தடுக்காதவாறு நாங்கள் உதவி புரிகிறோம். ஆனால், நாங்கள் இங்கே நீராடத்தான் வந்தோம். எங்களிடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை. தாங்கள் வில், அம்பறாத்துணி, அம்புகள் போன்றவற்றை அர்ச்சுனனுக்குத் தந்தால் மட்டுமே எங்களால் உங்களுக்கு உதவ முடியும். ஆனால் ஒன்று, தாங்கள் 21 நாட்கள் மட்டுமே இந்த வனத்தை எரித்து தங்கள் பிணியைத் தீர்த்துக் கொள்ளலாம்" என்றார்..அக்னி தேவரும் இதற்கு சம்மதித்து காண்டீப வில், அம்பறாத்துணி, அம்புகள் முதலியவற்றை அர்ச்சுனனுக்கு அளித்தார்..அக்னி தேவர் காண்டவ வனத்திற்குள் பிரவேசித்தவுடனேயே இந்திரன் மேகங்களைக் கூட்டி, மழை பொழிய வைத்தான். உடனே அர்ச்சுனன் அம்புகளால், 'சரக்கூடு' ஒன்றைக் கட்டி அந்த மழையைப் பொழிய விடாமல் தடுத்தான். அக்னியும் ஏழு நாட்கள் அந்த வனத்திலுள்ள மூலிகை மரங்களை கபளீகரம் செய்து, தன் பிணியைத் தீர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். பிறகு ஏழு நாட்கள் சுற்றிலுமுள்ள அரிய வகை மரங்களை உண்டார். பிறகு கடைசி ஏழு நாட்கள் மிதமாக உண்டு பிணி தீர்ந்து ஸ்ரீகிருஷ்ணருக்கும், அர்ச்சுனனுக்கும் நன்றி கூறி, நமஸ்கரித்து விடை பெற்றார்..அக்னி தேவர் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று சொல்லப்படுகிறது. சில சமயங்களில் அதைத் தாண்டியும் சில நாட்கள் அக்னியின் தாக்கம் பூமியில் இருப்பதால் அதை, 'பின் கத்திரி வெய்யில்' என்று கூறுகிறார்கள்..இந்தக் காலகட்டத்தில் வெய்யில் சுட்டெரிக்கும். மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுவார்கள். உடலில் நீர்ச்சத்து குறைவதால் சிலருக்கு மயக்கம் ஏற்படும். வறுத்தெடுக்கும் இந்த அக்னி நட்சத்திர நாட்களில் விவசாய வேலைகள் செய்யக் கூடாது என்று கூறப்படுகிறது. செடி, கொடி மரங்களை வெட்டக் கூடாது. விதை விதைக்கக் கூடாது. கிணறு, குளம் தோண்டக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது. மிகவும் தேவையாக இருந்தாலொழிய வெளியே காலை பத்து மணி முதல் மாலை நாலு மணி வரை செல்லக் கூடாது..இதன் தாக்கம் மக்களை பாதிக்காமல் இருக்க கோயில்களில் அம்மனுக்கு அபிஷேகம் செய்வித்து, பானகம், நீர் மோர் போன்றவற்றை நைவேத்தியம் செய்து விநியோகிப்பார்கள். மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ஆங்காங்கே நீர்ப்பந்தல்கள் அமைத்து சாலை வழி செல்லும் பயணிகளுக்கு நீரும், மோரும் விநியோகிக்கலாம். அனைவரும் நீர்ச்சத்து மிகுந்த உணவு வகைகளையே சாப்பிட்டு தங்கள் உடல் நலம் காத்துக்கொள்ள வேண்டும்..மக்கள் தங்கள் உடல் நலம் பாதிக்காமல் இருக்க, இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில்,.'அஸ்வத்தாய வித்மஹேபாச ஹஸ்தாய தீமஹிதந்நோ சூர்ய ப்ரசோதயாத்'.என்னும் சூர்ய காயத்ரி மந்திரத்தை ஜபித்து சூரிய பகவானை வழிபடலாம்.
– ரேவதி பாலு.நமது நான்கு வேதங்களான ரிக், சாம, யஜுர், அதர்வண வேதங்களுள் ரிக் வேதமே மிகத் தொன்மையானது. இந்த வேதத்தில் இருநூறு ஸ்லோகங்கள் அக்னி பகவான் குறித்தே சொல்லப்பட்டிருக்கின்றன..அக்னி என்றால் நெருப்பு. அக்னி நெருப்புக் கடவுளைக் குறிக்கிறது. அக்னி புருஷன் ஒரே சமயத்தில் வானுலகிலும், பூவுலகிலும் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. நமது புராணங்களின்படி அவருக்கு இரண்டு முகங்கள், மூன்று கால்கள், மூன்று உடல்கள் மற்றும் ஏழு கரங்கள், 'ஸ்வஸ்திக்' வடிவத்தில் காணப்படுகிறது. ஹோமங்களில் அக்னி வளர்க்கப்படும்போது அவருடைய கரங்களை ஏழு நாக்குகளாகவும் குறிப்பிடுவதும் உண்டு. ஹோமத்தில் நாம் எந்த தேவதையைக் குறித்து வேள்வி செய்யும்போதும் அக்னி தேவன்தான் துதுவராக இருந்து நாம் அக்னியில் சமர்ப்பிக்கும், 'அவிஸை' அந்தந்த தேவதைகளிடம் சேர்ப்பிக்கிறார். அக்னி வளர்க்காமல் எந்த ஒரு நல்ல காரியமும் செய்யப்படுவதில்லை. திருமணத்தையே, 'அக்னி சாட்சி'யாக வைத்துச் செய்வது என்றுதான் சொல்வார்கள். இப்படியாகப் போற்றப்படும் அக்னி பகவானைக் கண்டு அஞ்சி ஓடுவதே சித்திரை மாதம் அக்னி நட்சத்திர காலகட்டமாகும்..கோடைக் காலத்தில் வருடா வருடம் மே மாதத்தில் 4ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இருக்கும் காலகட்டத்தை, 'அக்னி நட்சத்திரம்' என்றும், 'கத்திரி வெய்யில்' என்றும் குறிப்பிடுகிறார்கள். இதற்கு ஒரு புராண கதை சொல்லப்படுகிறது..யமுனை ஆற்றங்கரைக்கு அருகில், 'காண்டவ வனம்' என்னும் பெயரில் அபூர்வ மூலிகை மரங்களுடன்கூடிய ஒரு காடு இருந்தது. இந்த வனத்தை தேவேந்திரன் பாதுகாத்து அவ்வப்போது மரங்கள் செழித்து வளர மழை பொழியச் செய்து வளர்த்து வந்தான். இயற்கை எழில் கொஞ்சும் அந்த வனப்பகுதிக்கு அருகில் ஓடும் யமுனை நதியில் ஒரு நாள் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ச்சுனனும் மேலும் சில தோழர்களுடன் நீராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் நீராடி கரையேறும்போது ஒரு அந்தணர் அவர்களை நோக்கி வந்து கை கூப்பினார்.."உங்களைப் பார்த்தால் கருணை மிக்கவர்களாக தோன்றுகிறீர்கள். எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்த வனத்தில் என் பசியைத் தீர்க்கும் உணவு இருக்கிறது. என் பசி தீர உங்களால்தான் உதவ முடியும்" என்றார்..அவரைச் சற்று நேரம் உற்றுப் பார்த்த ஸ்ரீகிருஷ்ணர், "அக்னி தேவரே! ஏனிந்த வேஷம்? உங்கள் சுய ரூபத்திலேயே வந்திருக்கலாமே?" என்றதும், அக்னி தேவர் தனது சுய ரூபத்தில் ஸ்ரீகிருஷ்ணரைப் பணிந்து நின்றார்.."பரமாத்மாவே! தங்களுக்குத் தெரியாதது இவ்வுலகில் என்ன இருக்கிறது? சுவேதசி என்னும் மன்னனுக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகளாக யாகம் வளர்த்து நடத்தி வருகிறார். அந்த யாகத்தில் விடப்படும் அதிகப்படியான நெய்யை உண்டு நான் மந்தமாகிப்போனேன். இந்த வனத்தில் உள்ள மூலிகை மரங்களை என் சக்தியால் எரித்து உட்கொண்டால்தான் என் பிணி நீங்கும்" என்றார் அக்னி தேவர்.."இதற்கு எங்களை ஏன் கேட்க வேண்டும்? தாங்களே வனத்தில் பிரவேசித்து மரங்களை உட்கொள்ளலாமே?" என்றான் அர்ச்சுனன்.."நான் ஒவ்வொரு முறை வனத்தில் நுழையும்போதும் இந்த வனத்தைக் காக்கும் தேவேந்திரன் மழையைப் பொழிவித்து தீ நாக்குகள் எரிய விடாமல் அணைத்து விடுகிறான்" என்றான்.."சரி! இந்திரன் உங்களைத் தடுக்காதவாறு நாங்கள் உதவி புரிகிறோம். ஆனால், நாங்கள் இங்கே நீராடத்தான் வந்தோம். எங்களிடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை. தாங்கள் வில், அம்பறாத்துணி, அம்புகள் போன்றவற்றை அர்ச்சுனனுக்குத் தந்தால் மட்டுமே எங்களால் உங்களுக்கு உதவ முடியும். ஆனால் ஒன்று, தாங்கள் 21 நாட்கள் மட்டுமே இந்த வனத்தை எரித்து தங்கள் பிணியைத் தீர்த்துக் கொள்ளலாம்" என்றார்..அக்னி தேவரும் இதற்கு சம்மதித்து காண்டீப வில், அம்பறாத்துணி, அம்புகள் முதலியவற்றை அர்ச்சுனனுக்கு அளித்தார்..அக்னி தேவர் காண்டவ வனத்திற்குள் பிரவேசித்தவுடனேயே இந்திரன் மேகங்களைக் கூட்டி, மழை பொழிய வைத்தான். உடனே அர்ச்சுனன் அம்புகளால், 'சரக்கூடு' ஒன்றைக் கட்டி அந்த மழையைப் பொழிய விடாமல் தடுத்தான். அக்னியும் ஏழு நாட்கள் அந்த வனத்திலுள்ள மூலிகை மரங்களை கபளீகரம் செய்து, தன் பிணியைத் தீர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். பிறகு ஏழு நாட்கள் சுற்றிலுமுள்ள அரிய வகை மரங்களை உண்டார். பிறகு கடைசி ஏழு நாட்கள் மிதமாக உண்டு பிணி தீர்ந்து ஸ்ரீகிருஷ்ணருக்கும், அர்ச்சுனனுக்கும் நன்றி கூறி, நமஸ்கரித்து விடை பெற்றார்..அக்னி தேவர் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று சொல்லப்படுகிறது. சில சமயங்களில் அதைத் தாண்டியும் சில நாட்கள் அக்னியின் தாக்கம் பூமியில் இருப்பதால் அதை, 'பின் கத்திரி வெய்யில்' என்று கூறுகிறார்கள்..இந்தக் காலகட்டத்தில் வெய்யில் சுட்டெரிக்கும். மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுவார்கள். உடலில் நீர்ச்சத்து குறைவதால் சிலருக்கு மயக்கம் ஏற்படும். வறுத்தெடுக்கும் இந்த அக்னி நட்சத்திர நாட்களில் விவசாய வேலைகள் செய்யக் கூடாது என்று கூறப்படுகிறது. செடி, கொடி மரங்களை வெட்டக் கூடாது. விதை விதைக்கக் கூடாது. கிணறு, குளம் தோண்டக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது. மிகவும் தேவையாக இருந்தாலொழிய வெளியே காலை பத்து மணி முதல் மாலை நாலு மணி வரை செல்லக் கூடாது..இதன் தாக்கம் மக்களை பாதிக்காமல் இருக்க கோயில்களில் அம்மனுக்கு அபிஷேகம் செய்வித்து, பானகம், நீர் மோர் போன்றவற்றை நைவேத்தியம் செய்து விநியோகிப்பார்கள். மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ஆங்காங்கே நீர்ப்பந்தல்கள் அமைத்து சாலை வழி செல்லும் பயணிகளுக்கு நீரும், மோரும் விநியோகிக்கலாம். அனைவரும் நீர்ச்சத்து மிகுந்த உணவு வகைகளையே சாப்பிட்டு தங்கள் உடல் நலம் காத்துக்கொள்ள வேண்டும்..மக்கள் தங்கள் உடல் நலம் பாதிக்காமல் இருக்க, இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில்,.'அஸ்வத்தாய வித்மஹேபாச ஹஸ்தாய தீமஹிதந்நோ சூர்ய ப்ரசோதயாத்'.என்னும் சூர்ய காயத்ரி மந்திரத்தை ஜபித்து சூரிய பகவானை வழிபடலாம்.