- அபர்ணா சுப்ரமணியம்மகிஷாசுரனை அழிப்பதற்காக அவதரித்த கார்த்தியாயினிக்கு சிவ தேஜஸ் முகமாகவும், யமன் தேஜஸ் கேசங்களாகவும், அக்னி தேஜஸ் மூன்று கண்களாகவும், சந்தியா தேஜஸ் மூன்று புருவங்களாகவும், தட்சனின் தேஜஸ் அழகிய பற்களாகவும், குபேர தேஜஸ் காதுகளாகவும், கருணை தேஜஸ் மேல் உதடுகளாகவும், கார்த்திகேயன் தேஜஸ் கீழ் உதடுகளாகவும், விஷ்ணு தேஜஸ் 18 கரங்களாகவும் தோன்றின. கார்த்தியாயினியின் முகம் சிவப்பாகவும், கைகள் நீலமாகவும், மத்திய பாகம் வெளுப்பாகவும், வண்ண மலர் மாலை, ஆபரணங்கள் அணிந்த கோலத்தில் இருந்ததாகவும் வைக்ருதிக ரகஸியம் கூறுகிறது.மகிஷாசுரனை அழிக்கப் புறப்பட்ட கார்த்தியாயினிக்கு சிவன் சூலத்தையும், விஷ்ணு சக்கரத்தையும், வருணன் சங்கையும், அக்னி பகவான் சக்தியையும், வாயு வில் மற்றும் அம்பறாத் தூணியையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், ஐராவதம் மணியையும், எமன் கால தண்டத்தையும், வருணன் பாசத்தையும், பிரம்மா அட்சர மாலையையும் கொடுத்தனர்..கார்த்தியாயினி தேவி புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்தசி திதியில் அவதரித்து, மகிஷாசுரனை சுக்ல பட்ச அஷ்டமி திதியில் வதம் செய்தாளென்றும், விஜயதசமியன்று தேவர்களிடம் விடைபெற்று மணித்வீபம் சென்றடைந்தாள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. கிருஷ்ணனை தங்களது கணவராக அடைய கோபியர்கள் யமுனை நதிக்கரையில் கார்த்தியாயினிக்கு பூஜைகள் செய்ததாக கிருஷ்ண புராணம் கூறுகிறது. நவராத்திரியில் ஆறாவது நாளில் உபாசனைக்குரிய தேவதையாக கார்த்தியாயினி பூஜிக்கப்படுகிறாள். இவளை உபாசிக்கும் பக்தனின் மனம் அமைதி அடையும்.இப்படி மகிமைகள் நிறைந்த தேவி குமாரநல்லூரில், அஞ்சன சிலையில் வார்த்தெடுக்கப்பட்ட திருக்கோலத்தில், கைகளில் சங்கு, சக்கரம், பாதங்களில் பொற்சிலம்பு, கழுத்தில் முத்து மாலை, சந்திர வதனத்துடன் காட்சி தருகிறாள். துர்கா தேவியின் திருக்கோலங்களில் கார்த்தியாயினியும் ஒன்று..ஒரு சமயம் மஹிஷாசுரன் பெண் வடிவம் தாங்கி கார்த்தியாயன மஹரிஷியின் மகனை மோகிக்கச் செய்ததனால் கோபமுற்ற மஹரிஷி, “பெண் உருவம் கொண்டு என் மகனை நிலை தடுமாறச் செய்ததால், நீ ஒரு பெண்ணாலேயே மடிவாய்’ எனச் சபித்தார். மஹிஷாசுரனை அழிக்கவும், மஹரிஷியின் சாபத்தை நிறைவேற்றவும் தேவர்கள் கார்த்தியாயனரின் ஆசிரமத்தில் தங்கி பராசக்தியைக் குறித்து தவமிருந்தனர். அவர்களது வேண்டுகோளை நிறைவேற்ற பராசக்தி கார்த்தியாயன ஆசிரமத்தில் அவருடைய மகளாகப் பிறந்து கார்த்தியாயினி எனப் பெயர் பெற்றாள்.இந்தியாவிலுள்ள பஞ்ச துர்கா ஸ்தலங்களில் இதுவே தலையாயது என்று ஆதிசங்கரர் குறிப்படுகிறார். கேரளாவில் 108 துர்கை கோயில்களுக்கும் முன்னது இக்கோயில். அருமையான அஞ்சனக் கல்லாலான அன்னையின் உருவத்திற்கு மஞ்சள் அபிஷேகம் செய்கையில் காணக் கோடி வேண்டும். அன்னை மகா சாந்நித்யம் மிக்கவள்.
- அபர்ணா சுப்ரமணியம்மகிஷாசுரனை அழிப்பதற்காக அவதரித்த கார்த்தியாயினிக்கு சிவ தேஜஸ் முகமாகவும், யமன் தேஜஸ் கேசங்களாகவும், அக்னி தேஜஸ் மூன்று கண்களாகவும், சந்தியா தேஜஸ் மூன்று புருவங்களாகவும், தட்சனின் தேஜஸ் அழகிய பற்களாகவும், குபேர தேஜஸ் காதுகளாகவும், கருணை தேஜஸ் மேல் உதடுகளாகவும், கார்த்திகேயன் தேஜஸ் கீழ் உதடுகளாகவும், விஷ்ணு தேஜஸ் 18 கரங்களாகவும் தோன்றின. கார்த்தியாயினியின் முகம் சிவப்பாகவும், கைகள் நீலமாகவும், மத்திய பாகம் வெளுப்பாகவும், வண்ண மலர் மாலை, ஆபரணங்கள் அணிந்த கோலத்தில் இருந்ததாகவும் வைக்ருதிக ரகஸியம் கூறுகிறது.மகிஷாசுரனை அழிக்கப் புறப்பட்ட கார்த்தியாயினிக்கு சிவன் சூலத்தையும், விஷ்ணு சக்கரத்தையும், வருணன் சங்கையும், அக்னி பகவான் சக்தியையும், வாயு வில் மற்றும் அம்பறாத் தூணியையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், ஐராவதம் மணியையும், எமன் கால தண்டத்தையும், வருணன் பாசத்தையும், பிரம்மா அட்சர மாலையையும் கொடுத்தனர்..கார்த்தியாயினி தேவி புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்தசி திதியில் அவதரித்து, மகிஷாசுரனை சுக்ல பட்ச அஷ்டமி திதியில் வதம் செய்தாளென்றும், விஜயதசமியன்று தேவர்களிடம் விடைபெற்று மணித்வீபம் சென்றடைந்தாள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. கிருஷ்ணனை தங்களது கணவராக அடைய கோபியர்கள் யமுனை நதிக்கரையில் கார்த்தியாயினிக்கு பூஜைகள் செய்ததாக கிருஷ்ண புராணம் கூறுகிறது. நவராத்திரியில் ஆறாவது நாளில் உபாசனைக்குரிய தேவதையாக கார்த்தியாயினி பூஜிக்கப்படுகிறாள். இவளை உபாசிக்கும் பக்தனின் மனம் அமைதி அடையும்.இப்படி மகிமைகள் நிறைந்த தேவி குமாரநல்லூரில், அஞ்சன சிலையில் வார்த்தெடுக்கப்பட்ட திருக்கோலத்தில், கைகளில் சங்கு, சக்கரம், பாதங்களில் பொற்சிலம்பு, கழுத்தில் முத்து மாலை, சந்திர வதனத்துடன் காட்சி தருகிறாள். துர்கா தேவியின் திருக்கோலங்களில் கார்த்தியாயினியும் ஒன்று..ஒரு சமயம் மஹிஷாசுரன் பெண் வடிவம் தாங்கி கார்த்தியாயன மஹரிஷியின் மகனை மோகிக்கச் செய்ததனால் கோபமுற்ற மஹரிஷி, “பெண் உருவம் கொண்டு என் மகனை நிலை தடுமாறச் செய்ததால், நீ ஒரு பெண்ணாலேயே மடிவாய்’ எனச் சபித்தார். மஹிஷாசுரனை அழிக்கவும், மஹரிஷியின் சாபத்தை நிறைவேற்றவும் தேவர்கள் கார்த்தியாயனரின் ஆசிரமத்தில் தங்கி பராசக்தியைக் குறித்து தவமிருந்தனர். அவர்களது வேண்டுகோளை நிறைவேற்ற பராசக்தி கார்த்தியாயன ஆசிரமத்தில் அவருடைய மகளாகப் பிறந்து கார்த்தியாயினி எனப் பெயர் பெற்றாள்.இந்தியாவிலுள்ள பஞ்ச துர்கா ஸ்தலங்களில் இதுவே தலையாயது என்று ஆதிசங்கரர் குறிப்படுகிறார். கேரளாவில் 108 துர்கை கோயில்களுக்கும் முன்னது இக்கோயில். அருமையான அஞ்சனக் கல்லாலான அன்னையின் உருவத்திற்கு மஞ்சள் அபிஷேகம் செய்கையில் காணக் கோடி வேண்டும். அன்னை மகா சாந்நித்யம் மிக்கவள்.