– கே.சூரியோதயன்.ஜேஷ்ட மாதம் வளர்பிறை ஏகாதசி தினமே, 'நிர்ஜல ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. இதை, 'பாண்டவ ஏகாதசி' என்றும் அழைப்பர். இந்த நாளில் (10.6.2022) விரதமிருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் புண்ணிய நதிகளில் நீராடிய பலனைப் பெறலாம். தவிர, குடும்பத்தில் தனம், தானியம், ஐஸ்வரியம் பெருகும். நிர்ஜல ஏகாதசி விரதம் குறித்து, 'பிரம்ம வைவர்த்த புராணம்' கீழ்கண்டபடி விவரித்துள்ளது..ஒருசமயம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமன், வியாச பகவானிடம் ''ரிஷிகளில் சிறந்த எமது பாட்டனாரே, வெகு நாட்களாக எனது மனதில் இருக்கும் ஒரு ஐயத்தைத் தீர்த்து வைக்க வேண்டுகிறேன். எங்களது தாய் குந்தி தேவி, எனது உடன்பிறப்புகளான யுதிஷ்டிரர், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் மற்றும் பாஞ்சாலி என அனைவரும் ஒவ்வொரு ஏகாதசி தினத்தன்றும் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுகின்றனர். மேலும், இந்த விரதம் இருந்தால்தான் மோட்ச கதி கிடைக்கும் என்றும் கூறுகின்றனர். அதனால் என்னையும் இந்த விரதத்தை மேற்கொள்ளும்படி வற்புறுத்துகின்றனர். நான் பகவானை மனதார பூஜிப்பேன். ஆனால், என்னால் ஒருவேளை கூட உணவு உண்ணாமல் இருக்க முடியாது. ஆகவே, ஏகாதசி விரதம் கடைபிடிக்காமல் நான் முக்தி பெற நீங்கள்தான் எனக்கு ஒரு யுக்தியைக் கூற வேண்டும்" எனக் கேட்டான்..அதற்கு வியாச மகரிஷி, ''பீமா, நீ நரகத்திற்குச் செல்லாமல், சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு மாதமும் வரும் இரண்டு ஏகாதசி விரதத்தையும் கண்டிப்பாகக் கடைபிடித்தே ஆக வேண்டும். வேறு வழியே இல்லை'' எனக் கூறினார்..அதைக் கேட்ட பீமன், ''தயவு செய்து எனது நிலையைப் புரிந்து கொள்ளுங்கள். என்னால் ஒரு வேளையே சாப்பிடாமல் இருக்க முடியாது. நான் எப்படி வருடம் முழுவதும் 24 ஏகாதசி விரத நாட்களில் மூன்று வேளையும் உண்ணாமல் இருக்க முடியும்? எனது வயிற்றில் அக்னி உள்ளது. நான் நாள் முழுவதும் உண்டால் மட்டுமே, எனது வயிற்றில் உள்ள அந்த அக்னி அடங்கும். ஆகவே, ஒரே ஒரு நாள் ஏகாதசி விரதம் மேற்கொண்டால் அனைத்து ஏகாதசி விரதத்தையும் கடைபிடித்த பலனைப் பெறும்படியான ஒரு வழி இருந்தால் கூறுங்கள்'' எனக் கேட்டான்..பீமனின் நிலையை உணர்ந்த வியாசர், ''பீமா, நான் உங்கள் அனைவருக்கும் வேத சாஸ்திர நெறிமுறைகளையும், பூஜா விதிகளையும் அனைத்துப் புராண விளக்கங்களையும் கூறியுள்ளேன். இருப்பினும் அடுத்து வரக்கூடிய கலியுகத்தில், இதனை அனைவரும் முறையாகக் கடைப்பிடித்து நரகத்தைத் தவிர்த்து, சொர்க்கத்திற்குச் செல்லும் எளிய உபாயமாகத்தான் பிரதி சுக்ல பட்ச ஏகாதசி மற்றும் கிருஷ்ண பட்ச ஏகாதசி விரதம் மானுடர்களுக்கு வரப்பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது. நீ அதிலும் விலக்குக் கேட்டு ஒரேயொரு ஏகாதசியை சொல்லச் சொல்கிறாய். சரி, உன்னைப் போன்று அனைத்து ஏகாதசி விரதத்தையும் அனுசரிக்க இயலாதவர்கள், சூரியன் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்குப் பயணிக்கக்கூடிய ஜேஷ்ட மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசியன்று உண்ணாமல் மட்டுமல்ல; ஒரு துளி நீர் கூட அருந்தாமல் இருந்து அந்த விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும்'' என்றார். அப்படி இந்த நாள் விரதத்தை கடைபிடித்தால் வருடத்தின் அனைத்து ஏகாதசி விரதத்தையும் கடைபிடித்த பலனைப் பெறலாம்" எனக் கூறி அருளினார். 'நீர் கூட அருந்தாமல்' என்று பொருள்படுவதால் இது, 'நிர்-ஜல ஏகாதசி' என்று ஆனதாக பெரியோர்கள் சொல்கின்றனர்..மேலும் அவர் கூறுகையில், ''துவாதசி அன்று காலை நீராடி, பகவான் மகாவிஷ்ணுவை பிரார்த்தனை செய்து, ஏழை எளியோருக்கு வஸ்திர தானம், குடை, செடுப்பு, கைத்தடி, பொருள் போன்றவற்றை தானமாகத் தர வேண்டும். பின்னர், அவர்களுக்கு உணவும் நீரும் தந்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்'' எனவும் சொல்லி அருளினார்..நிர்ஜல ஏகாதசி விரதத்தைக் கடைபிடிப்பதனால் முன் ஜன்ம பாபங்கள் விலகுவதோடு, இந்த ஜன்ம பாபங்களும் தீரும். மேலும், இந்த விரதப் பலனாக அனைத்துச் செல்வங்களும் கைகூடும். பூமியில் வாழ்நாளுக்குப் பிறகு அவர்களை அழைத்துச் செல்ல யம தூதர்கள் வர மாட்டார்கள். மாறாக, மகாவிஷ்ணுவின் தூதர்களே அவர்களை அழைத்துச் சென்று, பகவானின் திருப்பாதத்தில் சேர்ப்பார்கள்..இந்த விரத தினம் முழுவதும் உண்ணாமல் நோன்பு இருக்கலாம். அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது இரு வேளையோ உண்ணாமல் விரதம் அனுஷ்டிக்கலாம். முடிந்தவர்கள் நாள் முழுவதும் பகவானின் திருநாமங்களை ஜபித்துக் கொண்டிருப்பது மிகவும் சிறப்பு. விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும் விரதப் பலனையும் பிறருக்கு எடுத்துச் சொல்வதன் மூலம், 'கோ' தானம் செய்த புண்ணியத்தைப் பெறலாம் என்கிறது புராணம்!.நிர்ஜல ஏகாதசி புண்ணிய நாளில் தூய பக்தியுடன் விரதம் அனுஷ்டித்து, மகாவிஷ்ணுவின் பரமபதத்தை எய்துவோம்.
– கே.சூரியோதயன்.ஜேஷ்ட மாதம் வளர்பிறை ஏகாதசி தினமே, 'நிர்ஜல ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. இதை, 'பாண்டவ ஏகாதசி' என்றும் அழைப்பர். இந்த நாளில் (10.6.2022) விரதமிருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் புண்ணிய நதிகளில் நீராடிய பலனைப் பெறலாம். தவிர, குடும்பத்தில் தனம், தானியம், ஐஸ்வரியம் பெருகும். நிர்ஜல ஏகாதசி விரதம் குறித்து, 'பிரம்ம வைவர்த்த புராணம்' கீழ்கண்டபடி விவரித்துள்ளது..ஒருசமயம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமன், வியாச பகவானிடம் ''ரிஷிகளில் சிறந்த எமது பாட்டனாரே, வெகு நாட்களாக எனது மனதில் இருக்கும் ஒரு ஐயத்தைத் தீர்த்து வைக்க வேண்டுகிறேன். எங்களது தாய் குந்தி தேவி, எனது உடன்பிறப்புகளான யுதிஷ்டிரர், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் மற்றும் பாஞ்சாலி என அனைவரும் ஒவ்வொரு ஏகாதசி தினத்தன்றும் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுகின்றனர். மேலும், இந்த விரதம் இருந்தால்தான் மோட்ச கதி கிடைக்கும் என்றும் கூறுகின்றனர். அதனால் என்னையும் இந்த விரதத்தை மேற்கொள்ளும்படி வற்புறுத்துகின்றனர். நான் பகவானை மனதார பூஜிப்பேன். ஆனால், என்னால் ஒருவேளை கூட உணவு உண்ணாமல் இருக்க முடியாது. ஆகவே, ஏகாதசி விரதம் கடைபிடிக்காமல் நான் முக்தி பெற நீங்கள்தான் எனக்கு ஒரு யுக்தியைக் கூற வேண்டும்" எனக் கேட்டான்..அதற்கு வியாச மகரிஷி, ''பீமா, நீ நரகத்திற்குச் செல்லாமல், சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு மாதமும் வரும் இரண்டு ஏகாதசி விரதத்தையும் கண்டிப்பாகக் கடைபிடித்தே ஆக வேண்டும். வேறு வழியே இல்லை'' எனக் கூறினார்..அதைக் கேட்ட பீமன், ''தயவு செய்து எனது நிலையைப் புரிந்து கொள்ளுங்கள். என்னால் ஒரு வேளையே சாப்பிடாமல் இருக்க முடியாது. நான் எப்படி வருடம் முழுவதும் 24 ஏகாதசி விரத நாட்களில் மூன்று வேளையும் உண்ணாமல் இருக்க முடியும்? எனது வயிற்றில் அக்னி உள்ளது. நான் நாள் முழுவதும் உண்டால் மட்டுமே, எனது வயிற்றில் உள்ள அந்த அக்னி அடங்கும். ஆகவே, ஒரே ஒரு நாள் ஏகாதசி விரதம் மேற்கொண்டால் அனைத்து ஏகாதசி விரதத்தையும் கடைபிடித்த பலனைப் பெறும்படியான ஒரு வழி இருந்தால் கூறுங்கள்'' எனக் கேட்டான்..பீமனின் நிலையை உணர்ந்த வியாசர், ''பீமா, நான் உங்கள் அனைவருக்கும் வேத சாஸ்திர நெறிமுறைகளையும், பூஜா விதிகளையும் அனைத்துப் புராண விளக்கங்களையும் கூறியுள்ளேன். இருப்பினும் அடுத்து வரக்கூடிய கலியுகத்தில், இதனை அனைவரும் முறையாகக் கடைப்பிடித்து நரகத்தைத் தவிர்த்து, சொர்க்கத்திற்குச் செல்லும் எளிய உபாயமாகத்தான் பிரதி சுக்ல பட்ச ஏகாதசி மற்றும் கிருஷ்ண பட்ச ஏகாதசி விரதம் மானுடர்களுக்கு வரப்பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது. நீ அதிலும் விலக்குக் கேட்டு ஒரேயொரு ஏகாதசியை சொல்லச் சொல்கிறாய். சரி, உன்னைப் போன்று அனைத்து ஏகாதசி விரதத்தையும் அனுசரிக்க இயலாதவர்கள், சூரியன் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்குப் பயணிக்கக்கூடிய ஜேஷ்ட மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசியன்று உண்ணாமல் மட்டுமல்ல; ஒரு துளி நீர் கூட அருந்தாமல் இருந்து அந்த விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும்'' என்றார். அப்படி இந்த நாள் விரதத்தை கடைபிடித்தால் வருடத்தின் அனைத்து ஏகாதசி விரதத்தையும் கடைபிடித்த பலனைப் பெறலாம்" எனக் கூறி அருளினார். 'நீர் கூட அருந்தாமல்' என்று பொருள்படுவதால் இது, 'நிர்-ஜல ஏகாதசி' என்று ஆனதாக பெரியோர்கள் சொல்கின்றனர்..மேலும் அவர் கூறுகையில், ''துவாதசி அன்று காலை நீராடி, பகவான் மகாவிஷ்ணுவை பிரார்த்தனை செய்து, ஏழை எளியோருக்கு வஸ்திர தானம், குடை, செடுப்பு, கைத்தடி, பொருள் போன்றவற்றை தானமாகத் தர வேண்டும். பின்னர், அவர்களுக்கு உணவும் நீரும் தந்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்'' எனவும் சொல்லி அருளினார்..நிர்ஜல ஏகாதசி விரதத்தைக் கடைபிடிப்பதனால் முன் ஜன்ம பாபங்கள் விலகுவதோடு, இந்த ஜன்ம பாபங்களும் தீரும். மேலும், இந்த விரதப் பலனாக அனைத்துச் செல்வங்களும் கைகூடும். பூமியில் வாழ்நாளுக்குப் பிறகு அவர்களை அழைத்துச் செல்ல யம தூதர்கள் வர மாட்டார்கள். மாறாக, மகாவிஷ்ணுவின் தூதர்களே அவர்களை அழைத்துச் சென்று, பகவானின் திருப்பாதத்தில் சேர்ப்பார்கள்..இந்த விரத தினம் முழுவதும் உண்ணாமல் நோன்பு இருக்கலாம். அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது இரு வேளையோ உண்ணாமல் விரதம் அனுஷ்டிக்கலாம். முடிந்தவர்கள் நாள் முழுவதும் பகவானின் திருநாமங்களை ஜபித்துக் கொண்டிருப்பது மிகவும் சிறப்பு. விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும் விரதப் பலனையும் பிறருக்கு எடுத்துச் சொல்வதன் மூலம், 'கோ' தானம் செய்த புண்ணியத்தைப் பெறலாம் என்கிறது புராணம்!.நிர்ஜல ஏகாதசி புண்ணிய நாளில் தூய பக்தியுடன் விரதம் அனுஷ்டித்து, மகாவிஷ்ணுவின் பரமபதத்தை எய்துவோம்.