– டாக்டர் கங்கா.பக்தவச்சலனான ஸ்ரீ மஹாவிஷ்ணு தன்னைப் பணிந்தவர்களை கால தாமதமின்றி காப்பதற்காக தூணிலும், துரும்பிலும் வியாபித்து இருக்கிறார் என்பதைத் தெளிவாகவும் உறுதியாகவும் நிலைநாட்ட வந்ததே நரசிம்ம அவதாரம். மனிதனா? சிங்கமா? என்று பிரித்தறிய முடியாமல் இரண்டும் கலந்த அற்புத வடிவமாகப் பிரகலாதனுக்காக பெரிய கர்ஜனையுடன் வெளிவந்தார் ஸ்ரீ நரசிம்மர்!.ஹிரண்ய கசிபுவிற்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய அதே தோற்றம் பிரகலாதனுக்கு மிக்க கருணை வடிவாகக் காட்சி அளித்தது. எந்த விழிகளின் தீட்சண்யம் அசுரனின் உணர்வுகளை அழித்ததோ, அதே விழிகள் சிறுவனுக்கும் குழுமியிருந்த மற்ற தேவர்களுக்கும் குறைவில்லா கருணை மழையைப் பொழிந்தது. நரசிம்ம ரூபத்தின் மடியும் தொடைகளும் அக்கிரமம் புரிந்த அரக்கனின் பலிபீடமாக மாறியது.அதே மடியும் தொடையும் அழகிய மகாலெட்சுமி அமரும் அலங்கார சிம்மாசனமாக மாறியது. தெய்வத்தின் கிருபை பிரபஞ்சம் முழுவதும் ஒவ்வொரு புள்ளியிலும் வியாபித்து இருக்கிறது என்பதைத் துல்லியமாக எடுத்துக்காட்ட நரசிம்மமாக வெளிவந்தார் புருஷோத்தமன்..தானே ஒரு தூணை நட்டு வைத்து, 'இந்தத் தூணில் இருக்கிறானா உன் நாராயணன்' என்று குரோதத்துடன் பெரிய குரலில் கேட்ட தந்தைக்கு அமைதியாாக, 'தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார்' என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் பதிலளித்தான் குழந்தை பிரஹலாதன். தன் வாக்கு பொய்த்தாலும் தன் பக்தனின் வாக்கு பொய்த்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர் அல்லவா பரந்தாமன்! இதனை சகாதேவனிடமும் பீஷ்மரிடமும் துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணனாக அவதரித்தபோது உறுதி செய்கிறார். இந்த நிலைப்பாடுதான் கிருத யுகத்திலும் எல்லா யுகங்களிலும் நாராயணனிடம் வெளிப்படுகிறது..சிங்கம் எப்படி பெரிய கர்ஜனையோடு பிடரி ரோமத்தை சிலிர்த்துக் கொண்டு வெளிவந்தது என்பதை சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் கோதை நாச்சியார் திருப்பாவையில் பாடுகிறார்..'மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்துவேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறிமூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்கோவில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடையசீரிய சிங்கானத்திலிருந்து யாம் வந்தகாரியம் ஆராய்ந்து அருளாலோர் எம்பாவாய்'.மழைக் காலத்தில் மலையின் குகையிலே பொருந்தி உறங்கும் பீடுடைய அரிமா, உறக்கம் நீங்கி உணர்வு பெற்று, மற்றை விலங்குகள் அஞ்சுமாறு தீப்பொறிகள் சிதற விழித்து பிடரி மயிர் சிலிர்க்கும்படி எல்லாத் திசைகளிலும் புடை பெயர்ந்து உடம்பை நீட்டிக் குறுக்கிச் சோம்பல் முறித்து முழங்கிப் பறப்பட்டு வருவது போல், காயாம்பூவின் நிறத்தையுடையவனே! நீ உன் கோயிலினின்றும் புறப்பட்டு இந்த மணிமண்டபத்திற்கு எழுந்தருளி, முறை வகுக்கப்பட்டுச் சீர்மைமிகு அரியணையில் வீற்றிருந்து நாங்கள் வந்த காரியத்தை உசாவி நிறைவேற்றி அருள வேண்டும்..ஆந்திர மாநிலத்தில் அஹோபிலம் என்ற ஒரு வைஷ்ணவ திவ்ய க்ஷேத்ரம் உண்டு. அஹோபிலம் என்ற சொல்லின் பொருளே பிரமிக்க வைக்கிறது. எந்த ஒரு வலிய ஆயுதமும் இல்லாமல் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல், தனது கூரிய நகங்களாலேயே ஹிரண்யகசிபுவை சம்ஹாரம் செய்த உக்ர நரசிம்மரின் பலத்தைக் கண்டு வியந்த தேவர்கள் "ஆஹா பலம்! ஆஹா என்ன பலம்" என்று ஆர்ப்பரித்ததால் அஹோ பலம் என்றானது! வடமொழியில் பிலம் என்றால் குகை. மலை மீது மாபெரும் குகையில், ஆண்டாள் கூறியதுபோல் மழைக்கு ஓதுங்கி படுத்து உறங்கும் சிங்கம் போல் வெளிப்பட்டதால் அஹோபிலம்! அங்குதான் அசுரனான ஹிரண்ய கசிபுவின் அரண்மனை இருந்ததாகவும் நரசிம்மர் அசுரனை வதம் செய்ததாகவும் தெரிகிறது. அங்கு நரசிம்மர் வெளிப்பட்ட மிகப்பெரிய தூண் ஒன்று உடைந்த நிலையில் உயரமாய் காட்சியளிக்கிறது..நாராயணனின் மற்ற அவதாரங்களிலிருந்து வேறுபட்டது நரசிம்ம அவதாரம். ஸ்ரீராமன், கிருஷ்ணன் போன்ற மற்ற அவதாரங்களைப் போல் அல்லாமல் குறுகிய காலமே பூமியில் இருந்த நரசிம்மர், பக்தர்கள் மனதில் இன்றுவரை நீக்கமற நின்றுவிட்டார். உலக மக்களுக்காகவும் தேவர்களின் அபயக் குரலுக்காகவும் தோன்றியவர்கள் மற்ற அவதார மூர்த்திகள். ஆனால், ஒரு குழந்தைக்காக ஒரு உண்மையான பக்தனுக்காக, அவனுடைய மன உறுதிக்கு தனிப்பெரும் பரிசாகத் தோன்றியவர் நரசிம்மர்..அரக்கனின் தண்டனைக்குப் பயந்து, 'ஹிரண்யாய நம': என்று சொல்கையில் பரம்பொருளான நாராயணனையே அல்லும் பகலும் மனதில் தியானித்துக் கொண்டிருந்த சிறு வயது பக்தனான பிரஹலாதன் தைரியமாக அரக்கன் முன்னால், 'நாராயணாய நம': என்று கூறினான். கடலில் வீசியபோதும், தீயினால் சுட்டபோதும், மலை மீது இருந்து .உருட்டிவிட்டபோதும், மனதை ஒருமுகப்படுத்தி நாராயண நாமத்தை இடைவிடாது ஓதி வந்தவன் பிற்காலத்தில் பக்தர்கள் வரிசையில் முதன்மையான இடத்தைப் பிடித்தார்..சக்கரவர்த்தி்த் திருமகனாகிய ஸ்ரீராமனையோ, ஆயர் குலப் பெண்கள் மயங்கிய செளந்தர்ய ரூபனான ஸ்ரீ கிருஷ்ணனையோ குறிப்பிடும்போது, 'அழகிய' என்ற சொல்லை யாரும் முன் இணைப்பதில்லை. ஆனால் மிருகமான கொடிய சிங்கமும், நரனும் கலந்த உருவத்தை. 'அழகியசிங்கர்' என்று குறிப்பிடுகிறோம். ஹிரண்யனை வதம் செய்த பிறகு ஸ்ரீமகாலெக்ஷ்மி தேவி வந்து இடது தொடையில் அமர, பிரஹலாதனும் மற்ற தேவர்களும் வணங்க சாந்தமாகி புன்னகை பூத்தார் பெருமாள். திருமகளுடன் இணைந்த பிறகு பேரழகுதானே!.சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஒரு தனிப்பட்ட விசேஷம். அழகிய வெளுத்த மீசையும் உருட்டுப் பார்வையும் கொண்ட வேங்கட கிருஷ்ணனுக்கும் ருக்மணி தாயாருக்குமான கொடிமரம் கோயிலின் பிரதான நுழைவாயிலில் இருக்கிறது. பிராகாரத்தை வலம் வரும்போது நரசிம்மர் சன்னிதி! அதே கருவறைக்கு முன்பும் ஒரு கொடிமரம். தனி உத்ஸவங்கள், தனியாக கும்பாபிஷேகம். பக்தர்கள் கூட்டமும் அதிகம்தான்! இங்கு மிவும் சாந்த ஸ்வரூபியாக அமர்ந்த கோலத்தில் யோக நரசிம்மராக வரப்பிரசாதியாய் அருள்பாலிக்கிறார் பெருமாள்..தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர் பாகவதா மேளா நரசிம்ம ஜயந்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பல ஊர்களிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் அன்பர்கள் இதில் கலந்து கொள்கின்றார்கள். மாலை ஆரம்பித்து, மறுநாள் காலை வரை மிகச் சிறந்த இறை அனுபவம். சிறிதே மாறுபட்ட பாணியில் கும்பகோணம் அருகில் உள்ள தேப்பெருமாநல்லூரில் பாகவதா மேளா நரசிம்ம ஜயந்தி அன்று வெகு விமரிசையாக நடைபெறுகிறது. பக்தர்கள் இரவு கண் விழித்து நரசிம்மரை தியானிக்க வேண்டும் என்பதற்காக நரசிம்ம சரிதம் நாட்டிய நாடகமாக நடக்கும்போது விதூஷிகளும் (கோமாளிகளும்) அவர்களின் நகைச்சுவைப் பேச்சும் கலகலப்பை ஏற்படுத்தும்..கும்பகோணத்திற்கு அருகில் ஆடுதுறை சமீபத்தில் நரசிங்கம்பேட்டையில் நரசிம்மருக்கு ஒரு ஆலயம் இருக்கிறது. ஆலயத்தின் அளவு சிறிதாயினும் கீர்த்தி மிகப்பெரிதாக உள்ளது. இங்கு வேண்டிக்கொண்டு சன்னிதியில் மட்டைத் தேங்காய் கட்டினால் படிப்பு, திருமணம், மக்கட்பேறு என்று வேண்டிக்கொண்டது நிச்சயம் நிறைவேறும் என்று பலரும் நம்புகின்றனர். வெளி மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து நேர்ந்து கொள்கின்றனர்..ஆந்திர மாநிலத்தில் ஒவ்வொரு மலை மீதும் ஒவ்வொரு சிற்றூரிலும் பலவித நரசிம்மர்கள் மக்களுக்கு அருளாசி வழங்கி வருகின்றனர். விசாகப்பட்டிணத்திற்கு அருகிலுள்ள சிம்மாசலம் மிகப்பெரிய நரசிம்ம க்ஷேத்ரம். அங்குள்ள கருவறையில் முழுவதும் சந்தனம் சாத்தப்பட்டு நடுவில் ஒரு பெரிய நாமம் மட்டும். இவர்தான் அங்கு வராக நரசிம்மர். தாயாராக சிம்ஹவல்லி. இங்கு விசேஷமாக நடைபெறும் ஒரு உத்ஸவத்தின்போது மட்டும் முதல்நாள் ஹிரண்யாக்ஷணை அழித்த மூர்த்தியாகவும் மறுநாள் ஹிரண்யகசிபுவை அழித்த நரசிம்ம மூர்த்தியாகவும் காட்சி அளிக்கிறார் பெருமாள். மற்ற நாட்களில் அவரின் உக்ரத்தைத் தணித்து குளிர்விக்கும் வழியாக கெட்டியான சந்தனக் காப்பு சார்த்தப்பட்டு மைல் கல் வடிவில் பிரகாசிக்கிறார் மகாவிஷ்ணு..ஒவ்வொரு வருடமும் அக்ஷய திருதியை அன்று பூசப்பட்ட சந்தனம் எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு நிஜரூபமாக சுமார் 12 மணி நேரம் காட்சியளித்து, பிறகு புது சந்தனம் சமர்ப்பிக்கப்படுகிறது. இது, 'சந்தனோத்ஸவம்' என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது.. இந்த சந்தனம் தமிழகத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்பதும் உத்ஸவங்கள் அனைத்தும் தமிழ்நாட்டுப் பாணியில் நடைபெறுகிறது என்பதும் கூடுதல் செய்தி..ஆந்திர மாநிலம், நெல்லூரில் ஒரு சிறு குன்றின் மேல் பெஞ்சாலக்கோன லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. இங்கு பெருமாள் ஸ்வயம்பு என்றும் நரசிம்ம வடிவத்தில் சில அரக்கர்களை வதைத்து, மிகுந்த சீற்றத்துடன் இருந்தாராம். அப்போது திருமகளானவள் ஒரு மலைவாழ் பெண்ணாக செஞ்சுலட்சுமி என்ற பெயருடன் அவதரித்து பெருமாளை தழுவிக் கொண்டாளாம். தெலுங்கில், 'பெனு வேசுகோனுடா' என்றால் ஆலிங்கனம் செய்தல் என்று பொருள். இந்த இடத்திற்கு முதலில் பெனுசிலா என்ற பெயர் ஏற்பட்டு, பின்னால் பெஞ்சலக்கோனா என்று மருவியதாம். உத்ஸவங்களில் அங்குள்ள மலைவாழ் மக்கள் அதிகமாகப் பங்கேற்கின்றனர்..வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசியில் (15.5.2022) நரசிம்ம ஜயந்தி கொண்டாடப்பட உள்ளது. நமக்கு அருகிலுள்ள நரசிம்ம பெருமாளை சென்று சேவிக்கலாம். கால்கள் கிடைத்த புண்ணியத்திற்காக கோயிலை வலம் வரலாம். கைகளால் இறைவனை வணங்கலாம். கோயிலைச் சுத்தம் செய்யலாம். பிரசாதம் செய்து, மலர் தொடுத்து பெருமாளுக்குச் சமர்ப்பிக்கலாம். எதுவும் முடியாதபோது ஆண்டாளின் அறிவுரைப்படி சிங்கப்பெருமாளை நினைத்து வாயால் பாடி, மனதினால் சிந்தித்து பக்தியுடன் சரணாகதி செய்தால் நரசிம்மரின் பரிபூரண அருளைப் பெறலாம்.
– டாக்டர் கங்கா.பக்தவச்சலனான ஸ்ரீ மஹாவிஷ்ணு தன்னைப் பணிந்தவர்களை கால தாமதமின்றி காப்பதற்காக தூணிலும், துரும்பிலும் வியாபித்து இருக்கிறார் என்பதைத் தெளிவாகவும் உறுதியாகவும் நிலைநாட்ட வந்ததே நரசிம்ம அவதாரம். மனிதனா? சிங்கமா? என்று பிரித்தறிய முடியாமல் இரண்டும் கலந்த அற்புத வடிவமாகப் பிரகலாதனுக்காக பெரிய கர்ஜனையுடன் வெளிவந்தார் ஸ்ரீ நரசிம்மர்!.ஹிரண்ய கசிபுவிற்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய அதே தோற்றம் பிரகலாதனுக்கு மிக்க கருணை வடிவாகக் காட்சி அளித்தது. எந்த விழிகளின் தீட்சண்யம் அசுரனின் உணர்வுகளை அழித்ததோ, அதே விழிகள் சிறுவனுக்கும் குழுமியிருந்த மற்ற தேவர்களுக்கும் குறைவில்லா கருணை மழையைப் பொழிந்தது. நரசிம்ம ரூபத்தின் மடியும் தொடைகளும் அக்கிரமம் புரிந்த அரக்கனின் பலிபீடமாக மாறியது.அதே மடியும் தொடையும் அழகிய மகாலெட்சுமி அமரும் அலங்கார சிம்மாசனமாக மாறியது. தெய்வத்தின் கிருபை பிரபஞ்சம் முழுவதும் ஒவ்வொரு புள்ளியிலும் வியாபித்து இருக்கிறது என்பதைத் துல்லியமாக எடுத்துக்காட்ட நரசிம்மமாக வெளிவந்தார் புருஷோத்தமன்..தானே ஒரு தூணை நட்டு வைத்து, 'இந்தத் தூணில் இருக்கிறானா உன் நாராயணன்' என்று குரோதத்துடன் பெரிய குரலில் கேட்ட தந்தைக்கு அமைதியாாக, 'தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார்' என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் பதிலளித்தான் குழந்தை பிரஹலாதன். தன் வாக்கு பொய்த்தாலும் தன் பக்தனின் வாக்கு பொய்த்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர் அல்லவா பரந்தாமன்! இதனை சகாதேவனிடமும் பீஷ்மரிடமும் துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணனாக அவதரித்தபோது உறுதி செய்கிறார். இந்த நிலைப்பாடுதான் கிருத யுகத்திலும் எல்லா யுகங்களிலும் நாராயணனிடம் வெளிப்படுகிறது..சிங்கம் எப்படி பெரிய கர்ஜனையோடு பிடரி ரோமத்தை சிலிர்த்துக் கொண்டு வெளிவந்தது என்பதை சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் கோதை நாச்சியார் திருப்பாவையில் பாடுகிறார்..'மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்துவேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறிமூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்கோவில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடையசீரிய சிங்கானத்திலிருந்து யாம் வந்தகாரியம் ஆராய்ந்து அருளாலோர் எம்பாவாய்'.மழைக் காலத்தில் மலையின் குகையிலே பொருந்தி உறங்கும் பீடுடைய அரிமா, உறக்கம் நீங்கி உணர்வு பெற்று, மற்றை விலங்குகள் அஞ்சுமாறு தீப்பொறிகள் சிதற விழித்து பிடரி மயிர் சிலிர்க்கும்படி எல்லாத் திசைகளிலும் புடை பெயர்ந்து உடம்பை நீட்டிக் குறுக்கிச் சோம்பல் முறித்து முழங்கிப் பறப்பட்டு வருவது போல், காயாம்பூவின் நிறத்தையுடையவனே! நீ உன் கோயிலினின்றும் புறப்பட்டு இந்த மணிமண்டபத்திற்கு எழுந்தருளி, முறை வகுக்கப்பட்டுச் சீர்மைமிகு அரியணையில் வீற்றிருந்து நாங்கள் வந்த காரியத்தை உசாவி நிறைவேற்றி அருள வேண்டும்..ஆந்திர மாநிலத்தில் அஹோபிலம் என்ற ஒரு வைஷ்ணவ திவ்ய க்ஷேத்ரம் உண்டு. அஹோபிலம் என்ற சொல்லின் பொருளே பிரமிக்க வைக்கிறது. எந்த ஒரு வலிய ஆயுதமும் இல்லாமல் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல், தனது கூரிய நகங்களாலேயே ஹிரண்யகசிபுவை சம்ஹாரம் செய்த உக்ர நரசிம்மரின் பலத்தைக் கண்டு வியந்த தேவர்கள் "ஆஹா பலம்! ஆஹா என்ன பலம்" என்று ஆர்ப்பரித்ததால் அஹோ பலம் என்றானது! வடமொழியில் பிலம் என்றால் குகை. மலை மீது மாபெரும் குகையில், ஆண்டாள் கூறியதுபோல் மழைக்கு ஓதுங்கி படுத்து உறங்கும் சிங்கம் போல் வெளிப்பட்டதால் அஹோபிலம்! அங்குதான் அசுரனான ஹிரண்ய கசிபுவின் அரண்மனை இருந்ததாகவும் நரசிம்மர் அசுரனை வதம் செய்ததாகவும் தெரிகிறது. அங்கு நரசிம்மர் வெளிப்பட்ட மிகப்பெரிய தூண் ஒன்று உடைந்த நிலையில் உயரமாய் காட்சியளிக்கிறது..நாராயணனின் மற்ற அவதாரங்களிலிருந்து வேறுபட்டது நரசிம்ம அவதாரம். ஸ்ரீராமன், கிருஷ்ணன் போன்ற மற்ற அவதாரங்களைப் போல் அல்லாமல் குறுகிய காலமே பூமியில் இருந்த நரசிம்மர், பக்தர்கள் மனதில் இன்றுவரை நீக்கமற நின்றுவிட்டார். உலக மக்களுக்காகவும் தேவர்களின் அபயக் குரலுக்காகவும் தோன்றியவர்கள் மற்ற அவதார மூர்த்திகள். ஆனால், ஒரு குழந்தைக்காக ஒரு உண்மையான பக்தனுக்காக, அவனுடைய மன உறுதிக்கு தனிப்பெரும் பரிசாகத் தோன்றியவர் நரசிம்மர்..அரக்கனின் தண்டனைக்குப் பயந்து, 'ஹிரண்யாய நம': என்று சொல்கையில் பரம்பொருளான நாராயணனையே அல்லும் பகலும் மனதில் தியானித்துக் கொண்டிருந்த சிறு வயது பக்தனான பிரஹலாதன் தைரியமாக அரக்கன் முன்னால், 'நாராயணாய நம': என்று கூறினான். கடலில் வீசியபோதும், தீயினால் சுட்டபோதும், மலை மீது இருந்து .உருட்டிவிட்டபோதும், மனதை ஒருமுகப்படுத்தி நாராயண நாமத்தை இடைவிடாது ஓதி வந்தவன் பிற்காலத்தில் பக்தர்கள் வரிசையில் முதன்மையான இடத்தைப் பிடித்தார்..சக்கரவர்த்தி்த் திருமகனாகிய ஸ்ரீராமனையோ, ஆயர் குலப் பெண்கள் மயங்கிய செளந்தர்ய ரூபனான ஸ்ரீ கிருஷ்ணனையோ குறிப்பிடும்போது, 'அழகிய' என்ற சொல்லை யாரும் முன் இணைப்பதில்லை. ஆனால் மிருகமான கொடிய சிங்கமும், நரனும் கலந்த உருவத்தை. 'அழகியசிங்கர்' என்று குறிப்பிடுகிறோம். ஹிரண்யனை வதம் செய்த பிறகு ஸ்ரீமகாலெக்ஷ்மி தேவி வந்து இடது தொடையில் அமர, பிரஹலாதனும் மற்ற தேவர்களும் வணங்க சாந்தமாகி புன்னகை பூத்தார் பெருமாள். திருமகளுடன் இணைந்த பிறகு பேரழகுதானே!.சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஒரு தனிப்பட்ட விசேஷம். அழகிய வெளுத்த மீசையும் உருட்டுப் பார்வையும் கொண்ட வேங்கட கிருஷ்ணனுக்கும் ருக்மணி தாயாருக்குமான கொடிமரம் கோயிலின் பிரதான நுழைவாயிலில் இருக்கிறது. பிராகாரத்தை வலம் வரும்போது நரசிம்மர் சன்னிதி! அதே கருவறைக்கு முன்பும் ஒரு கொடிமரம். தனி உத்ஸவங்கள், தனியாக கும்பாபிஷேகம். பக்தர்கள் கூட்டமும் அதிகம்தான்! இங்கு மிவும் சாந்த ஸ்வரூபியாக அமர்ந்த கோலத்தில் யோக நரசிம்மராக வரப்பிரசாதியாய் அருள்பாலிக்கிறார் பெருமாள்..தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர் பாகவதா மேளா நரசிம்ம ஜயந்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பல ஊர்களிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் அன்பர்கள் இதில் கலந்து கொள்கின்றார்கள். மாலை ஆரம்பித்து, மறுநாள் காலை வரை மிகச் சிறந்த இறை அனுபவம். சிறிதே மாறுபட்ட பாணியில் கும்பகோணம் அருகில் உள்ள தேப்பெருமாநல்லூரில் பாகவதா மேளா நரசிம்ம ஜயந்தி அன்று வெகு விமரிசையாக நடைபெறுகிறது. பக்தர்கள் இரவு கண் விழித்து நரசிம்மரை தியானிக்க வேண்டும் என்பதற்காக நரசிம்ம சரிதம் நாட்டிய நாடகமாக நடக்கும்போது விதூஷிகளும் (கோமாளிகளும்) அவர்களின் நகைச்சுவைப் பேச்சும் கலகலப்பை ஏற்படுத்தும்..கும்பகோணத்திற்கு அருகில் ஆடுதுறை சமீபத்தில் நரசிங்கம்பேட்டையில் நரசிம்மருக்கு ஒரு ஆலயம் இருக்கிறது. ஆலயத்தின் அளவு சிறிதாயினும் கீர்த்தி மிகப்பெரிதாக உள்ளது. இங்கு வேண்டிக்கொண்டு சன்னிதியில் மட்டைத் தேங்காய் கட்டினால் படிப்பு, திருமணம், மக்கட்பேறு என்று வேண்டிக்கொண்டது நிச்சயம் நிறைவேறும் என்று பலரும் நம்புகின்றனர். வெளி மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து நேர்ந்து கொள்கின்றனர்..ஆந்திர மாநிலத்தில் ஒவ்வொரு மலை மீதும் ஒவ்வொரு சிற்றூரிலும் பலவித நரசிம்மர்கள் மக்களுக்கு அருளாசி வழங்கி வருகின்றனர். விசாகப்பட்டிணத்திற்கு அருகிலுள்ள சிம்மாசலம் மிகப்பெரிய நரசிம்ம க்ஷேத்ரம். அங்குள்ள கருவறையில் முழுவதும் சந்தனம் சாத்தப்பட்டு நடுவில் ஒரு பெரிய நாமம் மட்டும். இவர்தான் அங்கு வராக நரசிம்மர். தாயாராக சிம்ஹவல்லி. இங்கு விசேஷமாக நடைபெறும் ஒரு உத்ஸவத்தின்போது மட்டும் முதல்நாள் ஹிரண்யாக்ஷணை அழித்த மூர்த்தியாகவும் மறுநாள் ஹிரண்யகசிபுவை அழித்த நரசிம்ம மூர்த்தியாகவும் காட்சி அளிக்கிறார் பெருமாள். மற்ற நாட்களில் அவரின் உக்ரத்தைத் தணித்து குளிர்விக்கும் வழியாக கெட்டியான சந்தனக் காப்பு சார்த்தப்பட்டு மைல் கல் வடிவில் பிரகாசிக்கிறார் மகாவிஷ்ணு..ஒவ்வொரு வருடமும் அக்ஷய திருதியை அன்று பூசப்பட்ட சந்தனம் எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு நிஜரூபமாக சுமார் 12 மணி நேரம் காட்சியளித்து, பிறகு புது சந்தனம் சமர்ப்பிக்கப்படுகிறது. இது, 'சந்தனோத்ஸவம்' என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது.. இந்த சந்தனம் தமிழகத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்பதும் உத்ஸவங்கள் அனைத்தும் தமிழ்நாட்டுப் பாணியில் நடைபெறுகிறது என்பதும் கூடுதல் செய்தி..ஆந்திர மாநிலம், நெல்லூரில் ஒரு சிறு குன்றின் மேல் பெஞ்சாலக்கோன லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. இங்கு பெருமாள் ஸ்வயம்பு என்றும் நரசிம்ம வடிவத்தில் சில அரக்கர்களை வதைத்து, மிகுந்த சீற்றத்துடன் இருந்தாராம். அப்போது திருமகளானவள் ஒரு மலைவாழ் பெண்ணாக செஞ்சுலட்சுமி என்ற பெயருடன் அவதரித்து பெருமாளை தழுவிக் கொண்டாளாம். தெலுங்கில், 'பெனு வேசுகோனுடா' என்றால் ஆலிங்கனம் செய்தல் என்று பொருள். இந்த இடத்திற்கு முதலில் பெனுசிலா என்ற பெயர் ஏற்பட்டு, பின்னால் பெஞ்சலக்கோனா என்று மருவியதாம். உத்ஸவங்களில் அங்குள்ள மலைவாழ் மக்கள் அதிகமாகப் பங்கேற்கின்றனர்..வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசியில் (15.5.2022) நரசிம்ம ஜயந்தி கொண்டாடப்பட உள்ளது. நமக்கு அருகிலுள்ள நரசிம்ம பெருமாளை சென்று சேவிக்கலாம். கால்கள் கிடைத்த புண்ணியத்திற்காக கோயிலை வலம் வரலாம். கைகளால் இறைவனை வணங்கலாம். கோயிலைச் சுத்தம் செய்யலாம். பிரசாதம் செய்து, மலர் தொடுத்து பெருமாளுக்குச் சமர்ப்பிக்கலாம். எதுவும் முடியாதபோது ஆண்டாளின் அறிவுரைப்படி சிங்கப்பெருமாளை நினைத்து வாயால் பாடி, மனதினால் சிந்தித்து பக்தியுடன் சரணாகதி செய்தால் நரசிம்மரின் பரிபூரண அருளைப் பெறலாம்.