செல்வம் மட்டுமே வாழ்வல்ல!

எமில் புஸ்தானி
எமில் புஸ்தானி

லெபனானில் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எமில் புஸ்தானி. அவர், ‘அனைவரையும் புதைக்கும் கல்லறையில் தம்மையும் புதைக்கக் கூடாது’ என்ற எண்ணத்தில் பெய்ரூத்தில் தமக்காக ஓர் அழகிய கல்லறையை பார்த்துப் பார்த்துக் கட்டினார். அதோடு, இவர் சொந்தமாக ஒரு ஜெட் விமானம் வைத்துக் கொண்டு அதில் அவர் மட்டும் பயணம் செய்வார். அப்படிப் பயணம் செய்யும்போது ஒருநாள் அது கடலில் விழுந்து நொறுங்கியது. அவரது உடலைக் கண்டுபிடிக்க மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவு செய்யப்பட்டன. இறுதியில், அவர் பயணம் செய்த விமானம் மட்டுமே கிடைத்தது. அவர் தமக்காகக் கட்டி வைத்த கல்லறையில் அடக்கம் செய்ய கடைசி வரை அவரதுஉடல் கிடைக்கவே இல்லை.

யூதர் ரூட் சைல்ட்
யூதர் ரூட் சைல்ட்

தைப்போல, பிரிட்டனைச் சேர்ந்த பெரும் பணக்காரர் யூதர் ரூட் சைல்ட். அவரிடமிருந்த அபரிதமான செல்வச் செழிப்பால் சில சமயம் பிரிட்டன் அரசுக்கே கடன் கொடுப்பாராம். ரொக்கமாக இருக்கும் செல்வத்தை சேமித்து வைக்க பாதுகாப்பு அம்சங்களுடன்கூடிய தனியாக ஓர் அறையைக் கட்டினார். ஒருமுறை அந்த அறையில் நுழைந்தவர், அறியாமல் கருவூலக் கதவை அடைத்துவிட்டார். அவ்வளவுதான்! தானாகவே பூட்டிக்கொள்ளும் அந்த அறையின் கதவு, கடைசி வரை திறக்கவே இல்லை. சப்தமிட்டார்… கத்தினார். அது யாருக்கும் கேட்கவேயில்லை. காரணம், அவர் தங்குவது வீடல்ல; அரண்மனை. பெரும்பாலும் அரண்மனையிலிருந்து பல நாள் உல்லாசப் பயணம் சென்றுவிடுவார். அன்றும் அவர் அவ்வாறே சென்றிருப்பார் என அவரது குடும்பத்தார் நினைத்தனர். பசியாலும் தாகத்தாலும் கத்திக் கூச்சலிட்டு பணக்கட்டுகளுக்கு மேல் கிடந்து மரணித்தார். மரணிக்கும் முன் விரலைக் காயப்படுத்தி சுவரில் அவர் இப்படி எழுதினார், "உலகிலேயே பெரும் பணக்காரர் பசியாலும் தாகத்தாலும் இறக்கிறார்." சில வாரங்களுக்குப் பின்னரே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

ணம் மட்டுமே தேவைகளைப் பூர்த்தி செய்கிறது என நினைப்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கைச் செய்தி. ஒரு நாள் அனைவரும் உலகை விட்டுப் பிரிந்தே ஆகவேண்டும். ஆயினும், எங்கே? எப்போது? எப்படி? என்பது மட்டும் புரியாத புதிர். உல்லாசப் பயணம் சென்றால் திரும்பலாம். உலகைப் பிரிந்தால் திரும்ப முடியுமா? எனவே, யாரையும் வெறுக்காமல், ஒதுக்காமல், காயப்படுத்தாமல், கேவலப்படுத்தாமல், தாம் மட்டுமே வசதியாக வாழ வேண்டும்… தம்மிடம் மட்டுமே பணம், வசதி ஆகியவை இருக்க வேண்டும் என நினைக்காமல் வாழ்வோம்! மனிதம் வளருங்கள்... அன்பை விதையுங்கள்… சக மனிதர்களை மனிதனாய் மதியுங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com