– ஆர்.ஜெயலெட்சுமி.திருமாலை, திருவோணத்தான் என நாலாயிர திவ்ய பிரபந்தமும், சிவனை ஆதிரையான் என பரிபாடல், கலித்தொகையும் கூறுகிறது. இருபத்தேழு நட்சத்திரங்களில் 'திரு' என்ற தெய்வீகம் தாங்கி திருவோணம், திருவாதிரை மட்டுமே உள்ளன. இதில் திருவோணம் திருமாலுக்கும், திருவாதிரை சிவனுக்கும் உகந்த நட்சத்திரங்கள் ஆகும்..முற்காலத்தில் திருவாங்கூர், கொச்சி, மாவேலி என சமஸ்தானங்களாகப் பிரிக்கப்பட்டு கேரளாவை மன்னர்கள் ஆண்டனர். மாவேலி சமஸ்தானத்தை மகாபலி என்ற அசுரகுல மன்னன் ஆண்டான். நாட்டையும் மக்களையும் தன் இரு கண்களாகப் பாவித்தான்..மூவுலகிலும் தன் ஆட்சி நடைபெற வேண்டும் என்றெண்ணிய மகாபலி, தமது குல குருவான சுக்ராச்சாரியாரை நாடினான். அவர் தலைமையில் மூவுலகும் தனது ஆளுமைக்குள் வரும்படியாக பிரம்மாண்டமாக வேள்வி ஒன்றை நடத்தினான். 'வேள்வி நிறைவு பெற்றால் நாம் அசுரர்களுக்கு அடிமையாகி விடுவோம்' என அஞ்சிய இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், முனிவர்கள் மகாவிஷ்ணுவை நாடினர். மகாபலியின் வேள்வியைத் தடுத்தாட்கொள்ளுமாறு வேண்டினர். மூவுலகைக் காக்க, வேள்விச்சாலையில் குள்ளமான, அந்தணர் உருவில் வாமன அவதாரமாக திருமால் தோன்றினார். வந்தவர் அவதார புருஷர் என்பதை அறியாத மகாபலி, அவரை வணங்கி வேண்டியதைக் கேட்க வினவினான். தான் யாகம் இயற்ற மூன்றடி பூமியைத் தனக்கு தானமாக வழங்குமாறு வாமனன் கேட்டார். திருவடியால் பூமி கேட்பவர் மாயத் திருமால் என உணர்ந்த சுக்ராச்சாரியார், 'வரம் தர வேண்டாம்; வந்திருப்பது திருமால்' என மகாபலியிடம் கெஞ்சினார்..'திருமாலே வந்திருப்பாரென்றால் அது என் பாக்கியம். அம்மூன்றடியை வழங்கி முக்தி பெறுவேன்' எனக் கூறி, தாரை வார்க்க மகாபலி முற்பட்டான். இதைத் தடுக்க எண்ணி, பெரிய வண்டு உருக்கொண்ட சுக்ராச்சாரியார், கமண்டல துவாரத்தில் புகுந்து அவன் தாரை வார்த்துக் கொடுப்பதைத் தடுத்தார்..சுக்ராச்சாரியாரின் சூழ்ச்சியை அறிந்த வாமனன், தர்ப்பையை கமண்டல துவாரத்தில் நுழைத்து அவரது கண்ணைக் குருடாக்கினார். பின்னர் கமண்டல நீரினால் தாரை வார்த்து மூன்றடி நிலத்தை மகாபலி வழங்கினான். அப்போது வாமனன், உலகளந்த பெருமாளாகக் காட்சியருளி, ஓரடியில் பூமியையும், இரண்டாமடியில் ஆகாயம் உள்ளிட்ட லோகங்களையும் அளந்தார். மூன்றாமடிக்கு இடம் கேட்க,'என் தலை மீது தங்கள் திருவடியை வைத்து அளந்து கொள்ளுங்கள்' என மகாபலி பணிந்து நின்றான்..மகாபலியின் சிரசில் மூன்றாமடியை வைத்து அவருக்கு திருமால் முக்தியளித்தார். முக்திக்கு முன்பாக, 'ஆண்டுக்கு ஒருமுறை தனது நாட்டையும் மக்களையும் தாம் தரிசிக்க வரம் வேண்டும்' என மகாபலி வேண்டினான். மாவேலி மக்களும் தங்களது மன்னருக்கு நேர்ந்த நிகழ்வுக்கு வருந்தி, அதே வரத்தை திருமாலிடம் வேண்டினர். அப்படியே வரம் வழங்கிய திருமால், மகாபலிக்கும் மக்களுக்கும் காட்சியருளி மறைந்தார்..இந்நிகழ்வுப்படி ஒவ்வோர் ஆண்டும் ஆவணித் திருநாளில் மகாபலி மன்னன் பூமியில் தமது மக்களைக் காண வருவதாக நம்பிக்கை. அவரை வரவேற்க திருவோண விழாவை மக்கள் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். வீடு மற்றும் கோயில் முன்பு பசுஞ்சாணம் தெளித்து, மல்லிகை, முல்லை, செவ்வந்தி, தெத்தி, சம்பங்கி, தாமரை, ரோஜா, கனகாம்பரம், கேந்தி, காட்டுப்பூ, கமுகம், பிச்சி, தென்னம்பூ, குரங்கு வால்பூ, கோழிக்கொண்டை, வாடாமல்லி, புளிய இலை, வெற்றிலை, வாழை இலை, அரிசி மாவு, கடலை மாவு, வண்ணப் பொடிகள், வேப்பங்கொட்டை, பயறு வகைகள், பருத்தி என பலவற்றால், பல வண்ணத்தில் அத்தப்பூ கோலம் ஏழு அடுக்கில் இடுவர். கோலத்தின் மத்தியில் கூம்பு வடிவில் உருவம் அமைப்பர். அதனை மகாபலி, திருமால், சிவன் எனக் கருதி வணங்கி வழிபடுவர்..கோலத்தின் அருகே திருவிளக்குகள், நாழியில் புதிய நெல், தென்னம்பூ, மங்கலப் பொருட்கள் வைப்பர். ஒரு நாள் போட்ட கோலத்தின் உருவில் இன்னொரு நாளில் கோலம் போட மாட்டார்கள். ஓண நாட்களில் சிறந்த பூக்கோலங்கள் காணப்படாத வீடு, வாசல்களை கேரளத்தில் எங்குமே காண முடியாது. கோலங்களின் அமைப்புகள் பலவிதமாகும். தொன்றுதொட்டுள்ள பழக்கம் ஸ்ரீ சக்கர வடிவத்தில் மாத்திரம் கோலமிடுவதாலும் இந்தப் பத்து நாட்களும் பெண்கள் பலநிறப் பூக்களால் வட்டமாகக் கோலம் அமைத்து அழகுபடுத்தவர். இதை, 'அத்தப்பூவிடல்' என்பர்..ஓணத் திருநாளன்று நேந்திரங்காய் வறுவலும், சேனைக்கிழங்கு சேர்த்து செய்யப்பட்ட எரிசேரி என்ற பதார்த்தமும் பிரதானமாக இடம்பெறும். இதைத் தவிர, ஓண சத்யா என்ற அறுசுவை விருந்தில் சாதம், எரிசேரி, காளன், ஓலன், அவியல், தோரன், கூட்டுக்கறி, சட்னி வகைகள், பாயசம், அடை பிரதமன், பச்சடி வகைகள், உப்பேரி, பப்படங்கள் இடம்பெறும்..கேரளத்தின் பாரம்பரியக் கலையான கதகளி நடனமும் நிகழும். பெண்கள் ஆடும் கைகொட்டுக்களி, ஆண்களின் வீர விளையாட்டான ஓணத்தல்லு போன்றவையும் நிகழ்த்தப்படும். வீடுகளில் ஓண ஊஞ்சலிட்டு பெண்கள், சிறுவர்கள் இசையோடு ஆடி மகிழ்வர். மிகப்பெரிய அளவில் படகுப் போட்டி நடத்தப்படும்போது வஞ்சிப்பாட்டு இசைக்கப்படும். முத்துக்குடை ஊர்வலம் நடைபெறும். ஊரே விழாக்கோலம் காணும்..ஓணத்தின் நாயகனாக உலகளந்த பெருமாள் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் அருள்பாலிக்கிறார். ஆவணி ஓணத்தன்று மூலவரின் பின்புறம் உள்ள வாமனரை சந்தனக்காப்பில் அலங்கரிப்பார்கள்..மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவரான வாமனர் கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகில் உள்ள காக்கரையில் திருகாக்கரையப்பன் கோயில் என்னும் பெயரில் அருள்பாலிக்கிறார். மகாபலியின் சிம்மாசனம் வாசலில் உள்ளது. முன் மண்டபத்தில் வாமனரின் மரச்சிற்பம் காட்சி தருகிறது..கிராங்கனூருக்கு அருகே தாரிக்கரையில் உள்ள பழங்கால ஆலயத்தில்தான் மற்ற ஆலயங்களை விட, ஓணம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சேரமான் பெருமான் இந்த ஆலயத்தில்தான் முதன்முதலாக ஓணம் பண்டிகையைத் தொடங்கி வைத்தாராம். தானம் கொடுத்த மகாபலிக்கு மகாவிஷ்ணு வழங்கியது இந்திர பதவி!.இனி, ஓணம் பண்டிகைக்கு சுவாமிக்கு விசேஷமாக நிவேதனம் செய்யசில சமையல் குறிப்புகளைக் காண்போம்..மோர்க் கூட்டான்.தேவையானவை: பூசணிக்காய் – 500 கிராம், வாழைக்காய் – 2, சேனைக்கிழங்கு – 200 கிராம், தேங்காய் – 1, பச்சை மிளகாய் – 10, தயிர் – 100 கிராம் (புளித்தது), உப்பு – தேவையான அளவு..செய்முறை: காய்கறிகளை தோலைச் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வாழைக்காய், சேனைக் கிழங்கை மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்து பாதி வெந்ததும் பூசணிக்காய், உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். தேங்காய்த் துருவலோடு பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து காய்கறியோடு சேர்த்துக் கலக்கி கொதிக்க வைக்க வேண்டும். புளித்த தயிரை நன்றாகக் கடைந்துகொண்டு கொதிக்கும் கூட்டானில் விட வேண்டும். தயிரை விட்ட பிறகு முதல் நுரை வந்தவுடன் இறக்கி விட வேண்டும். அதிகம் கொதிக்கக்கூடாது. சிறிதளவு தேங்காய் எண்ணெயில் சிறிது கடுகு, இரண்டு காய்ந்த மிளகாய் தாளித்துக் கூட்டானில் விட சுவையாக இருக்கும்..நேந்திரங்காய் எரிசேரி.தேவையானவை: நேந்திரங்காய் – 3, தேங்காய் – 2 மூடி (பெரியது), காய்ந்த மிளகாய் – 6, மிளகு – 10, உப்பு – தேவையான அளவு..செய்முறை: நேந்திரங்காயை தோல் சீவி, அரையங்குல அளவில் துண்டுகள் ஆக்க வேண்டும். இதோடு மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். ஒரு மூடித் தேங்காயைத் துருவி மிளகாய், மிளகு சேர்த்து நன்றாக அரைத்து வேக வைத்த நேந்திரங்காயோடு சேர்த்து நன்றாகக் கொதிக்க விட வேண்டும். மீதி இருக்கும் தேங்காயைத் துருவி தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எரிசேரி நன்றாக கொதித்து ஓரளவு கெட்டியானவுடன் தேங்காய் அரைத்துவிட்டதோடு வறுத்ததையும் போட்டு கடுகு தாளித்து கீழே இறக்கவும்..சக்கப் பிரதமன்.தேவையானவை: பலாப்பழம் – 1, வெல்லம் -1 கிலோ, தேங்காய் – 2..செய்முறை: பலாப்பழச் சுளைகளில் (நன்கு பழுத்தவையாக இருக்கட்டும்) கொட்டைகளை நீக்கிவிட்டுச் சுளைகளைச் சிறு சிறு துண்டுகளாக்கி அளவோடு தண்ணீர் விட்டு அகலமான பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அடுப்பிலிருக்கும் பலாப்பழச் சாறு கெட்டியாகி வரும் சமயத்தில் வெல்லக் கரைசலைச் சேர்த்துக் கலக்கி சுண்டும் சமயத்தில் இறக்கி விட வேண்டும். சிறிதளவு நெய்யை ஒரு பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைத்து, அதில் இறக்கி வைத்திருக்கும் பலாப் பழச் சாற்றில் சிறிதளவு எடுத்துத் தண்ணீர் விட்டுக் கொதிக்க விட வேண்டும். தேங்காயைத் துருவி நன்றாக அரைத்துக் கெட்டியாகப் பால் எடுத்துக்கொள்ள வேண்டும். தேங்காய்ப்பாலைக் கொதித்துக் கொண்டிருக்கும் கலவையில் மீண்டும் அடிப்பிடிக்காதபடி நன்றாகக் கொதிக்க விட வேண்டும். இறக்கும் சமயத்தில் தனியாக எடுத்து வைத்திருக்கும் மீதிப் பலாப்பழச் சாற்றையும் சேர்க்க வேண்டும். கடைசியில் அரை மூடித் தேங்காயை சிறு சிறு பற்களாக நறுக்கிச் சக்கப் பிரதமனில் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்..மயப்போளி.தேவையானவை: துவரம் பருப்பு – 200 கிராம், உளுத்தம் பருப்பு – 100 கிராம், பச்சரிசி – 200 கிராம், பச்சை மிளகாய் – 6, பெருங்காயப் பொடி – 1 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு..செய்முறை: மேலே சொன்ன எல்லாச் சாமான்களையும் தண்ணீரில்லாமல் கெட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும். தண்ணீர் நனைத்த துணியை விரித்துப் போளி மாவைப் பப்படம் போல் தட்டிக்கொண்டு தேங்காய் எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
– ஆர்.ஜெயலெட்சுமி.திருமாலை, திருவோணத்தான் என நாலாயிர திவ்ய பிரபந்தமும், சிவனை ஆதிரையான் என பரிபாடல், கலித்தொகையும் கூறுகிறது. இருபத்தேழு நட்சத்திரங்களில் 'திரு' என்ற தெய்வீகம் தாங்கி திருவோணம், திருவாதிரை மட்டுமே உள்ளன. இதில் திருவோணம் திருமாலுக்கும், திருவாதிரை சிவனுக்கும் உகந்த நட்சத்திரங்கள் ஆகும்..முற்காலத்தில் திருவாங்கூர், கொச்சி, மாவேலி என சமஸ்தானங்களாகப் பிரிக்கப்பட்டு கேரளாவை மன்னர்கள் ஆண்டனர். மாவேலி சமஸ்தானத்தை மகாபலி என்ற அசுரகுல மன்னன் ஆண்டான். நாட்டையும் மக்களையும் தன் இரு கண்களாகப் பாவித்தான்..மூவுலகிலும் தன் ஆட்சி நடைபெற வேண்டும் என்றெண்ணிய மகாபலி, தமது குல குருவான சுக்ராச்சாரியாரை நாடினான். அவர் தலைமையில் மூவுலகும் தனது ஆளுமைக்குள் வரும்படியாக பிரம்மாண்டமாக வேள்வி ஒன்றை நடத்தினான். 'வேள்வி நிறைவு பெற்றால் நாம் அசுரர்களுக்கு அடிமையாகி விடுவோம்' என அஞ்சிய இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், முனிவர்கள் மகாவிஷ்ணுவை நாடினர். மகாபலியின் வேள்வியைத் தடுத்தாட்கொள்ளுமாறு வேண்டினர். மூவுலகைக் காக்க, வேள்விச்சாலையில் குள்ளமான, அந்தணர் உருவில் வாமன அவதாரமாக திருமால் தோன்றினார். வந்தவர் அவதார புருஷர் என்பதை அறியாத மகாபலி, அவரை வணங்கி வேண்டியதைக் கேட்க வினவினான். தான் யாகம் இயற்ற மூன்றடி பூமியைத் தனக்கு தானமாக வழங்குமாறு வாமனன் கேட்டார். திருவடியால் பூமி கேட்பவர் மாயத் திருமால் என உணர்ந்த சுக்ராச்சாரியார், 'வரம் தர வேண்டாம்; வந்திருப்பது திருமால்' என மகாபலியிடம் கெஞ்சினார்..'திருமாலே வந்திருப்பாரென்றால் அது என் பாக்கியம். அம்மூன்றடியை வழங்கி முக்தி பெறுவேன்' எனக் கூறி, தாரை வார்க்க மகாபலி முற்பட்டான். இதைத் தடுக்க எண்ணி, பெரிய வண்டு உருக்கொண்ட சுக்ராச்சாரியார், கமண்டல துவாரத்தில் புகுந்து அவன் தாரை வார்த்துக் கொடுப்பதைத் தடுத்தார்..சுக்ராச்சாரியாரின் சூழ்ச்சியை அறிந்த வாமனன், தர்ப்பையை கமண்டல துவாரத்தில் நுழைத்து அவரது கண்ணைக் குருடாக்கினார். பின்னர் கமண்டல நீரினால் தாரை வார்த்து மூன்றடி நிலத்தை மகாபலி வழங்கினான். அப்போது வாமனன், உலகளந்த பெருமாளாகக் காட்சியருளி, ஓரடியில் பூமியையும், இரண்டாமடியில் ஆகாயம் உள்ளிட்ட லோகங்களையும் அளந்தார். மூன்றாமடிக்கு இடம் கேட்க,'என் தலை மீது தங்கள் திருவடியை வைத்து அளந்து கொள்ளுங்கள்' என மகாபலி பணிந்து நின்றான்..மகாபலியின் சிரசில் மூன்றாமடியை வைத்து அவருக்கு திருமால் முக்தியளித்தார். முக்திக்கு முன்பாக, 'ஆண்டுக்கு ஒருமுறை தனது நாட்டையும் மக்களையும் தாம் தரிசிக்க வரம் வேண்டும்' என மகாபலி வேண்டினான். மாவேலி மக்களும் தங்களது மன்னருக்கு நேர்ந்த நிகழ்வுக்கு வருந்தி, அதே வரத்தை திருமாலிடம் வேண்டினர். அப்படியே வரம் வழங்கிய திருமால், மகாபலிக்கும் மக்களுக்கும் காட்சியருளி மறைந்தார்..இந்நிகழ்வுப்படி ஒவ்வோர் ஆண்டும் ஆவணித் திருநாளில் மகாபலி மன்னன் பூமியில் தமது மக்களைக் காண வருவதாக நம்பிக்கை. அவரை வரவேற்க திருவோண விழாவை மக்கள் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். வீடு மற்றும் கோயில் முன்பு பசுஞ்சாணம் தெளித்து, மல்லிகை, முல்லை, செவ்வந்தி, தெத்தி, சம்பங்கி, தாமரை, ரோஜா, கனகாம்பரம், கேந்தி, காட்டுப்பூ, கமுகம், பிச்சி, தென்னம்பூ, குரங்கு வால்பூ, கோழிக்கொண்டை, வாடாமல்லி, புளிய இலை, வெற்றிலை, வாழை இலை, அரிசி மாவு, கடலை மாவு, வண்ணப் பொடிகள், வேப்பங்கொட்டை, பயறு வகைகள், பருத்தி என பலவற்றால், பல வண்ணத்தில் அத்தப்பூ கோலம் ஏழு அடுக்கில் இடுவர். கோலத்தின் மத்தியில் கூம்பு வடிவில் உருவம் அமைப்பர். அதனை மகாபலி, திருமால், சிவன் எனக் கருதி வணங்கி வழிபடுவர்..கோலத்தின் அருகே திருவிளக்குகள், நாழியில் புதிய நெல், தென்னம்பூ, மங்கலப் பொருட்கள் வைப்பர். ஒரு நாள் போட்ட கோலத்தின் உருவில் இன்னொரு நாளில் கோலம் போட மாட்டார்கள். ஓண நாட்களில் சிறந்த பூக்கோலங்கள் காணப்படாத வீடு, வாசல்களை கேரளத்தில் எங்குமே காண முடியாது. கோலங்களின் அமைப்புகள் பலவிதமாகும். தொன்றுதொட்டுள்ள பழக்கம் ஸ்ரீ சக்கர வடிவத்தில் மாத்திரம் கோலமிடுவதாலும் இந்தப் பத்து நாட்களும் பெண்கள் பலநிறப் பூக்களால் வட்டமாகக் கோலம் அமைத்து அழகுபடுத்தவர். இதை, 'அத்தப்பூவிடல்' என்பர்..ஓணத் திருநாளன்று நேந்திரங்காய் வறுவலும், சேனைக்கிழங்கு சேர்த்து செய்யப்பட்ட எரிசேரி என்ற பதார்த்தமும் பிரதானமாக இடம்பெறும். இதைத் தவிர, ஓண சத்யா என்ற அறுசுவை விருந்தில் சாதம், எரிசேரி, காளன், ஓலன், அவியல், தோரன், கூட்டுக்கறி, சட்னி வகைகள், பாயசம், அடை பிரதமன், பச்சடி வகைகள், உப்பேரி, பப்படங்கள் இடம்பெறும்..கேரளத்தின் பாரம்பரியக் கலையான கதகளி நடனமும் நிகழும். பெண்கள் ஆடும் கைகொட்டுக்களி, ஆண்களின் வீர விளையாட்டான ஓணத்தல்லு போன்றவையும் நிகழ்த்தப்படும். வீடுகளில் ஓண ஊஞ்சலிட்டு பெண்கள், சிறுவர்கள் இசையோடு ஆடி மகிழ்வர். மிகப்பெரிய அளவில் படகுப் போட்டி நடத்தப்படும்போது வஞ்சிப்பாட்டு இசைக்கப்படும். முத்துக்குடை ஊர்வலம் நடைபெறும். ஊரே விழாக்கோலம் காணும்..ஓணத்தின் நாயகனாக உலகளந்த பெருமாள் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் அருள்பாலிக்கிறார். ஆவணி ஓணத்தன்று மூலவரின் பின்புறம் உள்ள வாமனரை சந்தனக்காப்பில் அலங்கரிப்பார்கள்..மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவரான வாமனர் கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகில் உள்ள காக்கரையில் திருகாக்கரையப்பன் கோயில் என்னும் பெயரில் அருள்பாலிக்கிறார். மகாபலியின் சிம்மாசனம் வாசலில் உள்ளது. முன் மண்டபத்தில் வாமனரின் மரச்சிற்பம் காட்சி தருகிறது..கிராங்கனூருக்கு அருகே தாரிக்கரையில் உள்ள பழங்கால ஆலயத்தில்தான் மற்ற ஆலயங்களை விட, ஓணம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சேரமான் பெருமான் இந்த ஆலயத்தில்தான் முதன்முதலாக ஓணம் பண்டிகையைத் தொடங்கி வைத்தாராம். தானம் கொடுத்த மகாபலிக்கு மகாவிஷ்ணு வழங்கியது இந்திர பதவி!.இனி, ஓணம் பண்டிகைக்கு சுவாமிக்கு விசேஷமாக நிவேதனம் செய்யசில சமையல் குறிப்புகளைக் காண்போம்..மோர்க் கூட்டான்.தேவையானவை: பூசணிக்காய் – 500 கிராம், வாழைக்காய் – 2, சேனைக்கிழங்கு – 200 கிராம், தேங்காய் – 1, பச்சை மிளகாய் – 10, தயிர் – 100 கிராம் (புளித்தது), உப்பு – தேவையான அளவு..செய்முறை: காய்கறிகளை தோலைச் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வாழைக்காய், சேனைக் கிழங்கை மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்து பாதி வெந்ததும் பூசணிக்காய், உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். தேங்காய்த் துருவலோடு பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து காய்கறியோடு சேர்த்துக் கலக்கி கொதிக்க வைக்க வேண்டும். புளித்த தயிரை நன்றாகக் கடைந்துகொண்டு கொதிக்கும் கூட்டானில் விட வேண்டும். தயிரை விட்ட பிறகு முதல் நுரை வந்தவுடன் இறக்கி விட வேண்டும். அதிகம் கொதிக்கக்கூடாது. சிறிதளவு தேங்காய் எண்ணெயில் சிறிது கடுகு, இரண்டு காய்ந்த மிளகாய் தாளித்துக் கூட்டானில் விட சுவையாக இருக்கும்..நேந்திரங்காய் எரிசேரி.தேவையானவை: நேந்திரங்காய் – 3, தேங்காய் – 2 மூடி (பெரியது), காய்ந்த மிளகாய் – 6, மிளகு – 10, உப்பு – தேவையான அளவு..செய்முறை: நேந்திரங்காயை தோல் சீவி, அரையங்குல அளவில் துண்டுகள் ஆக்க வேண்டும். இதோடு மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். ஒரு மூடித் தேங்காயைத் துருவி மிளகாய், மிளகு சேர்த்து நன்றாக அரைத்து வேக வைத்த நேந்திரங்காயோடு சேர்த்து நன்றாகக் கொதிக்க விட வேண்டும். மீதி இருக்கும் தேங்காயைத் துருவி தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எரிசேரி நன்றாக கொதித்து ஓரளவு கெட்டியானவுடன் தேங்காய் அரைத்துவிட்டதோடு வறுத்ததையும் போட்டு கடுகு தாளித்து கீழே இறக்கவும்..சக்கப் பிரதமன்.தேவையானவை: பலாப்பழம் – 1, வெல்லம் -1 கிலோ, தேங்காய் – 2..செய்முறை: பலாப்பழச் சுளைகளில் (நன்கு பழுத்தவையாக இருக்கட்டும்) கொட்டைகளை நீக்கிவிட்டுச் சுளைகளைச் சிறு சிறு துண்டுகளாக்கி அளவோடு தண்ணீர் விட்டு அகலமான பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அடுப்பிலிருக்கும் பலாப்பழச் சாறு கெட்டியாகி வரும் சமயத்தில் வெல்லக் கரைசலைச் சேர்த்துக் கலக்கி சுண்டும் சமயத்தில் இறக்கி விட வேண்டும். சிறிதளவு நெய்யை ஒரு பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைத்து, அதில் இறக்கி வைத்திருக்கும் பலாப் பழச் சாற்றில் சிறிதளவு எடுத்துத் தண்ணீர் விட்டுக் கொதிக்க விட வேண்டும். தேங்காயைத் துருவி நன்றாக அரைத்துக் கெட்டியாகப் பால் எடுத்துக்கொள்ள வேண்டும். தேங்காய்ப்பாலைக் கொதித்துக் கொண்டிருக்கும் கலவையில் மீண்டும் அடிப்பிடிக்காதபடி நன்றாகக் கொதிக்க விட வேண்டும். இறக்கும் சமயத்தில் தனியாக எடுத்து வைத்திருக்கும் மீதிப் பலாப்பழச் சாற்றையும் சேர்க்க வேண்டும். கடைசியில் அரை மூடித் தேங்காயை சிறு சிறு பற்களாக நறுக்கிச் சக்கப் பிரதமனில் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்..மயப்போளி.தேவையானவை: துவரம் பருப்பு – 200 கிராம், உளுத்தம் பருப்பு – 100 கிராம், பச்சரிசி – 200 கிராம், பச்சை மிளகாய் – 6, பெருங்காயப் பொடி – 1 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு..செய்முறை: மேலே சொன்ன எல்லாச் சாமான்களையும் தண்ணீரில்லாமல் கெட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும். தண்ணீர் நனைத்த துணியை விரித்துப் போளி மாவைப் பப்படம் போல் தட்டிக்கொண்டு தேங்காய் எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.