– கோ.காந்திமதி.ஒவ்வொரு தமிழ் வருடமும் ஆடி மாதம் சுக்லபட்சம் திரிதியை தினத்தன்று ஸ்வர்ணகௌரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. ஜாதகத்தில் சுக்ர பகவானின் பலம் குன்றி இருந்தாலோ அல்லது சுக்ரன் பாவ கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலோ இல்வாழ்க்கையில் மன வேற்றுமை, தம்பதியிடையே ஒற்றுமையின்மை போன்று பலவித பிரச்னைகள் தோன்றும். அத்தகையோர் இந்த விரதத்தைக் கடைபிடித்தால் அன்னை கெளரி தேவியின் அருளால் இல்வாழ்க்கை நலமுடன் அமையும். (31.7.2022 அன்று இந்த விரத தினமாகும்.).பொதுவாக, இந்த விரதம் ஆந்திரம், கர்நாடகம் மற்றும் பல்வேறு வட மாநிலங்களில் அதிகமாகக் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது தமிழகத்திலும் வட மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தவர் கூடிக்கலந்து வாழ்வதால் இந்த விரதம் நம் ஊரிலும் பலராலும் மேற்கொள்ளப்படுகிறது. ஆதி தெய்வமான கெளரி தேவியை வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதற்குச் சமமாகும் என்று புராணங்கள் சொல்கின்றன..ஒரு யுகத்தில் உலகம் பிரளயத்தில் மூழ்கியபோது, அதிலிருந்து தோன்றிய ஸ்வர்ண லிங்கத்தை தேவர்கள் பூஜித்தபோது, பொன் போன்ற பிரகாசத்துடன் சிவபெருமானும் பார்வதி தேவியும் தோன்றினர். ஸ்வர்ண மயமாகத் தோன்றிய அம்மையப்பனை தேவர்கள் போற்றி வழிபட, உலக சிருஷ்டி மீண்டும் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்த விரதம் குறித்து முருகப்பெருமான் ஈசனிடம் கேட்டபோது, இந்த விரத மகிமை குறித்து அவரே தமது திருவாக்கால் உணர்த்தினார்..ஒரு காலத்தில் சரஸ்வதி ஆற்றின் கரையில் அமைந்த விமலம் என்ற நகரத்தை சந்திரபிரபன் என்பவன் ஆண்டு வந்தான். அவனுக்கு இரு மனைவியர். அவர்களில் அவன் முதல் மனைவியிடம் மட்டும் அதிக அன்பு செலுத்தினான். ஒருநாள் அவன் வேட்டையாட காட்டுக்குச் சென்றபோது, அங்கே சில தேவகன்னியர் ஏதோ ஒரு பூஜை செய்துகொண்டிருப்பதைப் பார்த்தான். அவர்களிடம் சென்று அந்த பூஜையைக் குறித்து கேட்டான். அதற்கு அவர்கள் தாங்கள் ஸ்வர்ண கௌரி விரதம் அனுஷ்டிப்பதாகக் கூறி, அந்த விரதத்தின் சிறப்புகளையும், அதனால் ஏற்படும் நன்மைகளையும் கூறினர். அதைக் கேட்ட அரசன் தானும் அதில் கலந்துகொண்டான். பூஜையின் முடிவில் பதினாறு முடிச்சுகள் கொண்ட நோன்பு கயிறைத் தனது கையில் கட்டிக்கொண்டு அரண்மனைக்குத் திரும்பினான். அவன் தனது இரு மனைவியரையும் அழைத்து, அந்த நோன்புச் சரட்டினை அவர்களிடம் காட்டி, அதனைப் பற்றிக் கூறினான்..அனைத்தையும் கேட்ட முதல் மனைவி, அந்தக் கயிற்றை அறுத்து பட்டுப்போன ஒரு மரத்தின் மீது வீசினாள். மரத்தின் மீது அந்தக் கயிறு பட்டவுடன் அந்த மரம் துளிர்க்க ஆரம்பித்தது. இதைப் பார்த்ததும் அரசரின் இரண்டாம் மனைவி அந்த நோன்பு சரடினை எடுத்துத் தனது கையில் கட்டிக்கொண்டாள். அதைக் கையில் கட்டியவுடனே, அதுவரை அவளிடம் வெறுப்பைக் காட்டிய அரசன் அவள் மேல் அன்பு செலுத்தத் தொடங்கினான். அதேசமயம் நோன்புக் கயிறை அறுத்து எறிந்த முதல் மனைவியை வெறுக்கவும் தொடங்கினான். இதனால் மனம் நொந்த அவனது முதல் மனைவி அரண்மனையிலிருந்து வெளியேறி காட்டிற்குச் சென்றாள். தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி, கெளரி தேவியை பிரார்த்தித்து அங்கிருந்த முனிவர்களின் ஆசிரமத்தை வலம் வந்தாள். ஆனால் அங்கிருந்த துறவிகள், கெளரி தேவியை நிந்தித்ததால் பிராயச்சித்தமே அதற்குக் கிடையாது என்று கூறி அவளை விரட்டினர். அதன் பின்னர் கெளரி தேவியை அவள் மனமார பிரார்த்தித்து கடும் தவம் இருந்தாள். அவளது தவத்துக்கு இரங்கிய அம்பிகை, அவளுடைய தவறை மன்னித்து, சகல நன்மைகளும் அவளுக்குக் கிடைக்க அருள்புரிந்தாள். அம்பிகையின் அருள் பெற்று தனது நாட்டுக்குத் திரும்பியவள், தன் கணவனின் அன்பையும் சகல நன்மைகளையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்ததாக இந்தக் கதை முடியும்..இனி, இந்த விரதத்தைக் கடைபிடிக்கும் முறையைக் குறித்துக் காண்போம். விரத தினத்துக்கு முன் தினம் பூஜை அறையை சுத்தம் செய்து, அம்பிகையின் திருமுகத்தை ஒரு கலசத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும். முடிந்த அளவு தம்மிடம் உள்ள தங்க நகைகளால் அம்பிகையை அங்கரிப்பது விசேஷம். (இதனால் தங்கம் வாங்கும் சக்தி கூடும் என்பது நம்பிக்கை) அம்பிகையின் பிரதிமை இல்லாதவர்கள் சிவசக்தியின் படத்தை வைத்தும் பூஜையை செய்யலாம். விரத தினத்தின் காலை முதல் மாலை வரை நோன்பிருந்து சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் கெளரி தேவியை பூஜிப்பது சிறப்பு. அம்பிகையின் வலப்புறம் நெய் தீபமும், இடப்புறம் நல்லெண்ணெய் தீபமும் ஏற்ற வேண்டும். அம்பிகை கிழக்கு நோக்கி இருக்க, வடக்கு பார்த்து அமர்ந்து பூஜிப்பது சிறப்பு. முதலில் கணபதியை வழிபட்ட பிறகு அம்பிகைக்கு ஷோடசோபசார பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு அம்பிகையை மலர்களால் அர்ச்சித்து, தேவியின் அஷ்டோத்ர நாமாவளியைக் கூறி வணங்க வேண்டும். பூஜையில், கலந்து கொள்வோரின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பதினாறு முடிச்சிட்ட நோன்பு சரடு, நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை படையலில் வைத்து, பூஜையின் முடிவில் நோன்பு சரடை கையில் கட்டிக்கொள்ள வேண்டும்..பூஜைக்குப் பிறகு சுமங்கலிப் பெண்களுக்கு உணவளித்து, மஞ்சள், குங்குமம், தாம்பூலம் அளிப்பது விசேஷம். பின்னர் அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று உமையவளோடு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை தரிசிக்கலாம். அன்று இரவு பிரசாதம் மட்டுமே உணவாக எடுத்துக்கொள்வது நன்று. மறுநாள், கெளரி தேவிக்கு சிறிய அளவில் புனர் பூஜை செய்ய வேண்டும். அதாவது, தூப தீபம் காட்டி, இயன்ற நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டி, பூக்கள் சமர்ப்பித்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இந்த விரதத்தைக் கடைபிடிப்பதால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். பொருளாதாரம் மேம்படும். மேலும், சகல சௌபாக்கியங்களும் பெற்று அனைத்து இன்பங்களையும் அடையலாம்.
– கோ.காந்திமதி.ஒவ்வொரு தமிழ் வருடமும் ஆடி மாதம் சுக்லபட்சம் திரிதியை தினத்தன்று ஸ்வர்ணகௌரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. ஜாதகத்தில் சுக்ர பகவானின் பலம் குன்றி இருந்தாலோ அல்லது சுக்ரன் பாவ கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலோ இல்வாழ்க்கையில் மன வேற்றுமை, தம்பதியிடையே ஒற்றுமையின்மை போன்று பலவித பிரச்னைகள் தோன்றும். அத்தகையோர் இந்த விரதத்தைக் கடைபிடித்தால் அன்னை கெளரி தேவியின் அருளால் இல்வாழ்க்கை நலமுடன் அமையும். (31.7.2022 அன்று இந்த விரத தினமாகும்.).பொதுவாக, இந்த விரதம் ஆந்திரம், கர்நாடகம் மற்றும் பல்வேறு வட மாநிலங்களில் அதிகமாகக் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது தமிழகத்திலும் வட மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தவர் கூடிக்கலந்து வாழ்வதால் இந்த விரதம் நம் ஊரிலும் பலராலும் மேற்கொள்ளப்படுகிறது. ஆதி தெய்வமான கெளரி தேவியை வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதற்குச் சமமாகும் என்று புராணங்கள் சொல்கின்றன..ஒரு யுகத்தில் உலகம் பிரளயத்தில் மூழ்கியபோது, அதிலிருந்து தோன்றிய ஸ்வர்ண லிங்கத்தை தேவர்கள் பூஜித்தபோது, பொன் போன்ற பிரகாசத்துடன் சிவபெருமானும் பார்வதி தேவியும் தோன்றினர். ஸ்வர்ண மயமாகத் தோன்றிய அம்மையப்பனை தேவர்கள் போற்றி வழிபட, உலக சிருஷ்டி மீண்டும் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்த விரதம் குறித்து முருகப்பெருமான் ஈசனிடம் கேட்டபோது, இந்த விரத மகிமை குறித்து அவரே தமது திருவாக்கால் உணர்த்தினார்..ஒரு காலத்தில் சரஸ்வதி ஆற்றின் கரையில் அமைந்த விமலம் என்ற நகரத்தை சந்திரபிரபன் என்பவன் ஆண்டு வந்தான். அவனுக்கு இரு மனைவியர். அவர்களில் அவன் முதல் மனைவியிடம் மட்டும் அதிக அன்பு செலுத்தினான். ஒருநாள் அவன் வேட்டையாட காட்டுக்குச் சென்றபோது, அங்கே சில தேவகன்னியர் ஏதோ ஒரு பூஜை செய்துகொண்டிருப்பதைப் பார்த்தான். அவர்களிடம் சென்று அந்த பூஜையைக் குறித்து கேட்டான். அதற்கு அவர்கள் தாங்கள் ஸ்வர்ண கௌரி விரதம் அனுஷ்டிப்பதாகக் கூறி, அந்த விரதத்தின் சிறப்புகளையும், அதனால் ஏற்படும் நன்மைகளையும் கூறினர். அதைக் கேட்ட அரசன் தானும் அதில் கலந்துகொண்டான். பூஜையின் முடிவில் பதினாறு முடிச்சுகள் கொண்ட நோன்பு கயிறைத் தனது கையில் கட்டிக்கொண்டு அரண்மனைக்குத் திரும்பினான். அவன் தனது இரு மனைவியரையும் அழைத்து, அந்த நோன்புச் சரட்டினை அவர்களிடம் காட்டி, அதனைப் பற்றிக் கூறினான்..அனைத்தையும் கேட்ட முதல் மனைவி, அந்தக் கயிற்றை அறுத்து பட்டுப்போன ஒரு மரத்தின் மீது வீசினாள். மரத்தின் மீது அந்தக் கயிறு பட்டவுடன் அந்த மரம் துளிர்க்க ஆரம்பித்தது. இதைப் பார்த்ததும் அரசரின் இரண்டாம் மனைவி அந்த நோன்பு சரடினை எடுத்துத் தனது கையில் கட்டிக்கொண்டாள். அதைக் கையில் கட்டியவுடனே, அதுவரை அவளிடம் வெறுப்பைக் காட்டிய அரசன் அவள் மேல் அன்பு செலுத்தத் தொடங்கினான். அதேசமயம் நோன்புக் கயிறை அறுத்து எறிந்த முதல் மனைவியை வெறுக்கவும் தொடங்கினான். இதனால் மனம் நொந்த அவனது முதல் மனைவி அரண்மனையிலிருந்து வெளியேறி காட்டிற்குச் சென்றாள். தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி, கெளரி தேவியை பிரார்த்தித்து அங்கிருந்த முனிவர்களின் ஆசிரமத்தை வலம் வந்தாள். ஆனால் அங்கிருந்த துறவிகள், கெளரி தேவியை நிந்தித்ததால் பிராயச்சித்தமே அதற்குக் கிடையாது என்று கூறி அவளை விரட்டினர். அதன் பின்னர் கெளரி தேவியை அவள் மனமார பிரார்த்தித்து கடும் தவம் இருந்தாள். அவளது தவத்துக்கு இரங்கிய அம்பிகை, அவளுடைய தவறை மன்னித்து, சகல நன்மைகளும் அவளுக்குக் கிடைக்க அருள்புரிந்தாள். அம்பிகையின் அருள் பெற்று தனது நாட்டுக்குத் திரும்பியவள், தன் கணவனின் அன்பையும் சகல நன்மைகளையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்ததாக இந்தக் கதை முடியும்..இனி, இந்த விரதத்தைக் கடைபிடிக்கும் முறையைக் குறித்துக் காண்போம். விரத தினத்துக்கு முன் தினம் பூஜை அறையை சுத்தம் செய்து, அம்பிகையின் திருமுகத்தை ஒரு கலசத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும். முடிந்த அளவு தம்மிடம் உள்ள தங்க நகைகளால் அம்பிகையை அங்கரிப்பது விசேஷம். (இதனால் தங்கம் வாங்கும் சக்தி கூடும் என்பது நம்பிக்கை) அம்பிகையின் பிரதிமை இல்லாதவர்கள் சிவசக்தியின் படத்தை வைத்தும் பூஜையை செய்யலாம். விரத தினத்தின் காலை முதல் மாலை வரை நோன்பிருந்து சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் கெளரி தேவியை பூஜிப்பது சிறப்பு. அம்பிகையின் வலப்புறம் நெய் தீபமும், இடப்புறம் நல்லெண்ணெய் தீபமும் ஏற்ற வேண்டும். அம்பிகை கிழக்கு நோக்கி இருக்க, வடக்கு பார்த்து அமர்ந்து பூஜிப்பது சிறப்பு. முதலில் கணபதியை வழிபட்ட பிறகு அம்பிகைக்கு ஷோடசோபசார பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு அம்பிகையை மலர்களால் அர்ச்சித்து, தேவியின் அஷ்டோத்ர நாமாவளியைக் கூறி வணங்க வேண்டும். பூஜையில், கலந்து கொள்வோரின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பதினாறு முடிச்சிட்ட நோன்பு சரடு, நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை படையலில் வைத்து, பூஜையின் முடிவில் நோன்பு சரடை கையில் கட்டிக்கொள்ள வேண்டும்..பூஜைக்குப் பிறகு சுமங்கலிப் பெண்களுக்கு உணவளித்து, மஞ்சள், குங்குமம், தாம்பூலம் அளிப்பது விசேஷம். பின்னர் அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று உமையவளோடு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை தரிசிக்கலாம். அன்று இரவு பிரசாதம் மட்டுமே உணவாக எடுத்துக்கொள்வது நன்று. மறுநாள், கெளரி தேவிக்கு சிறிய அளவில் புனர் பூஜை செய்ய வேண்டும். அதாவது, தூப தீபம் காட்டி, இயன்ற நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டி, பூக்கள் சமர்ப்பித்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இந்த விரதத்தைக் கடைபிடிப்பதால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். பொருளாதாரம் மேம்படும். மேலும், சகல சௌபாக்கியங்களும் பெற்று அனைத்து இன்பங்களையும் அடையலாம்.