சுவாமியே சரணம் ஐயப்பா...

சுவாமி ஐயப்பன் தகவல்கள்.
சுவாமியே சரணம் ஐயப்பா...
எஸ்.ராஜம்

என் வயது 84. கல்கி இதழ் பிறந்ததிலிருந்தே என் தாயார் கல்கி இதழை படித்ததை பார்த்து, பார்த்து வளர்ந்ததால் எனக்கும் படிப்பார்வம் பிறந்தது. பின்னர் எழுத்தார்வம் உருவானது. கல்கி இதழுக்கு 16 வயதில் இருந்து என் படைப்புகளை அனுப்ப ஆரம்பித்தேன். பிறகு மங்கையர் மலர் பிறந்ததும் அதற்கு கதை, கவிதைகள், கட்டுரைகள் துணுக்குகள் ஜோக்ஸ், டிப்ஸ், கோலங்கள் என்று அனுப்பி கொண்டிருக்கிறேன். அவை பிரசுரமாகி எனக்கு உற்சாகமூட்டுகின்றன. கல்கி குழும இதழ்கள் நடத்திய போட்டிகளில் பங்கு கொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளேன். ராஜம் எனும் என் பெயரிலும் ராஜலட்சுமி பாரதி மகள் ஆகிய துணை பெயர்களிலும் இன்று வரை தொடர்ந்து எழுதி வருகிறேன். தலைமுறை தலைமுறையாக கல்கி குழுமத்துடன் நாங்கள் உறவு வைத்திருப்பது எனக்கு பெருமை தருகிறது.

Updated on

கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்ப சுவாமியை தரிசிக்க தயாராகும் மாதம்.

யப்பன் மார்கழி மாதம், உத்திர நட்சத்திரம், பஞ்சமி திதி, சனிக்கிழமை, விருச்சிக லக்னத்தில் மகாவிஷ்ணுவான மோகினிக்கும், சிவபெருமானுக்கும் அவதாரம் செய்தார். ஐயப்பன் என்றால் அம்மையும் அப்பனும் ஆனவர் என்று பொருள். சில நூல்களில் ஐயப்பன் பிறந்தநாள் பங்குனி உத்திரம் என்று கூறப்பட்டுள்ளது.

புலிப்பாலுக்காக மணிகண்டன் காட்டுக்குச் சென்றபோது, அங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்கள், ஒரு மலை உச்சியில் தங்கத்தால் ஒரு கோயில் அமைத்து, ரத்ன சிம்மாசனத்தில் அவரை அமர வைத்து, வேத நெறிப்படி பூஜை செய்தனர். அந்த இடமே பொன்னம்பல மேடு (காந்தமலை) என்று வழங்கப்படுகிறது.

கேரள மாநிலம் ஆரியங்காவு என்ற இடத்தில் ஐயப்பன் இளைஞனாக திருமண கோலத்தில் காட்சி தருகிறார். பரசுராமர் பிரதிஷ்டை செய்தது இக்கோலம்.

குளத்துப்புழையில் ஐயப்பன் குழந்தை வடிவில், காணப்படுகிறார். அதனால் கர்ப்ப கிரகக் கதவு, ஒரு குழந்தை உள்ளே செல்லும் உயரத்தில் உள்ளது. இக்கோவிலும் பரசுராமர் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம்.

ச்சன்கோயில் ஐயப்பன் நெற்றியில் திருமண் இட்டு, வலக்கையில் அமுதம் ஏந்தி, யோகப்பட்டை அணிந்து, ராஜகோலத்தில் பூரண புஷ்கலை தேவியருடன், வனராஜாவாக வாளுடன் காட்சி தருகிறார். இக்கோவிலில் விஷமுறிவு தீர்த்தம் என்று கிணறு உள்ளது. விஷப் பூச்சிகளால் கடிபட்டவர்கள், இந்த தீர்த்தத்தை அருந்தினால் விஷம் இறங்கிவிடும்.

யப்ப பக்தர்கள் அவரை குழந்தையாக குளத்து புழையிலும், இளைஞனாக ஆரியங்காவிலும், அரசனாக அச்சன் கோவிலிலும், யோக வடிவமாக சபரிமலையிலும், ஜோதி வடிவமாக காந்தமலை எனும் பொன்னம்பல மேடு தலத்திலும் வழிபடுகிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com