சபரிமலையில் மாசி மாத நடை திறப்பு !

சபரிமலை
சபரிமலை

சபரிமலையில் மாசி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு வரும் 17ஆம் தேதி வரை பூஜைகள் நடை பெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு மட்டும் இன்றி ஒவ்வொரு தமிழ் மாதம் துவக்கத்திலும் ஐந்து நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. இன்று காலை சிறப்பு பூஜைகள் தொடங்கும் என தேவசம் போர்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12 முதல் நடை திறக்கப்பட்டது. அதிலிருந்து வருகிற 17 ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் கடந்த மாதம் ஜனவரி 20-ஆம் தேதி நடை மூடப்பட்டது. இந்த நிலையில் மாசி மாதம் பிறந்து உள்ளதால் மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந்தது.

சபரிமலை ஐயப்பன் கோவில்
சபரிமலை ஐயப்பன் கோவில்

கோவில் தந்திரி கண்டரு ராஜீவ்ரு தலைமையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்த பின் தீபாராதனை காட்டப் பட்டது. அதன் பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து காலை 5 மணி முதல் நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள்

பெற்றது.

இந்த மாசி மாத பூஜைக்கு பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதி பெறாதவர்கள் நிலக்கல், பாம்பையில் திறக்கப்பட்டிருக்கும் சிறப்பு கவுண்டர்களில் சென்று அனுமதி பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாசி மாத பூஜைக்கு பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதி பெறாதவர்கள் நிலக்கல், பாம்பையில் திறக்கப்பட்டிருக்கும் சிறப்பு கவுண்டர்களில் சென்று அனுமதி பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாசி மாத பூஜைக்கு பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதி பெறாதவர்கள் நிலக்கல், பாம்பையில் திறக்கப்பட்டிருக்கும் சிறப்பு கவுண்டர்களில் சென்று அனுமதி பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாசி மாத பூஜைக்கு பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதி பெறாதவர்கள் நிலக்கல், பாம்பையில் திறக்கப்பட்டிருக்கும் சிறப்பு கவுண்டர்களில் சென்று அனுமதி பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.17 ஆம் தேதி இரவு பத்து மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். அன்றுடன் மாசி மாத பூஜைகள் நிறைவடையும் என தேவசம் போர்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com