– முத்து.இரத்தினம்.தீபாவளி திருநாளில் மகாலட்சுமியை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். மகாலட்சுமி வழிபாடு பெருமாள் கோயில்களில் மட்டுமின்றி, சிவாலயங்களிலும் முக்கியத்துவம் பெறுகிறது. பெரும்பாலான கோயில்களில் கருவறை வாயிலின் உச்சியில் கஜலட்சுமி உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அந்த கஜலட்சுமிக்கு கருவறை வாசலைத் திறக்கும்போதும், அடைக்கும்போதும் மந்திரப்பூர்வமாக பூஜை செய்யப்படுகிறது..சிவாலயங்களில் நடைபெறும் கும்பாபிஷேகம் மற்றும் பிரம்மோத்ஸவத்திற்கு முன்னதாக தன பூஜை என்னும் பெயரில், 'லட்சுமி பூஜை' நடத்தப்படுகிறது. சிவாலயங்களில் கும்பாபிஷேகம் நடத்தும்போது யாகசாலையின் நான்கு புறமும் உள்ள நான்கு வாசல்களின் மேலும் மகாலட்சுமி, 'தோரண சக்தி'யாக வீற்றிருப்பாள். இவளை சாந்தி லட்சுமி, பூதி லட்சுமி, பல லட்சுமி, ஆரோக்கிய லட்சுமி என்று அழைப்பார்கள். யாக குண்டங்களின் வட மேற்கு திசையில் மகாலட்சுமியை கலசத்தில் எழுந்தருளச் செய்து பூஜிப்பர். இவளுக்கு, 'மண்டலரூப லட்சுமி' என்று பெயர்..சிவபெருமான் அமர்ந்திருக்கும் மகாகயிலாயத்தின் எட்டு திசைகளிலும், எட்டு வாசல்கள் உள்ளதாக சிவபுராணம் கூறுகிறது. இவற்றில் நான்கு பெரும் திசைகளான கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் உள்ள வாசல்களை முறையே ஸ்ரீதுவாரம், லட்சுமி துவாரம், வாருணி துவாரம், கீர்த்தி துவாரம் என்று அழைக்கின்றனர். இதிலுள்ள ஸ்ரீ, வாருணி, கீர்த்தி ஆகிய பெயர்கள் மகாலட்சுமியையே குறிக்கும்..ஒருமுறை லட்சுமி செய்த தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், பத்து கரங்களுடன் அவள் முன்பு தோன்றி நடனமாடினார். அந்தத் தாண்டவம், 'லட்சுமி தாண்டவம்' என்று அழைக்கப்படுகிறது. இதுபற்றி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புத்தூர் தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வூரில் திருமகள், சிறப்புடன் சிவனை வழிபட்டதால் அவளது பெயரால் இந்த ஆலயம், 'ஸ்ரீ தளி' என்றும், ஊர் திருப்புத்தூர் என்றும், திருக்குளத்திற்கு, 'ஸ்ரீ தளி லட்சுமி தீர்த்தம்' என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவ்வூர் மட்டுமின்றி, லட்சுமி தாயார், சிவபெருமானை திருவாரூர், மயிலாடுதுறை அருகிலுள்ள திருநின்றவூர், பனையூர் ஆகிய தலங்களிலும் வழிபட்டிருக்கிறாள். இவையும் லட்சுமி தலங்களாகக் கருதப்படுகின்றன. இவ்வூர்களில் உள்ள தீர்த்தங்களுக்கும், 'லட்சுமி தீர்த்தம்' என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. தீபாவளி, நவராத்திரி போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் இங்கே வந்து வழிபடுகின்றனர்..திருவாரூர் தியாகராஜப் பெருமானை திருமகள் வழிபட்டதாக தல புாரணம் கூறுகிறது. இதன் காரணமாக இக்கோயிலை, 'கமலாலயம்' என்று அழைக்கின்றனர். கோயில் முன்புள்ள திருக்குளத்திற்கும், 'கமலாலய குளம்' என்றே பெயர். 'கமலா' என்ற சொல்லுக்கு 'தாமரை' என்று பொருள். லட்சுமி தாமரையில் வீற்றிருப்பவள் என்பதால் அவளை, 'கமலா' என்பர். தியாகராஜப் பெருமான் வீற்றிருக்கும் கொலு மண்டபத்துக்குப் பின்புறமுள்ள கருவறையை, 'லட்சுமி வாசம்' என்று அழைக்கின்றனர்..சிவாலயம் ஒன்றில் வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமி பவனி நடைபெறுகிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளதல்லவா? இந்த லட்சுமி பவனியைக் காண வேண்டும் என்றால் திருவையாறு ஐயாறப்பர் கோயிலுக்குச் செல்ல வேண்டும். இங்கு வெள்ளிக்கிழமைகளில் உத்ஸவர் லட்சுமி அலங்கரிக்கப்பட்டு உட்பிராகாரத்தில் உலா வருகிறாள். இத்தகைய திருமகள் பவனி விழா வேறு எந்த சிவாலயங்களிலும் இல்லை..சிவபெருமானுக்கு பிரியமானதும், புனித இலைகளிலே சிறந்ததுமான வில்வ இலை, சிவ சொரூபமாகும். வில்வ மரத்தில் உள்ள முட்கள் சக்தியாகும். கிளைகள் வேதங்களாகும். வில்வ வேர் பதினோரு கோடி ருத்திரங்கள் ஆகும். இந்த வில்வமே மகாலட்சுமிக்கு உகந்த மரம். வில்வம் மகாலட்சுமியின் விருப்பத்துக்கு உகந்தது மட்டுமின்றி, வில்வ மரத்திலேயே மகாலட்சுமி குடிகொண்டிருக்கிறாள் என்ற தகவலும் உண்டு. லட்சுமி தேவியின் கரத்திலிருந்தே வில்வம் தோன்றியதாக, 'வாமன புராணம்' கூறுகிறது. வில்வத்தினால் பூஜித்தால் கொடிய வறுமை ஒழிந்து, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு செல்வ வளம் கொழிக்கும் என்று, 'ஸ்ரீசூக்தத்'தில் கூறப்பட்டுள்ளது..பூவுலகில் ஒரு தடவை அவதாரம் செய்த லட்சுமி, மகாவிஷ்ணுவை மீண்டும் அடைவதற்காக வில்வ மரக் காட்டிலே தவமிருந்தாள். சிவனருளால் அவள் மகாவிஷ்ணுவை அடைந்ததாக, 'காளிகா புராணத்தில்' சொல்லப்பட்டிருக்கிறது. பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலமான திருவஹிந்திரபுரம் என்ற தலத்தில் சிவனுக்குரிய வில்வத் தளங்களால் மகாலட்சுமிக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது..சதாசிவத்துடன் ஒன்றி நின்று இந்த உலகத்தை வாழ வைக்கும் அகிலாண்டேஸ்வரியின் அருளினால் லட்சுமி கடாட்சம் அனைவருக்கும் குறைவின்றிக் கிடைப்பதற்கும் வருங்காலத்தை முன்கூட்டியே உணருகின்ற அற்புதமான ஆற்றலைப் பெற்று வளமுடன் வாழவும் ஆதிசங்கரர், 'சௌந்தர்யலஹரி' மூலமாக லட்சுமி கடாட்சம் தரும் மூல மந்திரத்தை அருளியிருக்கிறார். சக்கர வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. அந்த வகையில் செல்வம் சேர மகாலட்சுமிக்கு சக்கர வழிபாடு மிக அவசியமானது. மகாலட்சுமியின் அருட்பார்வை ஒருவர் மீது விழுந்து விட்டால் அவருக்குச் செல்வ வளத்திற்குக் குறைவே இருக்காது. பொருட்செல்வம் வர ஆரம்பித்துவிட்டால் இதரச் செல்வங்களும் தானாகவே தேடி வரும்..சிவாலயங்களிலும் சரி, பெருமாள் ஆலயங்களிலும் சரி, லட்சுமி தாயாரை வணங்குபவர்கள் பல்வேறு விரதங்களை அனுஷ்டிக்கின்றனர். இதில் முதன்மை பெற்றது வரலட்சுமி விரதம். ஆடி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர். ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியும் லட்சுமி விரத நாளாகும். ஆவணி வளர்பிறை பஞ்சமியை, 'மகாலட்சுமி பஞ்சமி' என்று அழைக்கின்றனர். அன்று தொடங்கி அஷ்டமி வரை நான்கு நாட்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இதற்கு, 'மகாலட்சுமி நோன்பு' என்று பெயர்..புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை அஷ்டமி வரை பதினாறு நாட்கள் விரதமிருந்து மகாலட்சுமியை வழிபடுவது, 'க்ஷோடச லட்சுமி விரதம்' ஆகும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் பதினாறு வகை செல்வங்களையும் நிறைவாகப் பெற்று வாழலாம்..ஐப்பசி அமாவாசையன்று அல்லது தீபாவளிக்கு அடுத்த நாள் மகாலட்சுமி பூஜை செய்வது சிறப்பைத் தரும். தீபாவளி பண்டிகையோடு, மகாலட்சுமி பூஜை வட நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று புதுக்கணக்கு தொடங்குவதுண்டு. அதேபோல், ஐப்பசி பௌர்ணமியில் லட்சுமியை வழிபட்டால் செல்வம் சேரும் என்பர். கார்த்திகை மாத பஞ்சமியை, 'ஸ்ரீ பஞ்சமி' என்று அழைத்து, அன்று லட்சுமி பூஜை செய்கின்றனர்..ஒவ்வொரு மாதமும் வளர்பிறை திரிதியை திதிகளில் லட்சுமி பூஜை செய்வது செல்வத்தைப் பெருக்கும். குறிப்பாக, அட்சய திருதியை அன்று லட்சுமி வழிபாடு செய்வது பொன், பொருள் விருத்தியைப் பெற்றுத் தரும்.
– முத்து.இரத்தினம்.தீபாவளி திருநாளில் மகாலட்சுமியை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். மகாலட்சுமி வழிபாடு பெருமாள் கோயில்களில் மட்டுமின்றி, சிவாலயங்களிலும் முக்கியத்துவம் பெறுகிறது. பெரும்பாலான கோயில்களில் கருவறை வாயிலின் உச்சியில் கஜலட்சுமி உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அந்த கஜலட்சுமிக்கு கருவறை வாசலைத் திறக்கும்போதும், அடைக்கும்போதும் மந்திரப்பூர்வமாக பூஜை செய்யப்படுகிறது..சிவாலயங்களில் நடைபெறும் கும்பாபிஷேகம் மற்றும் பிரம்மோத்ஸவத்திற்கு முன்னதாக தன பூஜை என்னும் பெயரில், 'லட்சுமி பூஜை' நடத்தப்படுகிறது. சிவாலயங்களில் கும்பாபிஷேகம் நடத்தும்போது யாகசாலையின் நான்கு புறமும் உள்ள நான்கு வாசல்களின் மேலும் மகாலட்சுமி, 'தோரண சக்தி'யாக வீற்றிருப்பாள். இவளை சாந்தி லட்சுமி, பூதி லட்சுமி, பல லட்சுமி, ஆரோக்கிய லட்சுமி என்று அழைப்பார்கள். யாக குண்டங்களின் வட மேற்கு திசையில் மகாலட்சுமியை கலசத்தில் எழுந்தருளச் செய்து பூஜிப்பர். இவளுக்கு, 'மண்டலரூப லட்சுமி' என்று பெயர்..சிவபெருமான் அமர்ந்திருக்கும் மகாகயிலாயத்தின் எட்டு திசைகளிலும், எட்டு வாசல்கள் உள்ளதாக சிவபுராணம் கூறுகிறது. இவற்றில் நான்கு பெரும் திசைகளான கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் உள்ள வாசல்களை முறையே ஸ்ரீதுவாரம், லட்சுமி துவாரம், வாருணி துவாரம், கீர்த்தி துவாரம் என்று அழைக்கின்றனர். இதிலுள்ள ஸ்ரீ, வாருணி, கீர்த்தி ஆகிய பெயர்கள் மகாலட்சுமியையே குறிக்கும்..ஒருமுறை லட்சுமி செய்த தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், பத்து கரங்களுடன் அவள் முன்பு தோன்றி நடனமாடினார். அந்தத் தாண்டவம், 'லட்சுமி தாண்டவம்' என்று அழைக்கப்படுகிறது. இதுபற்றி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புத்தூர் தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வூரில் திருமகள், சிறப்புடன் சிவனை வழிபட்டதால் அவளது பெயரால் இந்த ஆலயம், 'ஸ்ரீ தளி' என்றும், ஊர் திருப்புத்தூர் என்றும், திருக்குளத்திற்கு, 'ஸ்ரீ தளி லட்சுமி தீர்த்தம்' என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவ்வூர் மட்டுமின்றி, லட்சுமி தாயார், சிவபெருமானை திருவாரூர், மயிலாடுதுறை அருகிலுள்ள திருநின்றவூர், பனையூர் ஆகிய தலங்களிலும் வழிபட்டிருக்கிறாள். இவையும் லட்சுமி தலங்களாகக் கருதப்படுகின்றன. இவ்வூர்களில் உள்ள தீர்த்தங்களுக்கும், 'லட்சுமி தீர்த்தம்' என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. தீபாவளி, நவராத்திரி போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் இங்கே வந்து வழிபடுகின்றனர்..திருவாரூர் தியாகராஜப் பெருமானை திருமகள் வழிபட்டதாக தல புாரணம் கூறுகிறது. இதன் காரணமாக இக்கோயிலை, 'கமலாலயம்' என்று அழைக்கின்றனர். கோயில் முன்புள்ள திருக்குளத்திற்கும், 'கமலாலய குளம்' என்றே பெயர். 'கமலா' என்ற சொல்லுக்கு 'தாமரை' என்று பொருள். லட்சுமி தாமரையில் வீற்றிருப்பவள் என்பதால் அவளை, 'கமலா' என்பர். தியாகராஜப் பெருமான் வீற்றிருக்கும் கொலு மண்டபத்துக்குப் பின்புறமுள்ள கருவறையை, 'லட்சுமி வாசம்' என்று அழைக்கின்றனர்..சிவாலயம் ஒன்றில் வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமி பவனி நடைபெறுகிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளதல்லவா? இந்த லட்சுமி பவனியைக் காண வேண்டும் என்றால் திருவையாறு ஐயாறப்பர் கோயிலுக்குச் செல்ல வேண்டும். இங்கு வெள்ளிக்கிழமைகளில் உத்ஸவர் லட்சுமி அலங்கரிக்கப்பட்டு உட்பிராகாரத்தில் உலா வருகிறாள். இத்தகைய திருமகள் பவனி விழா வேறு எந்த சிவாலயங்களிலும் இல்லை..சிவபெருமானுக்கு பிரியமானதும், புனித இலைகளிலே சிறந்ததுமான வில்வ இலை, சிவ சொரூபமாகும். வில்வ மரத்தில் உள்ள முட்கள் சக்தியாகும். கிளைகள் வேதங்களாகும். வில்வ வேர் பதினோரு கோடி ருத்திரங்கள் ஆகும். இந்த வில்வமே மகாலட்சுமிக்கு உகந்த மரம். வில்வம் மகாலட்சுமியின் விருப்பத்துக்கு உகந்தது மட்டுமின்றி, வில்வ மரத்திலேயே மகாலட்சுமி குடிகொண்டிருக்கிறாள் என்ற தகவலும் உண்டு. லட்சுமி தேவியின் கரத்திலிருந்தே வில்வம் தோன்றியதாக, 'வாமன புராணம்' கூறுகிறது. வில்வத்தினால் பூஜித்தால் கொடிய வறுமை ஒழிந்து, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு செல்வ வளம் கொழிக்கும் என்று, 'ஸ்ரீசூக்தத்'தில் கூறப்பட்டுள்ளது..பூவுலகில் ஒரு தடவை அவதாரம் செய்த லட்சுமி, மகாவிஷ்ணுவை மீண்டும் அடைவதற்காக வில்வ மரக் காட்டிலே தவமிருந்தாள். சிவனருளால் அவள் மகாவிஷ்ணுவை அடைந்ததாக, 'காளிகா புராணத்தில்' சொல்லப்பட்டிருக்கிறது. பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலமான திருவஹிந்திரபுரம் என்ற தலத்தில் சிவனுக்குரிய வில்வத் தளங்களால் மகாலட்சுமிக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது..சதாசிவத்துடன் ஒன்றி நின்று இந்த உலகத்தை வாழ வைக்கும் அகிலாண்டேஸ்வரியின் அருளினால் லட்சுமி கடாட்சம் அனைவருக்கும் குறைவின்றிக் கிடைப்பதற்கும் வருங்காலத்தை முன்கூட்டியே உணருகின்ற அற்புதமான ஆற்றலைப் பெற்று வளமுடன் வாழவும் ஆதிசங்கரர், 'சௌந்தர்யலஹரி' மூலமாக லட்சுமி கடாட்சம் தரும் மூல மந்திரத்தை அருளியிருக்கிறார். சக்கர வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. அந்த வகையில் செல்வம் சேர மகாலட்சுமிக்கு சக்கர வழிபாடு மிக அவசியமானது. மகாலட்சுமியின் அருட்பார்வை ஒருவர் மீது விழுந்து விட்டால் அவருக்குச் செல்வ வளத்திற்குக் குறைவே இருக்காது. பொருட்செல்வம் வர ஆரம்பித்துவிட்டால் இதரச் செல்வங்களும் தானாகவே தேடி வரும்..சிவாலயங்களிலும் சரி, பெருமாள் ஆலயங்களிலும் சரி, லட்சுமி தாயாரை வணங்குபவர்கள் பல்வேறு விரதங்களை அனுஷ்டிக்கின்றனர். இதில் முதன்மை பெற்றது வரலட்சுமி விரதம். ஆடி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர். ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியும் லட்சுமி விரத நாளாகும். ஆவணி வளர்பிறை பஞ்சமியை, 'மகாலட்சுமி பஞ்சமி' என்று அழைக்கின்றனர். அன்று தொடங்கி அஷ்டமி வரை நான்கு நாட்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இதற்கு, 'மகாலட்சுமி நோன்பு' என்று பெயர்..புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை அஷ்டமி வரை பதினாறு நாட்கள் விரதமிருந்து மகாலட்சுமியை வழிபடுவது, 'க்ஷோடச லட்சுமி விரதம்' ஆகும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் பதினாறு வகை செல்வங்களையும் நிறைவாகப் பெற்று வாழலாம்..ஐப்பசி அமாவாசையன்று அல்லது தீபாவளிக்கு அடுத்த நாள் மகாலட்சுமி பூஜை செய்வது சிறப்பைத் தரும். தீபாவளி பண்டிகையோடு, மகாலட்சுமி பூஜை வட நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று புதுக்கணக்கு தொடங்குவதுண்டு. அதேபோல், ஐப்பசி பௌர்ணமியில் லட்சுமியை வழிபட்டால் செல்வம் சேரும் என்பர். கார்த்திகை மாத பஞ்சமியை, 'ஸ்ரீ பஞ்சமி' என்று அழைத்து, அன்று லட்சுமி பூஜை செய்கின்றனர்..ஒவ்வொரு மாதமும் வளர்பிறை திரிதியை திதிகளில் லட்சுமி பூஜை செய்வது செல்வத்தைப் பெருக்கும். குறிப்பாக, அட்சய திருதியை அன்று லட்சுமி வழிபாடு செய்வது பொன், பொருள் விருத்தியைப் பெற்றுத் தரும்.